ஜான் எஃப். கென்னடி
ஜான் எஃப். கென்னடி அல்லது ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி (John Fitzgerald Kennedy; மே 29, 1917 - நவம்பர் 22, 1963), ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர்.
ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி John Fitzgerald Kennedy | |
---|---|
![]() | |
ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் ஜனவரி 20, 1961 – நவம்பர் 22, 1963 | |
துணை குடியரசுத் தலைவர் | லின்டன் ஜோன்சன் |
முன்னவர் | டுவைட் ஐசன்ஹோவர் |
பின்வந்தவர் | லின்டன் ஜோன்சன் |
United States Senator from மசாசுசெட்ஸ் | |
பதவியில் ஜனவரி 3, 1953 – டிசம்பர் 22, 1960 | |
முன்னவர் | ஹென்றி சபொட் லொட்ஜ், இளையவர் |
பின்வந்தவர் | பெஞ்சமின் ஸ்மித் |
உறுப்பினர், கீழவை (ஐக்கிய அமெரிக்கா) மசாசுசெட்ஸ்யின் 11வது காங்கிரஸ் மாவட்டத்திலிருந்து | |
பதவியில் 1947 – 1953 | |
முன்னவர் | ஜேம்ஸ் மைக்கல் கேர்லி |
பின்வந்தவர் | தாமஸ் பி. ஓ’நீல், இளையவர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மே 29, 1917 புரூக்ளின் |
இறப்பு | நவம்பர் 22, 1963 46) டெக்சாஸ் | (அகவை
அரசியல் கட்சி | ஜனநாயகக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஜாக்குலின் கென்னடி |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஹாவார்ட் பல்கலைக்கழகம் |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
கையொப்பம் | ![]() |
இரண்டாம் உலகப் போரின் போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார். மசாசுசெட்ஸ் மாநிலத்திற்கு 1947 முதல் 1953 வரை அமெரிக்க கீழவை (House) உறுப்பினராக ஜனநாயகக் கட்சி சார்பில் தெரிவானார். மேலவை (செனட்) உறுப்பினராக 1953 முதல் 1961 வரை இருந்தார். 1960 இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் உதவி ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான ரிச்சார்ட் நிக்சனைத் தோற்கடித்தார். புலிட்சர் விருது பெற்ற ஒரேயொரு அமெரிக்கத் தலைவர் இவரே ஆவார்[1]. இவரது அரசு கியூபாவின் ஏவுகணை விவகாரம், பேர்லின் சுவர் கட்டப்பட்டமை, விண்வெளி ஆய்வுப் போட்டி, அமெரிக்க குடியுரிமை விவகாரம் (1955–1968), வியட்நாம் போரின் ஆரம்பம் போன்ற நிகழ்வுகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.
நவம்பர் 22, 1963 இல் டெக்சாஸ், டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவன் கொலைக்குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதானான். ஆனால் இவன் இரண்டு நாட்களின் பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு முன்னரேயே “ஜாக் ரூபி” என்பவனால் கொல்லப்பட்டான். கொலை விசாரணையை நடத்திய “வாரன் கமிஷன்” ஒஸ்வால்ட் என்பவன் வேறொரு உதவியுமின்றி தனித்தே கென்னடியைச் சுட்டுக் கொன்றதாக தெரிவித்தது. ஆனாலும், 1979 இல் அரசியல் கொலைகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட கீழவை சிறப்பு விசாரணைக் குழு இக்கொலைக்கு அரசியல் பின்னணி இருந்திருக்கலாம் என்பதாகத் தெரிவித்தது[2]. இக்கொலைக்கான பின்னணி இதுவரையில் அறியப்படவில்லை.
மேற்கோள்கள்
- Pulitzer.org FAQ
- American Experience: John F. Kennedy, PBS. Retrieved on February 25 2007