இந்தியாவில் உள்ள கத்தோலிக்க பெருங்கோவில்கள்
இது இந்தியாவில் உள்ள கத்தோலிக்க பெருங்கோவில்களின் முழு பட்டியல் ஆகும். பெருங்கோவில் அல்லது பேராலயம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் ஆலயங்கள் சிலவற்றிற்கு அளிக்கப்படும் பட்டமாகும். திருச்சபைச் சட்டப்படி திருப்பீடத்தாலோ அல்லது மிகவும் பழைய மரபின் அடிப்படையிலோ மட்டுமே இப்பட்டம் வழங்கப்பட இயலும்.[1] இப்பட்டமானது குறிக்கத்தக்க திருப்பயணியரின் வருகையைக்கொண்டுள்ள மிகவும் பெரிய ஆலயங்களோ அல்லது புனிதர்களோடு தனிப்பட்ட தொடர்புடைய ஆலயங்களுக்கோ மட்டுமே வழங்கப்படும். இவ்வகை ஆலயங்கள் இருவகைப்படும். இளம் பெருங்கோவில்கள் (minor basilica) மற்றும் உயர் பெருங்கோவில்கள் (major basilica). உலகில் நான்கு உயர் பெருங்கோவில்கள் மட்டுமே உள்ளன. அவையனைத்தும் உரோமையில் உள்ளன என்பதும் குறிக்கத்தக்கது. அவை இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம், புனித பேதுரு பேராலயம், புனித பவுல் பேராலயம் மற்றும் புனித மரியா பேராலயம். இவை தவிர இந்தியா உட்பட உலகின் பிற பெருங்கோவில்கள் அனைத்தும் இளம் பெருங்கோவில்களாம்.
இந்தியாவில் மொத்தம் 21 பெருங்கோவில்கள் உள்ளன. அவற்றும் 17 இலத்தீன் வழிபாட்டு முறையினையும், 3 சீரோ-மலபார் வழிபாட்டு முறையினையும் மற்றும் 1 சீரோ-மலங்கரா வழிபாட்டு முறையினையும் சேர்ந்தது. இந்தியாவில் அதிக பெருங்கோவில்களைக்கொண்ட மாநிலம் கேரளம். 8 பெருங்கோவில்கள் கேரளத்தில் அமைந்துள்ளது. அதற்கு அடுத்து தமிழ்நாட்டில் 5 பெருங்கோவில்கள் உள்ளன. ஆசியா கண்டத்திலேயே அதிக கத்தோலிக்க பெருங்கோவில்களைக்கொண்ட நாடு இந்தியாவாகும்.[2]
பெருங்கோவில்களின் பட்டியல்
மேற்கோள்கள்
- Robert F. McNamara, Minor Basilicas in the United States
- List of Indian basilicas from GCatholic.org
- "Pro-cathedral gets basilica status", The Hindu, 11 November 2008
- Staff Reporter "Arthunkal church declared basilica", The Hindu, October 12, 2010, accessed December 27, 2010.
- Staff Reporter "Basilica status for Pallippuram church", The Hindu, August 28, 2012, accessed August 29, 2012