இந்தியப் பொதுத் தேர்தல், 1957

இந்தியக் குடியரசின் இரண்டாம் நாடாளுமன்றத் தேர்தல் 1957 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு இரண்டாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியில்ர்ருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி 371 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைத்தது. ஜவகர்லால் நேரு மூன்றாம் முறையாக பிரதமரானார்.

இந்தியப் பொதுத் தேர்தல், 1957

1957

மக்களவைக்கான 494 இடங்கள்
  First party Second party
 
தலைவர் ஜவகர்லால் நேரு ஸ்ரீபத் அம்ரீத் டாங்கே
கட்சி காங்கிரசு இந்திய கம்யூனிஸ்ட்
தலைவரின் தொகுதி ஃபூல்பூர் மத்திய மும்பை நகரம்
வென்ற தொகுதிகள் 371 27
மாற்றம் +7 +11
மொத்த வாக்குகள் 57,579,589 10,749,475
விழுக்காடு 47.78 8.92

முந்தைய இந்தியப் பிரதமர்

ஜவகர்லால் நேரு
காங்கிரசு

இந்தியப் பிரதமர்

ஜவகர்லால் நேரு
காங்கிரசு

பின்புலம்

இத்தேர்தலில் 403 தொகுதிகளில் இருந்து 494 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 312 ஒற்றை உறுப்பினர் தொகுதிகள். 91 தொகுதிகளிலிருந்து தலா இரண்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர 2 ஆங்கிலோ இந்தியர்களும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யபட்டனர். காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) இருந்தது. வேறு சில கட்சிகளும் காங்கிரசை எதிர்த்தன. ஆனால் பதினோறு ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த காங்கிரசும் நேருவும் செல்வாக்கின் உச்சியில் இருந்தனர். எளிதாக சென்ற தேர்தலில் வென்றதை விட கூடுதல் வாக்குகளையும் இடங்களையும் வென்றனர்.

முடிவுகள்

மொத்தம் 45.44 % வாக்குகள் பதிவாகின

கட்சி % இடங்கள்
காங்கிரசு47.78371
சுயேட்சைகள்19.3242
இந்திய பொதுவுடமைக் கட்சி8.9227
பிரஜா சோசலிசக் கட்சி10.4119
கணதந்திர பரஷத்1.077
ஜார்கண்ட் கட்சி0.626
பட்டியல் ஜாதிகள் ஜூட்டமைப்பு1.696
பாரதிய ஜனசங்கம்5.974
இந்திய குடியானவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி0.774
சோட்டா நாக்பூர் சாந்தல் பர்கனாஸ் ஜனதா கட்சி0.423
பார்வார்டு ப்ளாக் (மார்க்சியம்)0.552
மக்கள் ஜனநாயக முன்னணி0.872
இந்து மகாசபா0.861
மொத்தம்100494

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.