முதல் நாட் போர் (குருச்சேத்திரப் போர்)

மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் முதல் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்

கௌரவர் அணியில் துச்சாதனன், படை முன்னணியில் சென்றான்; பாண்டவர் அணியில் பீமன், படை முன்னணியில் சென்றான். இருபக்கத்துப் படை வீரர்களுக்குள் வயதில் சிறியவனான அபிமன்யு, அனைவரிலும் மூத்தவரான வீடுமரை எதிர்த்துப் போரிட்டான். முதல் நாட் போரில் பாண்டவர்களின் அணி மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. தருமன் பயந்தான்; துரியோதனன் மகிழ்ச்சியிற் திளைத்தான். "என்ன செய்வோம்?" என கிருஷ்ணனிடம் ஆலோசனை கேட்ட பாண்டவர்களின் மனதை கிருஷ்ணன் தேற்றினான்.

நிகழ்ந்த மரணங்கள்

1. விராடனுடைய மகன் உத்தரன்
2. விராடனுடைய இரண்டாம் மகன் சுவேதன்

உசாத்துணை

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.