ஏழாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)

மகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் ஏழாம் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்

ஏழாம் நாளின் காலையில் பீஷ்மர், கௌரவர் படையை மண்டல வியூகமாக அணிவகுத்தார். பாண்டவர் அணியை தருமர், வச்சிர வியூகமாக அணிவகுத்தார்.

அன்று நடந்த போரில் அநேக முனைகளில் பெரும்மோதல்கள் நடைபெற்றன. கீழ்காணும் வகையில் போர் நடைபெற்றது:
பீஷ்மர் - அருச்சுனன்
துரோணர்விராடன்
அசுவத்தாமன் - சிகண்டி
துரியோதனன்திருட்டத்துயும்னன்
நகுல- சகாதேவர்கள்சல்லியன்
அவந்தி தேச மன்னர்கள் – யுதாமன்யு
பீமன்கிருதவர்மன், சித்திரசேனன், விகர்ணன், துர்மஷன்
கடோற்கஜன்பகதத்தன்
அலம்பசன் – சாத்தியகி
புரிசிரவசு – திருஷ்ட கேது
தருமர் – சுருதாயு
சேகிதானன் – கிருபர்

நாளின் இறுதியில் எல்லோரும் மிகக் களைப்படைந்து காயங்களால் துன்பப்பட்டு பாசறைகள் போய்ச் சேர்ந்தார்கள்.

நிகழ்ந்த முக்கிய மரணங்கள்

போர்க்களத்துக்கு வெளியே நிகழ்ந்த நிகழ்வுகள்

இருதரப்பு வீரர்களும் உடலில் தைத்திருந்த அம்புகளைப் பிடுங்கி, வைத்திய முறைப்படி காயங்களைக் கழுவி இளைப்பாறினார்கள். எல்லோரும் இசை வாத்தியங்களைக் கேட்டுக் கொண்டு உல்லாசமாக பொழுது போக்கினார்கள். அத்தருணத்தில் போர் குறித்து வார்த்தை ஒன்றும் பேசாமல் கழிக்கப்பட்டது என்கிறார் வியாசர்.

உசாத்துணை

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.