மிகிந்தலை அருங்காட்சியகம்

மிகிந்தலை தொல்பொருள் நூதனசாலை அல்லது மிகிந்தலை தொல்பொருள் அருங்காட்சியகம் (Mihintale Archaeological Museum) என்பது இலங்கையின் மிகிந்தலையில் அமைந்துள்ள தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும்.[1] இவ்வருங்காட்சியகம் 1984 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இவ்வருங்காட்சியகம் இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.[2] மிகிந்தலை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களே இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெண்கலத்தினாலான சிறு உருவச்சிலைகள், புராதன காலத்தில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், சுதை ஓவியங்களினதும் வர்ணந் தீட்டப்பட்ட ஓவியங்களினதும் எச்சங்கள் ஆகியவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க பொருட்களாகும். அத்துடன் 9 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஓலைச்சுவடி,[3] பௌத்த ஆலயம் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நினைவு சின்னப் பேழை ஒன்றின் மாதிரி[4] ஆகியவையே இத்தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காணப்படும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிப்பொருட்கள்.

மிகிந்தலை தொல்பொருள் அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது1984
அமைவிடம்மிகிந்தலை, இலங்கை
வகைதொல்பொருள்
வலைத்தளம்http://www.archaeology.gov.lk

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Mihintale Museum (Site)". archaeology.gov.lk. பார்த்த நாள் 3 July 2015.
  2. "Modernised Mihintale museum opened". dailynews.lk (18 December 2012). பார்த்த நாள் 3 July 2015.
  3. "Mihintale Museum". srilankatravelogue.com. பார்த்த நாள் 3 July 2015.
  4. "The Mihintale Museum". mysrilankaholidays.com. பார்த்த நாள் 3 July 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.