கொழும்பு துறைமுக சமுத்திர நூதனசாலை

கொழும்பு துறைமுக சமுத்திர நூதனசாலை அல்லது இலங்கைத் துறைமுக அதிகார சபையின் சமுத்திர நூதனசாலை என்பது இலங்கையின் கொழும்புத் துறைமுகத்த்டன் இணைந்துள்ள நூதனசாலை ஆகும். இச் சமுத்திர நூதனசாலையான்து இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் பராமரிக்கப்படுகின்றது. கொழும்புத் துறைமுகப் பிரதேசத்தில் எஞ்சியிருக்கும் ஒரேயொரு இடச்சுக் கட்டடமும் 1676 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதுமான ஒரு இடச்சுச் சிறைச்சாலையிலேயே இந்நூதனசாலை அமைந்துள்ளது.[1] துறைமுகங்கள், மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சராக இருந்த மு. ஹு. மு. அஷ்ரப் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைவாகவும் 25 மில்லியன் ரூபாய்[2] பெறுமதிவாய்ந்த விமானம் ஒன்றைக் காட்சிப்படுத்துவத்ற்காகவும் இக்கட்டடம் மீள்புதுப்பிக்கப்பட்டது. ஆகத்து 2003 இல் அப்போதைய துறைமுக அபிவிருத்தி, முஸ்லிம் விவகாரம், கிழக்கு மாகாண அபிவிருத்தி ஆகியவற்றுக்கான அமைச்சரான ரவூம் ஹக்கீமினால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.[3]

இலங்கைத் துறைமுக அதிகார சபையின் சமுத்திர நூதனசாலை
நிறுவப்பட்டதுஆகத்து, 2003
வகைசமுத்திர வரலாறு

மேற்கோள்கள்

  1. Coombe, Juliette (28 March 2014). "A Walk Through Old Colombo". Ceylon Today. http://www.ceylontoday.lk/18-60014-news-detail-a-walk-through-old-colombo.html. பார்த்த நாள்: 3 June 2015.
  2. "SLPA Maritime Museum opened daily". Daily News. 16 August 2003. http://archives.dailynews.lk/2003/08/16/bus02.html. பார்த்த நாள்: 3 June 2015.
  3. Satyapalan, Franklin R. (6 August 2003). "Port ready to meet global changes in container transportation". The Island. http://www.island.lk/2003/08/06/news11.html. பார்த்த நாள்: 3 June 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.