பெருந்தெருக்கள் நூதனசாலைத் தொகுதி, கிரிபத்கும்புறை

பெருந்தெருக்கள் நூதனசாலைத் தொகுதி, பெருந்தெருக்கள் அருங்காட்சியகத் தொகுதி அல்லது நெடுஞ்சாலை நூதனசாலைத் தொகுதி என்பது இலங்கையின் முதலாவது நெடுஞ்சாலை நூதனசாலையாகும். இது கண்டியிலுள்ள கிரிபத்கும்புறையில் அமைந்துள்ளது. இதனை வீதி அபிவிருத்தி அதிகார சபை பராமரிக்கின்றது.

பெருந்தெருக்கள் நூதனசாலைத் தொகுதி
பெருந்தெருக்கள் நூதனசாலையில் உள்ள நீராவி உருளை
நிறுவப்பட்டது1986[1]
அமைவிடம்கிரிபத்கும்புறை, கண்டி
வகைநெடுஞ்சாலை வரலாறு

நூதனசாலையில் முன்பு பாவனையில் இருந்த கட்டுமான உபகரணங்களான கல்வீதி உருளைகள், நீராவி வீதி உருளைகள், தார் வீதி உருளைகள், தார் கொதி கலன்கள், நிலக்கரி அளவு கருவிகள், வீதி குறியீடுகள், போகொட மரப் பாலம் மாதிரி ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[2] இவற்றில் சில உபகரணங்கள் 175 வருடங்களுக்கு மேலானவை எனக் கூறப்படுகின்றது.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. "Sri Lanka's first Highways Museum now idles". Asian Tribune. பார்த்த நாள் 31 மே 2015.
  2. "Highway history". Nations. பார்த்த நாள் 31 May 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.