விண்மீன் கோட்டை, மாத்தறை
விண்மீன் கோட்டை (Star Fort) என்பது நிலவை கங்கையின் கிழக்குக் கரையில் மாத்தறைக் கோட்டையின் வாயிலுக்கு சுமார் 350 மீட்டர்கள் (1,150 ft) தொலைவில் அமைந்துள்ள கோட்டையாகும். விண்மீன் கோட்டை 1765 இல் ஒல்லாந்தரால் கட்டப்பட்டது.
விண்மீன் கோட்டை | |
---|---|
பகுதி: மாத்தறை | |
மாத்தறை | |
![]() | |
நுழை வாயில் | |
![]() ![]() விண்மீன் கோட்டை | |
ஆள்கூறுகள் | 5°56′53″N 80°32′54″E |
வகை | பாதுகாப்புக் கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | இலங்கை அரசாங்கம் |
மக்கள் அநுமதி |
ஆம் |
நிலைமை | நன்று |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1763–65 |
கட்டியவர் | நெதர்லாந்து |
கட்டிடப் பொருள் |
கருங்கற்பாறைகள், பவளப்பாறை |
1640 இல், ஒல்லாந்தர் பிரதான கோட்டையை மாத்தறையில் கட்டி முடித்தனர். ஆயினும் நிலப்பகுதியில் இருந்து வரும் தாக்குதலை எதிர்கொள்வதில் பலவீனமாக இருந்தது. 1762 இல் கண்டி அரசினால் உதவியளிக்கப்பட்ட சிங்களப் படைகள் இதனைத் தாக்கி, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.[1] ஒல்லாந்தர் இதனை 1763 இல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதே வருடம் ஒரு சிறிய கோட்டையை நிலவை கங்கையின் கிழக்குக் கரையில், இக்கோட்டையின் பாதுகாப்பிற்காக அமைத்தனர்.
உசாத்துணை
- Kulatunge, Manuri (30 June 2013). "How the Dutch Fortified Matara with Star Fort". The Nation. http://www.nation.lk/edition/fine/item/18794-how-the-dutch-fortified-matara-with-star-fort.html. பார்த்த நாள்: 15 August 2014.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.