மாதுரு ஓயா தேசிய பூங்கா

மாதுரு ஓயா தேசிய பூங்கா (Maduru Oya National Park) என்பது இலங்கையிலுள்ள ஒரு தேசியப் பூங்காவாகும். இது மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழும் மாதுரு ஓயா நீர்த்தேக்க நீரேந்து பிரதேச செயற்பாட்டின் கீழும் உருவாக்கப்பட்டது. இது பூங்காவாக 1983 நவம்பரில் அறிவிக்கப்பட்டது.[2] இது வன உயிரினங்களின் சரணாலயமாக குறிப்பாக யானைகளின் சரணாலயமாக காணப்படுகின்றது. இது ஐந்து நீர்த்தேக்க நீரேந்து பகுதிகளை பாதுகாக்கவும் முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கையின் சுதேசிய இனக் குழுவான வேடுவர் சமூகம் இங்குள்ள கெனனிகலை எனுமிடத்தில் வாழ்கின்றனர்.[3] இப்பூங்கா கொழும்பிலிருந்து வடகிழக்கில் 288 கிலோமீட்டர்கள் (179 mi) தொலைவில் அமைந்துள்ளது.

மாதுரு ஓயா தேசிய பூங்கா
Maduru Oya National Park
மாதுரு ஓயா தேசிய பூங்காவில் காணப்படும் இலங்கை யானைகள்
Location of Maduru Oya National Park
அமைவிடம்கிழக்கு மாகாணம் மற்றும் ஊவா மாகாணம், இலங்கை
கிட்டிய நகரம்பொலன்னறுவை
ஆள்கூறுகள்7°34′33″N 81°08′34″E
பரப்பளவு58,850 எக்டேர்கள் (227.2 sq mi)[1]
நிறுவப்பட்டது1983
நிருவாக அமைப்புவனவுயிர் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை

குறிப்புக்கள்

  1. The national Atlas of Sri Lanka. Department of Survey. 2007. பக். 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-9059-04-1.
  2. Green, Michael J. B. (1990). IUCN directory of South Asian protected areas. IUCN. பக். 228–231. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-8317-0030-4. http://www.archive.org/details/iucndirectoryofs90gree.
  3. "Reservoirs of Maduru Oya National Park". Sri Lanka Wetlands Information and Database. IWMI (2006). பார்த்த நாள் 28 August 2010.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.