புருசா மிருகம்

புருசா மிருகம் என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் மனித முகமும், சிங்க உடலும் கொண்ட மிருகமாகும். இம்மிருகம் சிவபெருமானின் பெரும் பக்தனாகவும், குபேர வனத்தினை பாதுகாக்கும் செயலை செய்து வருவதாகவும் புராணக் கதைகள் கூறுகின்றன.

புருசா மிருக வாகனம் சைதாப்பேட்டை காரணீசுவரர் கோயில்

சிவாலயங்களில்

சிவாலயங்களில் புருசா மிருக வாகனத்தில் சிவபெருமான் வீதியுலா வருகிறார். மேலும் சிவாலய வழிபாட்டிற்கு பயன்படும் பதினாறு வகையான தீபங்களில் ஒன்றாக புருசா மிருக தீபம் உள்ளது.[1]

திருவாதவூரில் புருசா மிருக தீர்த்தம் அமைந்துள்ளது. பிரம்ம தேவர் வாழும் சத்தியலோகத்தலிருந்து சிவலிங்கத்தினை திருமழபாடியில் புருசா மிருகம் பிரதிஸ்ட்டை செய்து வழிபட்டதாக திருமழப்பாடி சிவன் கோயில் தலவரலாறு குறிப்பிடுகிறது. [2]

புதினங்கள்

எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் குபேரவன காவல் என்ற புதினம் இந்த புருசா மிருகத்தின் தொன்மத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

இவற்றையும் காண்க


ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. http://www.penmai.com/forums/miscellaneous-spirituality/36750-deepangal-16-16-a.html
  2. http://218.248.16.19/slet/l4100/l4100pd2.jsp?bookid=115&pno=321

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.