நீல பத்மநாபன்

நீல பத்மநாபன் என்னும் நீலகண்டப்பிள்ளை பத்மநாபன் (பிறப்பு: ஏப்ரல் 26, 1938,[1] கன்னியாகுமரி மாவட்டம்), தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.[2][3][4][5][6][7]. இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன.

பிறப்பு

நீல பத்மநாபன் கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 1938 ஏப்ரல் 26 ஆம் நாள் நீலகண்டப்பிள்ளை - சானகி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.[1]

கல்வி

நீல பத்மநாபன் நாலாஞ்சிறை எனும் இடத்திலிருந்த மார் இவானியேஸ் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் (Intermediate) தேறினார்.[8] கேரளப் பல்கலைக் கழகக் கல்லூரியில் 1956 - 58 ஆம் கல்வி ஆண்டுகளில் இயற்பியல் பயின்று அறிவியல் இளவர் (BSc.) பட்டம் பெற்றார்.[8] பின்னர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து மின்பொறியியலில் அறிவியல் இளவர் பட்டம் (B.Sc. Electrical Engineering) பெற்றவர்.[1]

பணி

நீல பத்மநாபன் கல்லூரியில் இளவர் பட்டத்திற்குப் பயிலும்பொழுதே, கேரள பணியாளர் தேர்வாணையத் தேர்வை எழுதி வெற்றி பெற்றிருந்தார். எனவே கல்லூரிக் கல்வி முடிந்ததும் திருச்சூரில் அரசு அலுவலகம் ஒன்றில் சில காலம் பணியாற்றினார். தந்தை வற்புறுத்தலினால் அவ்வேலையைத் துறந்து பொறியியல் படிக்கச் சென்றார்.[8]

1963ஆம் ஆண்டில் கேரள மாநில மின்வாரியத்தில் இளநிலை மின்பொறியாளராகப் (Junior Engineer) பணியிற் சேர்ந்தார். படிப்படியாக உயர்ந்து 1993 ஆம் ஆண்டில் துணை முதன்மைப் பொறியாளராக (Deputy Cheif Engineer) பணி ஓய்வு பெற்றார்.[1]

குடும்பம்

நீல பத்மநாபன் கிருட்டிணம்மாள் என்பவரை மணந்து சானகி, உமா, நீலகண்டன், கவிதா என்னும் நான்கு மக்களை ஈன்றார்.[1]

படைப்புகள்

"கதைக் கருவைத்தேடி நான் ஒரு போதும் அலைந்திருக்கவில்லை. ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில், ஏனோ ஒரு சொல்லத்தெரியாத தன்மையில் சிலிர்த்துப்போய் நேரிலும் காணும், சொல்லிக்கேட்கும் சில கருத்துக்களை மட்டும் என் மனம் சுவீகரித்துக் கொள்கிறது. உதறினாலும் விலகாமல் உள்ளத்தில் இறுகப்பற்றிக்கொள்ளும் இந்தக்கரு தன்னை எடுத்தாள என்னை விடாப்பிடியாக நிர்பந்திக்கிறது. இரும்பு இதயம் படைத்தவர்களுக்காக நான் எழுதவில்லை. காரணம் எனக்கு இரும்பு இதயம் இல்லை என்பதுதான், என்னைப்போல் சாதாரண ஆசை நிராசைகள் கொண்ட சாதாரண மனித ஜீவிகளுடன் என் பிரச்னைகள், உணர்ச்சிகளை, வியப்புகளை ,வெறுப்புகளை பரிமாறிக்கொள்ளவே நான் எழுதுகிறேன்" என்று நீல பத்மநாபன் தன்னைப் பற்றி குறிப்பிட்டதுண்டு.

புதினங்கள்

வரிசை எண்ஆண்டுநூலின் பெயர்புதினம்பதிப்பகம்குறிப்பு
011968தலைமுறைகள்1. தலைமுறைகள்ஜெயக்குமாரி ஸ்டோர், நாகர்கோவில்
021970பள்ளிகொண்டபுரம்2. பள்ளிகொண்டபுரம்ஜெயக்குமாரி ஸ்டோர், நாகர்கோவில்
031973பைல்கள்3. பைல்கள்ஜெயக்குமாரி ஸ்டோர், நாகர்கோவில்
041975உறவுகள்4. உறவுகள்ஜெயக்குமாரி ஸ்டோர், நாகர்கோவில்
051976மின் உலகம்5. மின் உலகம்
061978நேற்று வந்தவன்6. நேற்று வந்தவன்
071980உதய தாரகை7. உதய தாரகை
081980வட்டத்தின் வெளியே8. வட்டத்தின் வெளியே
091981பகவதி கோயில் தெரு9. பகவதி கோயில் தெரு
101985போதையில் கரைந்தவர்கள்10. போதையில் கரைந்தவர்கள்
11. தீ தீ
12. முறிவுகள்
111987தேரோடும் வீதி13. தேரோடும் வீதிதன்வரலாற்றுப் புதினம்
121991பாவம் செய்யாதவர்கள்14. பாவம் செய்யாதவர்கள்
131994வெள்ளம்15. வெள்ளம்
141995கூண்டினுள் பட்சிகள்16. கூண்டினுள் பட்சிகள்
151997யாத்திரை அனுபவங்கள் சமர்17. யாத்திரை
18. அனுபவங்கள்
19. சமர்
முத்துப்பதிப்பகம், மதுரை
162005இலை உதிர் காலம்20. இலை உதிர் காலம்சாதிக்யா அகாதெமி விருது பெற்றது.

2004 ஆம் ஆண்டில் மேற்கண்ட அனைத்துப் புதினங்களும் அடங்கிய தொகுப்பு நீல பத்மநாபனின் நாவல்கள் என்னும் தலைப்பில் வெளிவந்தது.

சிறுகதைகள்

வரிசை எண்ஆண்டுநூலின் பெயர்இடம்பெற்றுள்ள சிறுகதைகள்பதிப்பகம்
011969மோகம் முப்பது ஆண்டு11 சிறுகதைகள்
021972சண்டையும் சமாதானமும்11 சிறுகதைகள்
031974மூன்றாவது நாள்11 சிறுகதைகள்
041978இரண்டாவது முகம்19 சிறுகதைகள்
051978நாகம்மாவா?15 சிறுகதைகள்முத்துப்பதிப்பகம், மதுரை
061978சிறகடிகள்13 சிறுகதைகள்
071985சத்தியத்தின் சந்நிதியில்15 சிறுகதைகள்
081988வான வீதியில்18 சிறுகதைகள்
091998அவரவர் அந்தரங்கம்11 சிறுகதைகள்
102008பிறவிப் பெருங்கடல்
112012கொட்டாரம்என்னைப்போல் இருவர்
ரெளத்திரம்
நொண்டிப் புறா
பூஜை அறை
பகை
கொட்டாரம்
வானதி பதிப்பகம், சென்னை

2000 ஆம் ஆண்டு வரை இவரால் எழுதப்பட்ட சிறுகதைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு நீல பத்மநாபன் கதைகள் என்னும் பெயரில் (2000ஆம் ஆண்டு வெளிவந்தது.

கவிதைகள்

வரிசை எண்ஆண்டுநூலின் பெயர்இடம்பெற்றுள்ள கவிதைகள்பதிப்பகம்
011975நீல பத்மநாபன் கவிதைகள்எழுத்து, சென்னை
021984நா காக்க
031993பெயரிலென்ன

2003ஆம் ஆண்டு வரை இவரால் எழுதப்பட்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பு நீல பத்மநாபனின் 148 கவிதைகள் என்னும் தலைப்பில் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

கட்டுரைகள்

வரிசை எண்ஆண்டுநூலின் பெயர்இடம்பெற்றுள்ள கட்டுரைகள்பதிப்பகம்
011978சிதறிய சிந்தனைகள்17 கட்டுரைகள்அகரம், சிவகங்கை
021988இலக்கியப் பார்வைகள்13 கட்டுரைகள்அமிழ்தம் பதிப்பகம், வேலூர்
031991சமூகச் சிந்தனை18 கட்டுரைகள்அமிழ்தம் பதிப்பகம், வேலூர்
041993யாரிடமும் பகையின்றி21 கட்டுரைகள்அமிழ்தம் பதிப்பகம், வேலூர்
051997வாழ்வும் இலக்கியமும்14 கட்டுரைகள்அமிழ்தம் பதிப்பகம், வேலூர்
062001நவீன இலக்கியம் - சில சிந்தனைகள்18 கட்டுரைகள்அமிழ்தம் பதிப்பகம், வேலூர்
072003இன்றைய இலக்கியச் செல்நெறிகள்30 கட்டுரைகள்இராசராசன் பதிப்பகம், சென்னை 17
082006ஐயப்ப பணிக்கரின் ஆளுமையும் சில படைப்பு மாதிரிகளும்விருட்சம், சென்னை
092008உணர்வுகள் சிந்தனைகள்137 கட்டுரைகள்நீயு செஞ்சுரி புக் அவுசு, சென்னை
102010பார்வைகள் மறுபார்வைகள்

2005 ஆம் ஆண்டு வரை இவர் எழுதிய கட்டுரைகள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு நீல பத்மநாபனின் கட்டுரைகள் என்னும் தலைப்பில் 2005 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

நாடகத் தொகுதி

  1. தனிமரம் 2009

திரட்டுநூல்

  1. குரு சேத்திரம் - 1976

மொழிபெயர்த்துத் தொகுத்தவை

  1. தற்கால மலையாள இலக்கியம் - 1985, நர்மதா பதிப்பகம், சென்னை.
  2. மதிலுகள் - நவீன மலையாள இலக்கியம் 2000, காவ்யா, சென்னை.
  3. ஐயப்பப் பணிக்கரின் கவிதைகள் - 1999
  4. ஐயப்பப் பணிக்கரின் கோத்ர யானம் 2002

மலையாள மொழிப் படைப்புகள்

புதினங்கள்

  1. பந்தங்கள் - 1979
  2. மின் உலகம் - 1980
  3. தலைமுறைகள் - 1981
  4. பள்ளிகொண்டபுரம் - 1982
  5. தீ தீ, 1990, டி.சி. புக்சு, கோட்டயம்

சிறுகதைகள்

வரிசை எண்ஆண்டுநூலின் பெயர்இடம்பெற்றுள்ள சிறுகதைகள்பதிப்பகம்
011980கதைகள் இருபதுஇருபது கதைகள்கரண்ட் புக்சு, கோட்டயம்
021987எறும்புகள்இருபது கதைகள்கரண்ட் புக்சு, கோட்டயம்
031997அர்கண்ட் கோனில்இருபது கதைகள்கரண்ட் புக்சு, கோட்டயம்
042003வேறத்தவர்23 கதைகள்கரண்ட் புக்சு, கோட்டயம்

கவிதைகள்

  1. நீல. பத்மநாபன்ட கவிதைகள், 2003, விசுவம் புக்சு, திருவனந்தபுரம்

கட்டுரைகள்

  1. சிருட்டில நோப்புரங்கள், 2006, கரண்ட் புக்சு, கோட்டயம்

ஆங்கிலப் படைப்புகள்

கட்டுரைகள்

  1. PEARLS AND PEBBLES. 2004. 19 Essays, Reliance Publishing House, New Delhi-110008

கொய்தமலர்கள்

  1. நீல பத்மநாபனின் எழுத்துலக விழுதுகள் 2002
  2. Neela Padmanaban - A Reader 2008
  3. நீல பத்மநாபம் 2010

நீல பத்மநாபனின் படைப்புகள் பற்றிய திறனாய்வுகள்

  1. நீல பத்மநாபனின் இலக்கியத்தடம் 1999
  2. நீல பத்மநாபன் படைப்புலகம் 2001

விருதுகளும் பரிசுகளும்

  1. உறவுகள் என்னும் புதினம் ராஜா அண்ணாமலைச் செட்டியார் பரிசினைப் பெற்றது.
  2. தமிழ் அன்னை விருது
  3. முதியோர் இல்லத்தைக் கதைக் களனாகக் கொண்டு நீல பத்மநாபன் எழுதிய இலை உதிர் காலம் புதினம், 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது, கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் ரங்கம்மாள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  4. மொழிபெயர்ப்பிற்கான சாகித்திய அகாதமி விருது
  5. தமிழ்நாடு அரசு விருது
  6. மைசூர் சிஐஐஆரின் பாஷா பாரதி பரிசு

குறிப்புகள்

  1. நீல பத்மநாபன், கொட்டாரம், வானதி பதிப்பகம்-சென்னை, மு.ப.திசம்பர் 2012, பக்.93
  2. Tamil Sahitya Akademi Awards 1955-2007 Sahitya Akademi Official website.
  3. "NEELA PADMANABHAN, A WRITER NON-PAREIL". Neela Padmanabhan. பார்த்த நாள் 18 June 2010.
  4. Indira Parthasarathy (8 December 2009). "Creative writing as a social act". The Hindu. http://www.hindu.com/br/2009/12/08/stories/2009120853331300.htm. பார்த்த நாள்: 18 June 2010.
  5. "Gauthaman to debut in Magizchi". IndiaGlitz. பார்த்த நாள் 18 June 2010.
  6. "Soul of Thiruvananthapuram". The Hindu. 2 March 2008. http://www.hindu.com/lr/2008/03/02/stories/2008030250240600.htm. பார்த்த நாள்: 18 June 2010.
  7. "Creative modern writer". The Hindu. 26 March 2002. http://www.hindu.com/thehindu/br/2002/03/26/stories/2002032600060300.htm. பார்த்த நாள்: 18 June 2010.
  8. கல்லூரிநினைவுகள்: எழுத்தாளர நீலபத்மநாபன்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.