நாகாலாந்து அரசு
நாகாலாந்து அரசு, இந்திய மாநிலமான நாகாலாந்தின் அரசாகும். இது செயலாக்கப் பிரிவு, நீதித்துறை, சட்டவாக்க அவை ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது.
தலைமையிடம் | கோகிமா |
---|---|
செயற்குழு | |
ஆளுநர் | பத்மநாப ஆச்சாரியா |
முதலமைச்சர் | டி. ஆர். ஜிலியாங் |
சட்டவாக்க அவை | |
சட்டப் பேரவை | |
சபாநாயகர் | சோதிசு சாசோ |
நீதித்துறை | |
உயர் நீதிமன்றம் | கோகிமா கிளை, குவஹாத்தி உயர் நீதிமன்றம் |
மாநிலத்தின் தலைவராக ஆளுநர் இருப்பார். இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். அரசின் தலைமையகம், சட்டமன்றம் ஆகியவை கோகிமாவில் உள்ளன. கோகிமாவில் உள்ள குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் கிளை மாநில நீதித்துறையின் உயர்ந்த அமைப்பாகும்.[1]
அரசின் தலைவராக முதலமைச்சர் செயல்படுவார். தற்போதைய சட்டமன்றம் ஓரவை முறைமை கொண்டது. இதில் 60 சட்டப் பேரவை உறுப்பினர்கள் இருப்பர். அதிக உறுப்பினர்களை கொண்ட அணி ஆட்சி அமைக்கும். இவர்களில் ஒருவர் முதலமைச்சராகவும், அவர் தேர்வு செய்த உறுப்பினர்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்பர். இவர்கள் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர்.[2]
சான்றுகள்
- "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. பார்த்த நாள் 2008-05-12.
- "Nagaland Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre, Government of India. பார்த்த நாள் 2008-05-10.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.