கூவம் திரிபுராந்தகர் கோயில்

கூவம் திரிபுராந்தகர் கோயில் (Tripuranthaka Swamy Temple) என்பது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]

தேவாரம் பாடல் பெற்ற
திருவிற்கோலம் திரிபுராந்தகர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):கூவரம், திருவிற்கோலம்
பெயர்:திருவிற்கோலம் திரிபுராந்தகர் கோயில்
அமைவிடம்
ஊர்:கூவம்
மாவட்டம்:திருவள்ளூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திரிபுராந்தகர்,திருவிற்கோலநாதர், திரிபுராந்தகேசுவரர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:திரிபுராந்தக நாயகி, திரிபுரசுந்தரி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:அக்னி தீர்த்தம்(கூவாக்கினி-குளம்; தவளைகள் இக்குளத்தில் குடியிருப்பதில்லை என்பது ஐதீகம்)
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞான சம்பந்தர்

இறைவன், இறைவி

இச்சிவாலயத்தின் மூலவர் திரிபுராந்தகர். தாயார் திரிபுராந்தக நாயகி.

சிறப்பு

திரிபுர அசுரர்களை அழிக்கும் பொருட்டு, இத்தல இறைவனார் மேரு மலையை வில்லாக ஏந்திய தலம் என்பதால் ’திருவிற்கோலம்’ என்ற பெயர் இத்தலத்திற்கு வந்தது.[2] திருவாலங்காடு நடராசருடன் நடனமாட சிலம்பு முத்துக்கள் விழுந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

அமைவிடம்

இச்சிவாலயம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கூவம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

இவற்றையும் பார்க்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 35

வெளி இணைப்புகள்

அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.