கூவம் திரிபுராந்தகர் கோயில்
கூவம் திரிபுராந்தகர் கோயில் (Tripuranthaka Swamy Temple) என்பது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]
தேவாரம் பாடல் பெற்ற திருவிற்கோலம் திரிபுராந்தகர் கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | கூவரம், திருவிற்கோலம் |
பெயர்: | திருவிற்கோலம் திரிபுராந்தகர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கூவம் |
மாவட்டம்: | திருவள்ளூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | திரிபுராந்தகர்,திருவிற்கோலநாதர், திரிபுராந்தகேசுவரர் |
உற்சவர்: | சோமாஸ்கந்தர் |
தாயார்: | திரிபுராந்தக நாயகி, திரிபுரசுந்தரி |
தல விருட்சம்: | வில்வம் |
தீர்த்தம்: | அக்னி தீர்த்தம்(கூவாக்கினி-குளம்; தவளைகள் இக்குளத்தில் குடியிருப்பதில்லை என்பது ஐதீகம்) |
ஆகமம்: | சிவாகமம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞான சம்பந்தர் |
இறைவன், இறைவி
இச்சிவாலயத்தின் மூலவர் திரிபுராந்தகர். தாயார் திரிபுராந்தக நாயகி.
சிறப்பு
திரிபுர அசுரர்களை அழிக்கும் பொருட்டு, இத்தல இறைவனார் மேரு மலையை வில்லாக ஏந்திய தலம் என்பதால் ’திருவிற்கோலம்’ என்ற பெயர் இத்தலத்திற்கு வந்தது.[2] திருவாலங்காடு நடராசருடன் நடனமாட சிலம்பு முத்துக்கள் விழுந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
அமைவிடம்
இச்சிவாலயம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கூவம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
இவற்றையும் பார்க்க
ஆதாரங்களும் மேற்கோள்களும்
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 35
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.