ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில்

ஓணகாந்தன்தளி - ஓணேஸ்வரர் காந்தேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயம்.பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [2]

தேவாரம் பாடல் பெற்ற
ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில்[1]
பெயர்
புராண பெயர்(கள்):திருவோணகாந்தன்தளி
பெயர்:ஓணகாந்தன்தளி ஓணகாந்தேஸ்வரர் கோயில்[1]
அமைவிடம்
ஊர்:ஓணகாந்தன்தளி,பஞ்சுப்பேட்டை
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஓணகாந்தேஸ்வரர்
தாயார்:காமாட்சி
தல விருட்சம்:வன்னி, புளியமரம்
தீர்த்தம்:ஓணகாந்த தீர்த்தம், தான் தோன்றி தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்
வரலாறு
தொன்மை:புராதனக்கோயில்

அமைவிடம்

இத்திருக்கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை நிலையத்திற்கு எதிரில் கோவில் உள்ளது. சாலையோரத்திலேயே கோவிலும் மின் நிலையமும் அமைந்துள்ளது. இங்கு சுந்தரர் பதிகம் பாடி இறைவனிடமிருந்து புளியங்காய்களை பொன்காய்களாகப் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

சிறப்பு

இத்திருக்கோயிலின் அர்த்த மண்டபத்தில் சுந்தரர் மற்றும் சிவபெருமானாரின் திருப்பாதம் உள்ளது[1]

மேற்கோள்கள்

  1. http://temple.dinamalar.com/New.php?id=180
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.