ஜெ. ர. தா. டாட்டா
ஜே. ஆர். டி. டாட்டா எனப்பரவலாக அறியப்படும் ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (சூலை 29, 1904 - நவம்பர் 29, 1993) இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர் ஆவார். இவர் இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கூறப்படுகிறார்.
ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா | |
---|---|
பிறப்பு | சூலை 29, 1904 பாரிஸ், பிரான்ஸ் |
இறப்பு | 29 நவம்பர் 1993 89) ஜெனீவா, சுவிட்சர்லாந்து | (அகவை
தேசியம் | இந்தியன் |
இனம் | பார்சி |
பணி | டாட்டா குழும முன்னாள் தலைவர் |
அறியப்படுவது | டிசிஎசு நிறுவனம் நிறுவியவர் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் நிறுவியவர் டைட்டன் நிறுவனம் நிறுவியவர் டாட்டா தேனீர் நிறுவனம் நிறுவியவர் வோல்டாஸ் நிறுவனம் நிறுவியவர் ஏர் இந்தியா நிறுவனம் நிறுவியவர் |
சமயம் | ஜோரோஸ்ட்ரியசம் |
பெற்றோர் | R.D. and Suzanne Tata nee Brière |
வாழ்க்கைத் துணை | தெல்மா விசஜி டாட்டா |
இளமைக்காலம்
இவர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் மகன் ஆவார். இவர் பிரான்சு நாட்டின் பாரிசு நகரத்தில் பிறந்தார். இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் இவர் தனது சிறுவயதில் பிரான்சிலேயே வாழ்ந்தார்.
1929இல் இவர் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றார்.
விருதுகள்
- 1957-இல் இவர் பத்ம விபூசண் விருது பெற்றார்.
- 1992-இல் பாரத் ரத்னா விருது.
இறப்பு
இவர் தன்னுடைய 89ஆம் வயதில் 1993ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் இறந்தார்.
நூற்பட்டியல்
- Pai, Anant (2004). JRD Tata: The Quiet Conqueror. மும்பை: India Book House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8175084200.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.