கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில்

கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. இக்கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடியில் அமைந்துள்ளது. [1]

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
கோவிலடி அப்பால ரங்கநாதர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்பேர் நகர்
பெயர்:கோவிலடி அப்பால ரங்கநாதர் கோயில்
அமைவிடம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அப்பக்குடத்தான்
தாயார்:இந்திரா தேவி, கமல வள்ளி,
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார்
வரலாறு
அமைத்தவர்:கரிகால் சோழன்

தல வரலாறு

இக்கோவில் சோழ மன்னர் கரிகால் சோழனால் கட்டப்பட்டது. திருப்பேர் நகர் என்பது இத்தலத்தின் பழம் பெயராகும். பஞ்சரங்க தலங்களில் அப்பாலரங்கம் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இப்பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுவதால் இவர் அப்பக்குடத்தான் என்று அழைக்கப்படுகிறார். [2]

மூலவர்

இத்தலத்தில் உள்ள பெருமாள் அப்பக்குடத்தான் என்றும், அப்பால ரெங்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

தாயார்

இக்கோயிலில் உள்ள தாயார் கமலவள்ளி என்றழைக்கப்படுகிறார்.

மங்களாசாசனம்

இத்தலம் நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். [3]

குடமுழுக்கு

இக்கோயிலின் குடமுழுக்கு 29 ஜனவரி 2016இல் நடைபெற்றது. [4]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.