கோபாலசமுத்திரம்
கோபாலசமுத்திரம் (ஆங்கிலம்:Gopalasamudram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டம், சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
கோபாலசமுத்திரம் | |
அமைவிடம் | 8°40′29″N 77°38′12″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
வட்டம் | சேரன்மாதேவி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | ஷில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
10,694 (2011) • 1,018/km2 (2,637/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 10.5 சதுர கிலோமீட்டர்கள் (4.1 sq mi) |
குறியீடுகள்
|
அமைவிடம்
மாவட்டத் தலமையிடமான திருநெல்வேலியிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைந்த கோபாலசமுத்திரத்திற்கு கிழக்கே 10 கிமீ தொலைவில் மேலப்பாளையம், மேற்கே 9 கிமீ தொலைவில் சேரன்மாதேவி; வடக்கே 4 கிமீ தொலைவில் பேட்டை; தெற்கே 22 கிமீ தொலைவில் களக்காடு உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
10.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 105 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2890 வீடுகளும், 10694 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
சிறப்புகள்
நூற்றாண்டைக் கடந்த பண்ணை வெங்கட்டராமய்யர் உயர்நிலைப்பள்ளி இங்கு உள்ளது. இந்த ஊர் மக்களின் முக்கியமான தொழில் விவசாயம் கோபாலசமுத்திரம் கிராமம் மன்னர் காலத்தில் பள்ளியின் நிறுவனர் குடும்பத்திற்கு தானமாக வழங்கப்பட்டதாக கூறுகின்றனர்.
ஆலயங்கள்
தாமிரபரணி நதியின் கரையில் அமைந்துள்ளது பழமையான சிவன் கோவில், பெருமாள் கோவில், வெள்ளை பிள்ளையார் கோவில்கள் இங்குள்ளன.
ஆதாரங்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- பேரூராட்சியின் இணையதளம்
- பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- Gopalasamudram Population Census 2011