தேவூர் தேவபுரீசுவரர் கோயில்
தேவூர் தேவபுரீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 85ஆவது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற தேவூர் தேவபுரீசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | கதலிவனம், விராடபுரம், அரசங்காடு, தேவபுரம் |
பெயர்: | தேவூர் தேவபுரீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | தேவூர் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | தேவபுரீசுவரர், தேவ குருநாதர், கதலிவனேசுவரர் |
தாயார்: | தேன் மொழியம்மை, மதுரபாஷிணி |
தல விருட்சம்: | வெள்ளை வாழை |
தீர்த்தம்: | தேவ தீர்த்தம், வருண,கௌதம,மிருத, சஞ்சீவினி தீர்த்தங்கள் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் |
அமைவிடம்
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
வழிபட்டோர்
இத்தலத்தில் குபேரன் வழிபட்டு சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்பதும் விராடன் தன் மகள் உத்தரையுடன் வந்து வழிபட்டான் என்பதும் தொன்நம்பிக்கைகள். தேவர்கள், இந்திரன், வியாழபகவான், சூரியன் முதலானோரும் வழிபட்ட திருத்தலம்[1]
மாணிக்கவாசகர் - திருவாசகம் - கீர்த்தித் திருஅகவல்
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோவால் கோலம் கொண்ட கொள்கையும்
மேற்கோள்கள்
- தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 247
இவற்றையும் பார்க்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.