திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 79ஆவது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):மந்திரபுரீசம், சக்திபுரீசம், இந்திரபுரீசம், ஆத்திவனம், பாஸ்கரபுரீசம், திருச்செங்காட்டங்குடி
பெயர்:திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருச்செங்காட்டங்குடி
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:உத்தராபதீசுவரர், ஆத்திவன நாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்
தாயார்:சூளிகாம்பாள், திருக்குழலம்மை
தல விருட்சம்:ஆத்தி
தீர்த்தம்:ஒன்பது தீர்த்தங்கள்: சத்திய, சூரிய, அக்கினி, சந்திர, இந்திர, இயம, வருண, வாயு, சீராள தீர்த்தங்கள்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்

அமைவிடம்

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது.

பிற சிறப்புகள்

இத்தலத்தில் பிள்ளையார் கயமுகாசுரனைக் கொன்ற பழிதீர வழிபட்டார் என்பதும், இறைவன் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அருள்புரிந்த தலமென்பதும் தொன்நம்பிக்கை. [1] சிறுத்தொண்ட நாயனார் வாழ்ந்த மாளிகை இத்திருக்கோயிலையடுத்து கோயிலாக உள்ளது.

ஆதாரம்

  1. தமிழ்நாடுஅரசு நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம்

வெளி இணைப்புகள்

தினமலர் கோயில்கள் தளம்

இவற்றையும் பார்க்க

படத்தொகுப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.