புத்தகுப்தர்

புத்தகுப்தர் (Budhagupta) (சமக்கிருதம்: बुधगुप्त) (ஆட்சிக்காலம் கி பி 476 – 495), இரண்டாம் குமாரகுப்தருக்குப் பின் ஆட்சிக்கு வந்த 11வது குப்தப் பேரரசர் ஆவார். இவர் புருகுப்தரின் மகனாவார்.[1] புத்தகுப்தர் கன்னோசி மன்னருடன் கூட்டணி வைத்துக் கொண்டு, வட இந்தியாவிற்குள் நுழைந்த ஹூணர்களை விரட்டியடித்தார்.

தாமோதர்பூர் செப்பு பட்டயங்கள், புத்தகுப்தரின் இரண்டு ஆளுநர்களான பிரம்மதத்தன் மற்றும் ஜெயதத்தன், வடக்கு வங்காளத்தை நிர்வகித்தாக கூறுகிறது. மத்தியப் பிரதேசத்தின் பண்டைய நகரமான ஏரணில் கிடைத்த 48 அடி உயர கொடி மரம் போன்ற கல்தூண்[2] குறிப்புகளின் படி, வடக்கே யமுனை ஆறு தெற்கே நர்மதை ஆறு பாயும் பரப்புகளை ஆண்ட சுரேஷ்மிசந்திரன் எனும் அரசன் புத்தகுப்தரை மகாராஜா அழைத்தார் எனக் கூறுகிறது.[1] மதுராவில் கிடைக்கப் பெற்ற, புத்தகுப்தர் ஆட்சிக் காலத்திய கௌதம புத்தரின் சிற்பத்தில் உள்ள குறிப்புகள், புத்தகுப்தர் தனது ஆட்சிப் பரப்பை வடக்கு மதுரா வரை நீட்டித்ததாக கூறுகிறது.[3]

மேற்கோள்கள்

  1. Raychaudhuri, H.C. (1972). Political History of Ancient India, Calcutta: University of Calcutta, p. 522
  2. Dr. Mohan Lal Chadhar, Eran Ki Tamrapashan Sasnkriti, Sagar, MP 2009, pp 11,ISBN 81-89740-07-5
  3. Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas, Delhi:Motilal Banarsidass, ISBN 81-208-0592-5, pp. 226–30

வெளி இணைப்புகள்

அரச பட்டங்கள்
முன்னர்
இரண்டாம் குமாரகுப்தர்
குப்தப் பேரரசர்
ஆட்சிக் காலம் கி பி 476 – 495
பின்னர்
நரசிம்மகுப்தர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.