தொல்லுயிர் எச்சம்
தொல்லுயிர் எச்சம் (Fossil) அல்லது புதைபடிவம் என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவை, மூலக்கூறு உயிரியலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை அளிக்கின்றன. சில சமயங்களில் மரப் பிசினில் சிக்கும் சிறு பூச்சிகள் எச்சங்களாகின்றன (பார்க்கவும்: அம்பர்).

அம்மோனைட்டு

மரத்தின் எச்சம்

ஆர்க்கியோப்டெரிக்ஸ்
வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் எனக் குறிப்பிடுவர். கண்டெடுக்கப்படும் தொல்லுயிர் எச்சமானது தற்காலத்தில் வாழும் உயிரினமாக இல்லாதவிடத்து அவை இன அழிவுக்குள்ளான இனமாகக் கருதப்படும்.

இந்தோனேசியாவின் பண்டுங் புவிச்சரிதவியல் அருங்காட்சியகத்தில் உள்ள மரப் புதை படிவம். இந்தோனேசியாவில் இதுவரை கிடைத்துள்ள மரப் புதைபடிவங்களில் இதுவே மிகப் பெரியது. உலகிலேயே மிகப் பெரிய மரப் புதை படிவமாகவும் இது கருதப்படுகிறது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.