திருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல்

திருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல் என்பது திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, தமிழ்மறை என்னும் சிறப்புப் பெற்ற திருக்குறள் மூலமும் அதற்கு எழுதப்பட்ட வெவ்வேறு வகையான உரைநூல்களும் அச்சில் ஏற்றப்பட்ட காலவரிசை அடைவு ஆகும்.

அண்மைக் காலத்தில் சில தமிழ் அறிஞர்கள் இத்தகைய காலவரிசைப் பட்டியலை உருவாக்கியுள்ளனர். இவண் தரப்படுகின்ற பட்டியல் திருக்குறள் மாமுனிவர் என்னும் சிறப்புப்பெயர் பெற்ற கு. மோகனராசு திருக்குறள் உரை வகைகள் (2005) என்னும் நூலில் தரும் செய்திகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.[1] 2006இல் வெளியான சில நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகள்

தொடர் வரிசை எண் அச்சிடப்பட்ட ஆண்டு ஆசிரியர் பெயர் நூல் பெயர்த் தலைப்பு அச்சகம்/பதிப்பகம் குறிப்புகள்
11812திருவள்ளுவர்திருக்குறள்-----திருக்குறள் மூலம் மட்டும் அச்சானது
21838திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர்பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும்-----திருக்குறளுக்கு அச்சேறிய முதல் உரைநூல் இதுவே. இது 19ஆம் நூற்றாண்டிலேயே 8 மீள்பதிப்புகள் பெற்றது.
31840பரிமேலழகர்திருக்குறள் உரைஅமெரிக்கன் மிசியோன் அச்சுக்கூடம், சென்னைமுதன்முதல் அச்சேறிய பரிமேலழகர் உரை. முதல் 24 அதிகாரங்களுக்கு மட்டும். இந்த உரையோடு இராமாநுசக் கவிராயர் எழுதிய வெள்ளுரையும் புத்துரையும், துறு ஐயர் (W.H. Drew) எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியாயின.
41849எம். வீராசாமி பிள்ளை (பதிப்பாசிரியர்)பரிமேலழகர் உரைசென்னைதிருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை முழுவதும் முதன்முறை அச்சானது. இது 19ஆம் நூற்றாண்டிலேயே 8 மீள்பதிப்புகள் பெற்றது.
51849திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர்பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும்களத்தூர் வேதகிரி முதலியார், இரத்தின நாயக்கர் அண்டு சன், சென்னை1838ஆம் ஆண்டு நூலின் மீள்பதிப்பு
61850யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக முதலியார், கந்தசாமி முதலியார்தமிழ் வேதமாகிய திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்-----பரிமேலழகர் உரை முழுவதும்
71850களத்தூர் வேதகிரி முதலியார்திருக்குறள் மூலமும் உரையும் (பதவுரை, கருத்துரை, விசேட உரை)சண்முக விலாச அச்சுக்கூடம், சென்னைபரிமேலழகருரைத் தழுவல்
81856கேசவ முதலியார்தமிழ் வேதமாகிய திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்பிரபாகர அச்சுக்கூடம், சென்னைபரிமேலழகர் உரை முழுவதும்
91856களத்தூர் வேதகிரி முதலியார்திருக்குறள் மூலமும் உரையும்கேசவ முதலியார் பிரபாகர அச்சுக்கூடம், சென்னைபரிமேலழகருரைத் தழுவல்
101861கந்தசாமிப் பிள்ளைதிருக்குறள் பரிமேலழகருரை, சரவணப் பெருமாள் உரை விளக்கத்துடன்திருநெல்வேலிபரிமேலழகர் உரையோடு உரை விளக்கமும்
111861கந்தசாமிப் பிள்ளைதிருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும்திருநெல்வேலி-----
121861ஆறுமுக நாவலர்தமிழ் வேதமாகிய திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்வாணிநிகேதன அச்சுக்கூடம், சென்னைபரிமேலழகர் உரை முழுவதும்
131861ஆறுமுக நாவலர்திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்வாணிநிகேதன அச்சுக்கூடம், சென்னைபரிமேலழகர் உரை முழுவதும்
141869கருணானந்த சுவாமிகள், கேசவ முதலியார்திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும்பிரபாகர் அச்சுக்கூடம், சென்னை-----
151873இ.எல்.எம். பிரஸ்திருக்குறள் மூலமும் உரையும்தரங்கம்பாடி-----
161873இட்டா குப்பசாமி நாயுடுதிருக்குறள் பரிமேலழகர் உரையைக் கொண்டியற்றிய பதவுரை கருத்துடன்கவிரஞ்சினி அச்சுக்கூடம், சென்னை-----
171875எம். வீராசாமிப் பிள்ளைதிருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும்சென்னை-----
181884திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர்பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும்எம்ப்ரஸ் ஆப் இந்தியா, சென்னை-----
191884பொன்னுசாமி முதலியார்திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும்வித்தியா வினோத அச்சுக்கூடம், சிதம்பரம்-----
201885முருகேச முதலியார்குறள் மூலம் பரிமேலழகர் செய்த இலக்கணவுரையுடன்கலாரத்னாகரம், சென்னை-----
211886ஊ. புஷ்பரத செட்டிதிருவள்ளுவரின் குறள், பரிமேலழகர் உரைகலாரத்னாகரம், சென்னை-----
221889சுகாத்தியர்திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த குறள் மூலமும் சுகாத்தியர் இயற்றிய கருத்துரயட்டவணையும் பொழிப்புரயும்லாரன்ஸ் பிரஸ், சென்னைT.M. Scott என்ற மேனாட்டுக் கிறித்தவ மறைபரப்பாளர் ஆக்கிய உரை
231893இராகவலு நாயுடுதிருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும்சென்னை-----
241893சுந்தர முதலியார்திருக்குறள் மூலமும் கருத்துரையும்விக்டோரியா ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை-----
251899சென்னைப் பல்கலைக்கழகம்701-800 குறட்குப் பரிமேலழருரைசென்னை-----

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட உரைகளின் சில பண்புகள்

  • திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர்கள் பத்துப்பேர் என்பது மரபு. அவர்கள் மணக்குடவர், தருமர், தாமத்தர், நச்சர், பரிதியார், மல்லர், திருமலையர், பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் என்போர் ஆவர். இவர்களுள் மணக்குடவர், பரிதியார், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேலழகர் என்னும் ஐவரின் உரைகளே முழுமையாகக் கிடைத்துள்ளன.
  • திருக்குறளுக்கு உரையாக முதலில் அச்சில் ஏறியது திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் என்னும் நூல் ஆகும் (1838). இதிலிருந்து பரிமேலழகர் என்னும் பழைய ஆசிரியரின் உரை புதிய வடிவத்தில் அச்சேறியதற்கு சரவணப் பெருமாளே வழிவகுத்தார் எனலாம். 19ஆம் நூற்றாண்டிலேயே இவ்வுரை எட்டுமுறை வெளிவந்துள்ளது.
  • 1840இல் தான் முதன்முதல் பரிமேலழகர் உரை, முதல் 24 அதிகாரங்களுக்கு அச்சேறி வெளிவந்துள்ளது. அந்த உரையோடு இராமாநுசக் கவிராயர் எழுதிய வெள்ளுரையும், புத்துரையும் துறு ஐயர் (W.H. Drew) எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளது. இவை அனைத்தும் திருக்குறளின் முதல் 24 அதிகாரங்களுக்கு மட்டுமே.
  • இச்செய்தியின் வழி பார்க்கும்போது, முதன்முதல் திருக்குறள் புத்துரைக்கு வித்திட்டவராக இராமாநுசக் கவிராயர் விளங்குவதாக அறிய முடிகிறது.
  • முதன்முதலாக, பரிமேலழகர் உரை முழுவதும், 1849இல் சென்னையில் எம். வீராசாமி பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பரிமேலழகர் உரை பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே எட்டுமுறை வெளிவந்துள்ளது.
  • 1838இல் வெளியான சரவணப் பெருமாள் ஐயரின் தழுவல் உரையை அடுத்து, பத்தொன்பதாம் நூற்றாண்டு அளவிலேயே சில அறிஞர்கள் பரிமேலழகரைத் தழுவித் திருக்குறளுக்கு உரைகள் வழங்கினர்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு உரை என்றால் அது பரிமேலழகர் உரையே என்ற நிலை நிலவியது. அது வைதிக உரையாகவும் இலக்கண நுட்பங்கள் செறிந்த உரையாகவும் அமைந்தது கூடுதல் ஈர்ப்பிற்குக் காரணமாயிற்று. இக்காலப் பகுதியில் மணக்குடவர் உள்ளிட்ட பிற பழைய உரையாசிரியர்களின் உரைகளைத் தமிழறிஞர்கள் அறியாதார் அல்ல; ஆனால் பரிமேலழகர் மீது இருந்த பற்றால், அவற்றை அச்சிட்டு வெளியிடக்கூட யாரும் முன்வரவில்லை. ஒருவகையில் அவை மறைக்கப்பட்டன எனக் கொள்ளலாம்.
  • திருக்குறள் சமண நூலா சைவ நூலா என்றொரு வாதம் எழுந்த காலகட்டம் அது. சமணத்திற்கு ஓரளவு ஆதரவாகத் தோன்றிய மணக்குடவர் உரையும் பெரும் சார்பாக இருந்த காலிங்கர் உரையும் போற்றப்படவில்லை. அதே வேளையில் திருக்குறள் முழுக்க முழுக்க சைவமே என்ற போக்கில் எழுதப்பட்ட பரிதியார் உரையையும் யாரும் போற்றியதாகத் தெரியவில்லை. சைவரும் வைணவருமாக இருந்த அக்காலத் தமிழ்ப் புலவர்களுக்குப் பரிமேலழகர் பொதுவானவராக அமைந்தது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பரிதியார் உரையில் காணும் ஆழமற்ற போக்கும் வேறொரு காரணமாக இருந்திருக்கலாம்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகள்

தொடர் வரிசை எண் அச்சிடப்பட்ட ஆண்டு ஆசிரியர் பெயர் நூல் பெயர்த் தலைப்பு அச்சகம்/பதிப்பகம் குறிப்புகள்
261902திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர்பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதிய பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும்-----1838இல் வெளியான உரையின் மறு பதிப்பு
271904கோ. வடிவேலு செட்டியார்திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும் விளக்கவுரையுடன்சென்னைபரிமேலழகருரையை எளிமைப்படுத்தல்
281909பா. கங்காதர தேவர்திருக்குறள் முதற்பாவின் பரிமேலழகர் உரை விளக்கம்பிரசிடென்சி அச்சுக்கூடம், சென்னைபரிமேலழகருரையை எளிமைப்படுத்தல்
291909திருமுல்லைவாயில் பி.டி.ரத்தினம் பிள்ளைதமிழ் வேதமாகிய திருக்குறள் வசனம்சீர்காழிபரிமேலழகருரை தழுவிய புத்துரை
301909பழனியப்பா செட்டியார்திருக்குறள் மூலம் (அறம், பொருள்: பதவுரை, கருத்துரை; காமம்: பொழிப்புரை)-----பரிமேலழகருரை தழுவிய புத்துரை
311910இராகவையங்கார்திருக்குறள் பரிமேலழகர் உரைவிவேகபாநு முத்திரா சாலை, மதுரைபரிமேலழகருரை மறுபதிப்பு
321913களத்தூர் வேதகிரி முதலியார்திருக்குறள் மூலமும் உரையும் (பதவுரை, கருத்துரை, விசேட உரை)-----1850ஆம் ஆண்டு நூலின் மறுபதிப்பு
331913இ.மா. கோபாலகிருஷ்ண கோனார்திருக்குறள் பரிமேலழகருரைமதுரைபரிமேலழகருரை மறுபதிப்பு
341917வ.உ. சிதம்பரனார்திருக்குறள் மணக்குடவர் உரை (அறத்துப்பால்)-----முதன்முதல் மணக்குடவர் உரையின் பகுதி அச்சேற்றப்பட்டது
351919கோ. வடிவேலு செட்டியார்திருக்குறள் பரிமேலழகருரையும் கோ. வடிவேலு செட்டியார் இயற்றிய தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும்சச்சிதானந்த அச்சியந்திர சாலை, சென்னை-----
361919பொன்னம்பலம் இராமநாதன்திருக்குறளின் பாயிரமும் பொன்னம்பலம் இராமநாதன் இயற்றிய இராமநாத தீபமும்நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம்-----
371920செ.மு. வேலு முதலியார்திருக்குறள் பரிமேலழகருரைசென்னைத் தமிழ்ச் சங்கத்தார், சென்னைபரிமேலழகருரை மறுபதிப்பு
381921அரசஞ்சண்முகனார்முதற்குறள் விருத்திமீனலோசனி அச்சியந்திர சாலை, மதுரைபரிமேலழகருரையிலிருந்து மாறுபட்ட அணுக்கம்
391922டி.ஆர். திருவேங்கடம் பிள்ளைதிருக்குறள் வசனம்குருசரணாலயம், சென்னை-----
401924மு.ரா. அருணாசலக் கவிராயர்திருக்குறளின் திரட்டும் தெளிபொருள் வசனமும்சி.நா. சிதம்பர முதலியார், மதுரை-----
411924கிருஷ்ணாம்பேட்டை குப்புசாமி முதலியார்திருக்குறள் பரிமேலழகருரை (அறத்துப்பால், பொருட்பால்)சென்னைபரிமேலழகருரை மறுபதிப்பு
421924மார்க்கசகாயம் செட்டியார்திருக்குறள் சொற்குறிப்பும் அகராதியும்----திருக்குறள் அருஞ்சொற்களுக்குப் பொருளும், சொல் அடைவும் முதன்முதல் அச்சேறியது
431925கா. பொன்னுசாமி நாட்டார்திருக்குறள் மணக்குடவர் உரை-----முதன்முறையாக மணக்குடவர் உரை முழுதும் அச்சேறியது
441925கிருஷ்ணாம்பேட்டை குப்புசாமி முதலியார்திருக்குறள் பரிமேலழகருரை (காமத்துப்பால்)சென்னைபரிமேலழகருரை மறுபதிப்பு

இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகளின் சில பண்புகள்

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் காணப்பட்ட திருக்குறள் எழுச்சியைவிட இக்காலப் பகுதியில் அந்த எழுச்சியின் வீச்சு கூடுதலாக இருப்பதைக் காணமுடிகிறது. இக்காலப் பகுதியில் கீழ்வரும் போக்குகள் தெரிகின்றன:

- பரிமேலழகர் உரைப் பதிப்புகள்
- பரிமேலழகர் உரைக்கான விளக்க உரைகள்
- பரிமேலழகர் உரையைத் தழுவிய உரைகள்
- தமிழறிஞர்களின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்புகள்
- மணக்குடவர் உரை வெளியீடு
- திருக்குறள் சொற்குறிப்பு அகராதி வெளியீடு

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்தது போலவே இருபதாம் நூற்றாண்டின் முதற்கால் நூற்றாண்டிலும் பரிமேலழர் உரை பெரும் மதிப்போடு விளங்கியது. திருக்குறள் சான்றோர் நால்வர் பரிமேலழகர் உரையைப் பதிப்பித்துள்ளனர் (ஆண்டுகள்: 1910, 1913, 1920, 1924-1925).
  • பரிமேலழகர் உரையைத் தத்தம் விளக்கங்களோடு கோ. வடிவேலு செட்டியார், பா. கங்காதர தேவர் ஆகியோர் வெளியிட்டுள்ளனர் (ஆண்டுகள்: 1904, 1909, 1919).
  • பத்தொன்பதாம் நூற்றாண்டைப் போலவே இக்காலப் பகுதியிலும் சில சான்றோர் திருக்குறளுக்குப் புதியதாக உரை கண்டுள்ளனர். அவர்கள் பி.டி. ரத்தினம் பிள்ளை (ஆண்டு: 1909), பழனியப்பா செட்டியார் (ஆண்டு: 1909), பொன்னம்பலம் இராமநாதன் (ஆண்டு: 1919), டி.ஆர். திருவேங்கடம் பிள்ளை (ஆண்டு: 1922), அருணாசலக் கவிராயர் (ஆண்டு: 1923) ஆகியோர்.
  • சரவணப் பெருமாள் ஐயரின் உரை மறுபதிப்பாக 1902இலும், வேதகிரி முதலியாரின் உரை மறுபதிப்பாக 1913இலும் வெளியாயின. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும் மதிப்புக்குரியதாக விளங்கிய சரவணப் பெருமாள் ஐயர் உரைக்கு இக்காலப் பகுதியில் அவ்வளவாகச் சிறப்பிடம் தரப்பட்டுள்ளதாக அறிய முடியவில்லை.
  • இக்கால கட்டத்தில் திருக்குறளுக்குத் தமிழறிஞர்களே ஆங்கில மொழிபெயர்ப்புகள் வழங்கியது என்பது ஒரு புதிய முயற்சியாகும். பெரிதும் பரிமேலழகருரையை ஒட்டியே அமைந்த மூன்று ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாயின. அவற்றை எழுதி வெளியிட்டோர் கீழ்வருவோர்:

- வ.வே.சு. ஐயர்
- கோ. வடிவேலு செட்டியார்
- எ. சபாரத்தின முதலியார்

  • பரிமேலழகர் உரையை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என்னும் நிலையிலிருந்து மாறி, திருக்குறளுக்கு அணுக்க உரை காண வேண்டும் என்னும் உந்துதலும் ஆய்வுலகில் இக்கால கட்டத்தில் எழுந்துள்ளது. அதற்கு அரசஞ்சண்முகனார் 1921இல் எழுதிய முதற்குறள் விருத்தி என்னும் நூலே சான்று.
  • பரிமேலழகர் உரைத்திறனைக் கண்டு ஈர்க்கப்பட்டோர் சிலர்; திருக்குறள் வடமொழி சார்ந்து இயற்றப்பட்ட நூலே என்ற எண்ணத்தில் தமிழையும் தமிழரையும் தாழ்த்தும் நோக்குடன் பரிமேலழகர்பால் பற்றுக்கொண்டோர் வேறுசிலர் என்ற நிலை இக்காலகட்டத்தில் எழுந்தது.
  • இப்பின்னணியில் தமிழ் எழுச்சி உருவாகி, பரிமேலழகர் உரைக்கு மாற்றாக மணக்குடவர் உரையை அச்சிட்டுக் கொண்டுவர வேண்டும் என்னும் உந்துதல் எழுந்தது. செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் முதன்முதல் மணக்குடவர் உரையில் ஒரு பகுதியாகிய அறத்துப்பால் உரையை வெளியிட்டார். இந்த உரை 1917இல் வெளிவந்தது. 1925இல் மணக்குடவர் உரை முழுவதையும் கா. பொன்னுசாமி நாட்டார் வெளியிட்டார்.
  • திருக்குறளை நன்கு அறிய வேண்டுமென்றால், சொல் அடைவும் கடின சொற்களுக்குப் பொருளும் அறிந்துகொள்ள வேண்டும் என்னும் உயர்ந்த நோக்கில் திருக்குறளுக்குச் சொற்குறிப்பும் அகராதியும் மார்க்கசகாயம் செட்டியார் என்பவரால் கொண்டுவரப்பட்டது (1924).
  • பரிமேலழகரை உயர்த்தி திருக்குறளைத் தாழ்த்தும் எண்ணம் சிலர் கொண்டிருந்ததால் அதற்கு எதிர்வினையாக பரிமேலழகரின் உரைக்கு எதிர்ப்பு எழுந்து, அவ்வுரையின் நிறைகுறைகளை ஆராயும் போக்கு தோன்றியதோடு, தனித்தமிழ் உணர்வும் கால்கொள்ளத் தொடங்கியது.

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகள்

தொடர் வரிசை எண் அச்சிடப்பட்ட ஆண்டு ஆசிரியர் பெயர் நூல் பெயர்த் தலைப்பு அச்சகம்/பதிப்பகம் குறிப்புகள்
451928திருநாவுக்கரசு முதலியார்திருக்குறள் பரிமேலழகருரைவாவிள்ள ராமசாமி சாஸ்துருலு அண்டு சன்ஸ்பரிமேலழகருரை
461928கா.சுப்பிரமணிய பிள்ளைதிருக்குறள் தெளிபொருள் விளக்கம்கழகம், சென்னை-----
471929காயாமொழி குமரகுருபரர்திருக்குறள் அறம்கோல்டன் அச்சகம், சென்னை-----
481929கி. வீரராகவன்திருக்குறள்குமரன் அச்சகம், காஞ்சிபுரம்-----
491931டி.எ. பரமசிவன் பிள்ளைதிருக்குறள் சாரம் - 108 அதிகாரமும் வசனமும்----------
501932ஆ. அரங்கநாத முதலியார்திருக்குறள் மூலமும் பொழிப்புரையும்(ஆங்கில மொழிபெயர்ப்புடன்)பி. என். அச்சுக்கூடம், சென்னை-----
511933ஆ. அரங்கநாத முதலியார்திருக்குறள் மூலமும் பொழிப்புரையும் (ஆங்கில மொழிபெயர்ப்புடன்)பி.என். அச்சுக்கூடம், சென்னை-----
521933நாகை. சொ. தண்டாபாணிப் பிள்ளைதிருக்குறள் அறத்துப்பால் தண்டாபாணி விருத்தியுரைகழகம், சென்னை----
531935வ.உ. சிதம்பரம்பிள்ளைதிருக்குறள் அறத்துப்பால் விருத்தியுரையுடன்தூத்துக்குடி-----
541936முனைவர் வ. சுப. மாணிக்கனார்உரைநடையில் 1330 திருக்குறள்பேகன் பதிப்பகம், காரைக்குடி-----
551937ஆ. மீனாட்சிசுந்தரம் பிள்ளைதிருக்குறள் பரிமேலழகர் உரையும் விளக்கமும்இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், சென்னை-----
561937கு. சடகோப ராமானுஜாச்சாரியார்திருக்குறள் பரிமேலழகருரையும் விளக்கமும்ஆர்.ஜி. அச்சகம், சென்னை-----
571939திரு. வி. கலியாண சுந்தரனார்திருக்குறள் விரிவுரை - பாயிரம்சாது அச்சுக்கூடம், சென்னை-----
581939பி.எ. சுப்பிரமணிய சாஸ்திரிதிருக்குறள் அறத்துப்பால் பலருரைமுருக விலாஸ், திரிசிரபுரம்-----
591941திரு. வி. கலியாண சுந்தரனார்திருக்குறள் விரிவுரை - அறத்துப்பால் - இல்வாழ்க்கையியல்சாது அச்சுக்கூடம், சென்னை-----
601944க.அ. இராகசாமிப் புலவர்திருக்குறள் மூலமும் அரும்பதவுரையும்ஒற்றுமை ஆபிஸ், சென்னை-----
611945பி.எ. சுப்பிரமணிய சாஸ்திரிதிருக்குறள் - தீபாலங்காரம் குறிப்புரையுடன்----------
621947திருவள்ளுவர் சங்கம்திருக்குறள் மூலமும் உரையும்விருதுநகர்-----
631949முனைவர் மு. வரதராசனார்திருக்குறள் தெளிவுரைகழகம், சென்னை-----
641949புலவர் அ.மு. குழந்தைதிருக்குறள் குழந்தையுரைசிவலிங்க பதிப்புக் கழகம், ஈரோடு-----
651949பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரிதிருக்குறள் பொருட்பாலும் காமத்துப்பாலும் பாலருரைகாஞ்சி காமகோடி கோசஸ்தானம், சென்னை-----
661949திருக்குறளார் வீ. முனுசாமிதிருக்குறள் காமத்துப்பால் விளக்கவுரைசக்தி காரியாலயம், கோவை-----
671949ந.சி. கந்தையாப் பிள்ளைதிருக்குறள் மூலமும் தெளிவுரையும்ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை-----
681949ஆர். சாரங்கபாணிதிருக்குறள் அறத்துப்பால் விளக்கம்லயோலா கல்லூரி, சென்னை-----
691949சுகவனம் சிவப்பிரகாசன்திருக்குறள் மூலமும் உரையும்----------
701949மு.ரா. கந்தசாமி பிள்ளைதிருக்குறள் உரைவிவேகானந்தா அச்சகம், மதுரை-----
711950இரத்தின நாயகர் சன்ஸ்திருக்குறள் மூலமும் தெளிபொருள் உரையும்சென்னை-----
721950திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர்திருக்குறள் உரைவளம் - அறத்துப்பால்சென்னை-----
731950கா. அப்பாத்துரையார்திருக்குறள் மணிவிளக்க உரை (பகுதி 1)----------
741950மணி. திருநாவுக்கரசு முதலியார்திருக்குறள்----------

இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகளின் சில பண்புகள்

  • இந்தக் காலப் பகுதியில் இரண்டு பேரியக்கங்கள் தமிழகத்தில் தோன்றி வேர்கொண்டுள்ளன: ஒன்று, திராவிட இயக்கம், மற்றொன்று தனித்தமிழ் இயக்கம். இந்த இரண்டு இயக்கங்களுமே திருக்குறளுக்கு முதன்மை தந்தன.
  • தனித்தமிழ் இயக்கம், திருக்குறளை ஒரு தனித்தமிழ் நூலாக அணுகியது. திருக்குறள் தமிழர்களின் தனிச் சிந்தனைகளின் உள்ளடக்கம்; அதில் வடமொழிச் சிந்தனைகளின் தாக்கங்கள் இல்லை; அப்படி ஒருசில இடங்களில் இருப்பதுபோல் தோன்றினும் அது வடமொழியாளர் சிந்தனைகளுக்கான எதிர்ப்புணர்வுகளே என்னும் பார்வையைத் தனித்தமிழ் இயக்கம் முன்வைத்தது. திருக்குறளின் அறத்துப்பால் மனுசிமிருதியைத் தழுவியது என்றும், பொருட்பால் அர்த்தசாஸ்திரத்தைத் தழுவியது என்றும், காமத்துப்பால் காமசூத்திரத்தைத் தழுவியது என்றும் முன்வைக்கப்பட்ட கருத்துருவாக்கங்களைத் தனித்தமிழ் இயக்கத்தார் மறுத்து, அவற்றிற்கிடையிலான வேறுபாடுகளை இனம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
  • திராவிட இயக்கத்தவர்கள் திருக்குறள் தந்தை பெரியார் அவர்களின் அரவணைப்பைப் பெற்றவுடன் அதனைப் பாமர மக்களிடம் கொண்டுசெல்லும் பெருமுனைப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அப்படிக் கொண்டு செல்லும்போது, திருக்குறள் ஒரு பகுத்தறிவு நூல் என்னும் நோக்கில் கொண்டுசெல்லத் திட்டமிட்டனர்.
  • இவ்வாறு, தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் என்னும் இவ்விரு இயக்கங்களின் எழுச்சியால் திருக்குறளுக்கான இரண்டாவது எழுச்சிக் காலம் உருவாக்கம் பெற்றுள்ளது.
  • இந்த இரு பேரியக்கங்களால் திருக்குறள் ஆய்வுகள் புதிய பரிணாமங்களைப் பெற்றன. தனித்தமிழ் இயக்கத்தவர்களுள் ஒரு சிலர், பரிமேலழகரின் வடவர் சார்புக் கருத்துகளை மறுத்து, அதில், தமிழர்களின் சமயமான சைவம் சார்ந்த கருத்துகளே பெரிதும் உள்ளன என்னும் கருதுகோளை நெஞ்சில் வைத்துத் தம் பயணத்தைத் தொடர்ந்தனர். வேறு சிலர் திருக்குறள் ஒரு சமயச் சார்பற்ற நூல் என்னும் நோக்கில் தம் பயணத்தைத் தொடர்ந்தனர்.
  • திராவிட இயக்கத்தவர்கள், திருவள்ளுவர் ஒரு கடவுள் மறுப்பாளர் என்னும் நோக்கில் தங்கள் கருத்துகளை முன்வைத்துத் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
  • பரிமேலழகர் உரை இவ்விரு இயக்கத்தாரின் பார்வைக்கும் அடிப்படை இலக்காகியது.
  • 1926-1950 காலகட்டத்தில் பரிமேலழகரின் உரை அப்படியே அச்சானது இருமுறை மட்டுமே (ஆண்டுகள்: 1928; 1947). இரு உரைகளும் சென்னையிலிருந்தே வெளியாயின. இரு உரைநூல்கள் பரிமேலழகர் உரைக்கு விளக்கமாக வெளியாயின (ஆ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, 1937; கு. சடகோப ராமானுஜாச்சாரியார், 1937). 1901-1925 காலகட்டத்தில் வெளிவந்த உரைகளுள் மு.ரா. அருணாசலக் கவிராயரின் திருக்குறள் மூலமும் தெளிபொருள் வசனமும் என்னும் உரை நூல் மட்டும் இக்காலப்பகுதியில் இருமுறை மீண்டும் பதிக்கப்படும் சிறப்பினைப் பெற்றது.
  • 1926-1950 காலகட்டத்தில் ஏற்பட்ட சமுதாய விழிப்புணர்வின் காரணமாக ஏற்பட்ட தனித்தமிழ் இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் ஆகியவற்றின் விளைவாகத் திருக்குறளுக்குப் பல புதிய உரைகள் தோன்றின. அவற்றுள் பல உரைகள் பேரளவு பரிமேலழகரின் உரையைத் தழுவியனவாக உள்ளன. ஒரு சில குறட்பாக்களுக்குப் புதிய விளக்கங்களும் தரப்பட்டன. இவ்வகையில் வெளியான உரைநூல்கள் 17. அவற்றுள் ஆ. அரங்கநாத முதலியார் வெளியிட்ட நூல் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கொண்டிருந்தது.
  • தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கம் பெற்ற நிலையில் சில சான்றோர் பெருமக்கள் திருக்குறளுக்குப் புத்துரை காண முயன்றுள்ளனர். இவ்வாறு புதுமை புகுத்தி உருவான உரை நுல்கள் இவை:

- வ.உ. சிதம்பரம் இயற்றிய "திருக்குறள் அறத்துப்பால் விருத்தியுரையுடன்" என்ற நூல் (1935)
- முனைவர் வ.சுப. மாணிக்கம் இயற்றிய "உரைநடையில் 1330 திருக்குறள்" என்ற நூல் (1936)
- திரு. வி. கலியாண சுந்தரனார் இயற்றிய "திருக்குறள் விரிவுரை - பாயிரம்" என்ற நூல் (1939)
- அவரே இயற்றிய "திருக்குறள் விரிவுரை - அறத்துப்பால் - இல்வாழ்க்கையியல்"என்ற நூல் (1941)
- மு. வரதராசனார் இயற்றிய "திருக்குறள் தெளிவுரை" என்ற நூல் (1949)
- புலவர் அ.மு. குழந்தை இயற்றிய "திருக்குறள் குழந்தையுரை" என்ற நூல் (1949)

இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகள்

தொடர் வரிசை எண் அச்சிடப்பட்ட ஆண்டு ஆசிரியர் பெயர் நூல் பெயர்த் தலைப்பு அச்சகம்/பதிப்பகம் குறிப்புகள்
751951திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர்திருக்குறள் உரைவளம் - பொருட்பால்சென்னை-----
761951கிருஷ்ணசாமி நாயுடுதிருக்குறள் பரிமேலழகருரையும் விசேச ஞான விருத்தியும்மதுரை-----
771951கா. அப்பாத்துரையார்திருக்குறள் மணிவிளக்க உரை (பகுதி 2)----------
781951ஈக்காடு சபாபதி முதலியார்திருக்குறள் விளக்கவுரைதிருமகள் கம்பெனி, சென்னைபுதிய உரை
791952திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர்திருக்குறள் உரைவளம் - காமத்துப்பால்சென்னை-----
801952கே.எம். வேங்கடராமையாதிருக்குறள் தமிழ்மறை - குறிப்புரையுடன்காசிமடம், திருப்பனந்தாள்புதிய உரை
811952அர்ச்சுனனார்குறள் நூற்பாயிரமும் விளக்கவுரையும்சுதர்சன மன்றம், சென்னைபுதிய உரை
821952மயிலை சிவமுத்துதிருக்குறள் காமத்துப்பால் உரை----------
831953மயிலை சிவமுத்துதிருக்குறள் பொருட்பால் உரை----------
841953மயிலை சிவமுத்துதிருக்குறள் உரை முழுவதும்----------
851953பால்வண்ணனார்திருக்குறள் சிறப்புரைசிறீமகள் கம்பெனி, சென்னைபுதிய உரை
861953பாலூர் கண்ணப்ப முதலியார்குறள் வசனம் (அறத்துப்பால்)ஒற்றுமை ஆபிஸ், சென்னைபுதிய உரை
871953வை. சுந்தரேச வாண்டையார்திருக்குறள் பொருட்பால்திருவையாறு குமரகுருபரன் சங்கம், சிறீவைகுண்டம், திருநெல்வேலிபுதிய உரை
881954ஜி. வரதராஜன்திருக்குறள் உரை விளக்கம்திருவள்ளுவர் நிலையம், திருச்சிபுதிய உரை
891954ச. வெள்ளைச்சாமி நாடார்திருக்குறள் விளக்க உரைசதானந்த அச்சகம், விருதுநகர்புதிய உரை
901954நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளைதிருக்குறள் புது உரைஇன்பநிலையம், சென்னைபுதிய உரை
911954எம். இ. வீரபாகு பிள்ளைதிருக்குறள் எளிய உரைஒற்றுமை ஆபிஸ், சென்னைபுதிய உரை
921954பாத்தன்திருக்குறள் விவேக விருத்தியுரைதெய்வமகள் விலாச அச்சகம், சென்னைபுதிய உரை
931955சாமி பழனியப்பன்வள்ளுவர் தந்த காதல் இன்பம்மதி நிலையம், சென்னைபுதிய உரை
941955ரா.ந. கல்யாணசுந்தரம்தொகுப்புத் திருக்குறள் (மூலமும் உரையும்)வேளாள அச்சுக்கூடம், கோயமுத்தூர்புதிய உரை
951956தி லிட்டில் ப்ளவர் கம்பெனிவள்ளுவர் வாய்மொழியும் தெள்ளிய உரையும்சென்னைபுதிய உரை
961957வை. சுந்தரேச வாண்டையார்திருக்குறள் - அறத்துப்பால்பாண்டியன் மின் அச்சகம், சிதம்பரம்புதிய உரை
971957திருப்பனந்தாள் காசிமடம்திருக்குறள் உரைக்கொத்து - அறத்துப்பால்----------
981958திருப்பனந்தாள் காசிமடம்திருக்குறள் உரைக்கொத்து - பொருட்பால்----------
991957முனைவர் இரா. சாரங்கப்பாணிதிருக்குறள் உரைவேற்றுமை - அறத்துப்பால்----------
1001958முனைவர் இரா. சாரங்கப்பாணிதிருக்குறள் உரைவேற்றுமை - பொருட்பால்----------
1011959திருப்பனந்தாள் காசிமடம்திருக்குறள் உரைக்கொத்து - காமத்துப்பால்----------
1021959செ.ரெ. இராமசாமிப் புலவர்திருக்குறள் பொருள் விளக்கம்கழகம், சென்னைபுதிய உரை
1031959சி. இலக்குவனார்திருக்குறள் எளிய பொழிப்புரைவள்ளுவர் பதிப்பகம், சென்னைபுதிய உரை
1041959சாமி. சிதம்பரனார்திருக்குறள் பொருள் விளக்கம்ஸ்டார் பிரசுரம், சென்னைபுதிய உரை
1051959புலவர் சண்முகசுந்தரனார்திருக்குறள் தெளிவுஸ்டார் பிரசுரம், சென்னைபுதிய உரை
1061960அரசுமணிதிருக்குறள் எளிய உரைஅருணோதயம், சென்னைபுதிய உரை
1071960பண்டித மீ. கந்தசாமி புலவர்திருக்குறள் தெளிபொருள்கோல்டன் பிரஸ், சென்னைபுதிய உரை
1081962டாக்டர் மு. கோவிந்தசாமிதிருக்குறள் நயவுரைபாரி நிலையம், சென்னைபுதிய உரை
1091962வெ. கண்ணையன்திருக்குறள் பொருட்பால்சென்னபுதிய உரை
1101962க.தி. மாணிக்கவாசகர்வான்புகழ் வள்ளுவர்மதுரைபுதிய உரை
1111965வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார்குறள் மூலமும் பரிமேலழகருரையும்சென்னைபுதிய உரை
1121967செந்துறை முத்துதிருக்குறள் தெளிவான உரைவானதி பதிப்பகம், சென்னைபுதிய உரை
1131967ரா.வே. ருத்திரப்பாதிருக்குறள் மாணவர் பதிப்புஜெயக்குமாரி ஸ்டோர்ஸ், நாகர்கோவில்புதிய உரை
1141968கோ. சாரங்கராசன்திருக்குறள் பாட்டும் கருத்தும்நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னைபுதிய உரை
1151968ஆர். கன்னியப்ப நாயக்கர்திருக்குறள் உரைக்களஞ்சியம் (ஆங்கில மொழிபெயர்ப்புடன்)வானதி பதிப்பகம், சென்னைபுதிய உரை
1161969அ.கு. ஆதித்தர்முப்பது குறளின் மெய்ப்பொருள்----------
1171969ச. சாம்பசிவன்வள்ளுவர் தெள்ளுரைமதுரைத் திருவள்ளுவர் கழகம், மதுரைபுதிய உரை
1181969ஞா. தேவநேயப் பாவாணர்திருக்குறள் தமிழ் மரபுரைசென்னை-----
1191970அழகரடிகள்திருக்குறள் அறத்துப்பால்கழகம், சென்னைபுதிய உரை
1201970கு. சிவமணிதிருக்குறள் கருத்துரைசிவா நிலையம், தஞ்சாவூர்புதிய உரை
1211973ஐயன் பெருமாள் கோனார்திருக்குறள் கோனார் உரைபழநியப்பா பிரதர்ஸ், சென்னைபுதிய உரை

இருபதாம் நூற்றாண்டின் மூன்றாம் கால்நூற்றாண்டில் அச்சேறிய திருக்குறள் உரைகளின் சில பண்புகள்

  • 1951 முதல் 1975 வரையிலான இந்தக் கால கட்டத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. அவை:

-திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றது.
- இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு 1968இல் சென்னையில் நடைபெற்றமை
- மெரினா கடற்கரையில் திருவள்ளுவர் சிலை அமைத்தமை
- தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் இருக்கைகள் அமைத்தமை, சென்னையில் வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டியமை, சட்டமன்றம் கூடும்போது ஒரு குறள் சொல்லித் தொடங்கவேண்டும் என்னும் வரைவு உருவாக்கம் பெற்றமை, அரசுப் பேருந்துகளில் திருக்குறள் எழுதி வைக்கும் அரசு ஆணை உருவாக்கம் பெற்றமை போன்ற திருக்குறள் சார்ந்த நிகழ்வுகள் இக்காலத்தில் நடந்தன. இதனால் திருக்குறள் விழிப்புணர்வு வளர்ந்தது.

  • சென்ற கால்நூற்றாண்டைவிட இந்தக் கால்நூற்றாண்டில் பரிமேலழகர் உரைப் பதிப்புகள் கூடுதலான எண்ணிக்கையில் வெளிவந்துள்ளதைக் காணமுடிகிறது. சில புகழ்வாய்ந்த பதிப்பகங்கள் அந்த உரையை வெளியிட முன்வந்தன. அவை: பி. இரத்தினநாயகர் சன்ஸ் (சென்னை); கழகம் (சென்னை); கஜபதி நாயகர், வள்ளுவர் ஆலயம் (சென்னை); காசிமடம் (திருப்பனந்தாள்); சக்தி காரியாலயம் (சென்னை); அழகுப் பதிப்பகம் (காரைக்குடி); பாரதி பதிப்பகம் (சென்னை); பழநியப்பா பிரதர்ஸ் (சென்னை); வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் (சென்னை); புலியூர்க்கேசிகன், பூம்புகார் பதிப்பகம் (சென்னை).
  • 1960களில் மட்டும் பாரதி பதிப்பகத்தார் பரிமேலழகர் உரையை ஆறு பதிப்புகள் வெளிட்டுள்ளதைக் காண முடிகிறது. இது இக்காலத்தில் அந்த உரைக்கு இருந்த வரவேற்பைக் காட்டுகிறது. பரிமேலழகருரையை எதிர்த்து தனித்தமிழ் இயக்கமும் திராவிட இயக்கமும் கருத்துகளைத் தெரிவித்துவந்த நிலையில், அதனைப் பலரும் அறிய வேண்டும் என்று எண்ணிய எண்ணமும், எதிர்ப்புக்கு எதிரான எண்ணமும் இந்த எண்ணிக்கைப் பெருக்கத்திற்குக் காரணங்களாகி இருக்கலாம்.
  • கிருஷ்ணசாமி நாயுடு, வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார், ஆர். கன்னியப்ப நாயக்கர் ஆகியோர் பரிமேலழகருரையைப் பரப்பும் நோக்கத்துடன் அதன் மறுபதிப்புகளை வெளியிட்டனர்.
  • ஆயினும் இந்த 25 ஆண்டுக்கால கட்டத்தில் வெளியிடப்பட்ட உரைநூல்களுள் பல பரிமேலழகருரையின் அணுகுமுறையினின்று வேறுபட்டுச் செல்கின்ற புதுமுறை உரைகளாக உள்ளன.
  • பரிமேலழகர் உரை தவிர பண்டைய உரையாசிரியர்களான மணக்குடவர், காலிங்கர், பரிப்பெருமாள், பரிதியார் ஆகியோரின் உரைகளும் இக்காலப் பகுதியில் வெளிவந்துள்ளன.
  • வித்துவான் ச. தண்டபாணி தேசிகரின் திருக்குறள் உரைவளம், இரா. சாரங்கபாணியின் திருக்குறள் உரை வேற்றுமைகள், திருப்பனந்தாள் காசிமடம் வெளியிட்ட திருக்குறள் உரைக்கொத்து, கி.வா. ஜகந்நாதனின் திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு, மு. சண்முகம் பிள்ளையின் திருக்குறள் அமைப்பும் முறையும் ஆகியவையும் இக்காலப் பகுதியில் வெளிவந்தன. இவை திருக்குறளை ஒப்பிட்டுப் பார்க்கும் பார்வைக்குத் தூண்டுதலாக அமைந்திருந்தன.
  • தனித்தமிழ் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரின் "திருக்குறள் தமிழ் மரபுரை" என்னும் உரைநூலும் இக்காலப் பகுதியில் வெளியானது. புலவர் குழந்தையின் உரை பல பதிப்புகளாக இக்காலத்தில் வெளிவந்தது.
  • மொத்தத்தில் இந்தக் காலப் பகுதி திருக்குறளுக்கான ஒரு எழுச்சிமிகு காலப் பகுதியாகத் தோற்றம் அளிக்கிறது. திருகுறளுக்கான மூன்றாவது எழுச்சிக் காலப் பகுதியாக இந்தப் பகுதி அமைகிறது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கால் நூற்றாண்டில் அச்சான திருக்குறள் உரைகள்

தொடர் வரிசை எண் அச்சிடப்பட்ட ஆண்டு ஆசிரியர் பெயர் நூல் பெயர்த் தலைப்பு அச்சகம்/பதிப்பகம் குறிப்புகள்
1221978கவிஞர் கண்ணதாசன்திருக்குறள் காமத்துப்பால்----------
1231978எஸ்.என். சிறீராமதேசிகன்திருக்குறள் பொருட்பால் தெளிவுரையுடன்----------
1241981திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர்திருக்குறள் உரைக்களஞ்சியம் - பாயிரவியல்மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-----
1251983திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர்திருக்குறள் உரைக்களஞ்சியம் - இல்லறவியல்மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-----
1261983திருக்குறளார் வீ. முனுசாமிஉலகப் பொதுமறை திருக்குறள் விளக்கம்----------
1271983முனைவர் கு. மோகனராசுமுப்பாலில் முச்சீர் முத்துகள்----------
1281983பி.சி. கணேசன்தினம் ஒரு குறள் விளக்கவுரை----------
1291985மணிமேகலைப் பிரசுரம்திருக்குறள் எளிய உரை----------
1301985இரா. இராசேந்திரன்திருக்குறள் தெளிவுரை----------
1311985எச். வைத்தியநாதன்மணவர்க்கு திருக்குறள் அறத்துப்பால்----------
1321985எச். வைத்தியநாதன்மாணவர்க்கு திருக்குறள் பொருட்பால்----------
1331986சிந்தனைச் செம்மல் கு.ச. ஆனந்தன்திருக்குறள் உண்மைப் பொருள்----------
1341986புலியூர்க் கேசிகன்திருக்குறள் பொழிப்புரையுடன்சென்னை-----
1351986தி. சிறீநிவாசன்திருக்குறள் தெளிவுரையுடன்----------
1361986குறளாயம்தமிழ்மறை இன்பம்----------
1371986திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர்திருக்குறள் உரைக்களஞ்சியம் - துறவறவியலும் ஊழியலும்மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-----
1381987புலவர் மா.க. காமாட்சிநாதன்திருக்குறள் செம்பொருட் சிற்றுரை----------
1391987புலவர் இரா. நாராயணசாமிதிருக்குறள் எளிய உரை----------
1401987டாக்டர் இரா. அருளப்பாதிருக்குறள் புத்தாய்வுமெய்ப்பொருள் பதிப்பகம், சென்னை-----
1411988திருக்குறள் பீடம்திருக்குறள் (அறம் - இனிய கருத்து விளக்கம்)----------
1421989புலவர் அ. ஆறுமுகம்திருக்குறள் சிறப்புரை----------
1431989டாக்டர் பூவண்ணன்திருக்குறள் மூலமும் சிறப்புரையும்----------
1441989ப.கோ. குலசேகரன்திருக்குறள் சிறுவர்க்கான எளிய உரை----------
1451989முனைவர் இரா. சாரங்கபாணிதிருக்குறள் உரைவேற்றுமை - அறத்துப்பால்அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்-----
1461990திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர்திருக்குறள் உரைக்களஞ்சியம் - பொருட்பால்-அரசியல்மதுரை காமராசர் பலகலைக்கழகம், மதுரை-----
1471990திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர்திருக்குறள் உரைக்களஞ்சியம் - காமத்துப்பால்மதுரை காமராசர் பலகலைக்கழகம், மதுரை-----
1481990இரா. இளங்குமரனார்திருக்குறள் வாழ்வியலுரை----------
1491990டாக்டர் ம.வி. சுதாகர்திருக்குறள் தெளிவுரையுடன்----------
1501990முதுபெரும்புலவர் ஆ. பாண்டுரங்கனார்திருக்குறள் தெளிவுரை----------
1511990தவத்திரு தேமொழியார் சுவாமிகள்மாமறை பேசுகிறது - 1,2,3,4,5,6----------
1521990டாக்டர் சுப. அண்ணாமலைதிருக்குறள் சிந்தனைகள் - அறத்துப்பால், பொருட்பால் 1, பொருட்பால் 2, காமத்துப்பால்----------
1531990பூவை கு. அரிஅரன்அக இருள் அகற்றும் அருள்தீபம்----------
1541990முல்லை பி.எல். முத்தையாதிருக்குறள் அறிவுரை----------
1551990டாக்டர் சேயோன்திருவள்ளுவர் ஆத்திசூடி----------
1561991டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன்திருக்குறள் நாவலர் தெளிவுரை----------
1571991முனைவர் வ. சுப. மாணிக்கனார்திருக்குறள் தெளிவுரை----------
1581991டாக்டர் மு.பெரி.மு. இராமசாமிதிருக்குறளுக்கு மிக மிக எளிய உரை----------
1591991ஞா. மாணிக்கவாசகன்திருக்குறள் இனிய உரை - எளிய உரை----------
1601991டாக்டர் எஸ். இராம கிருஷ்ணன்திருக்குறள் ஆய்வுரையுடன்----------
1611991முல்லை பி.எல். முத்தையாதிருக்குறள் முத்துக்கள்----------
1621992வி.பி.சி. பப்ளிகேஷன்திருக்குறள் தெளிவுரை----------
1631992எம். நாராயணவேலுப் பிள்ளைதிருக்குறள் மூலமும் எளிய தமிழில் உரையும்----------
1641992முனைவர் இரா. சாரங்கபாணிதிருக்குறள் உரைவேற்றுமை - பொருட்பால்----------
1651992முனைவர் இரா. சாரங்கபாணிதிருக்குறள் உரைவேற்றுமை - காமத்துப்பால்அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்-----
1661992டாக்டர் சேயோன்திருக்குறள் அமுதமொழி----------
1671993டாக்டர் ந. சுப்புரெட்டியார்திருக்குறள் தெளிவு----------
1681993பேராசிரியர் ப. முருகன்திருக்குறள் திறவுகோல் (இனிய எளிய உரை)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-----
1691993புலவர் சி. இராசியண்ணன்திருக்குறள் எளிய உரை----------
1701993தே. ப. சின்னசாமிதிருக்குறள் மூலமும் உரையும்----------
1711994வ. சண்முகசுந்தரம்திருக்குறள் ஒரு வரி உரை----------
1721994யோகிராஜ் வேதாத்திரி மகரிஷிதிருக்குறள் உட்பொருள் விளக்கம்----------
1731994டாக்டர் ரா. சீனிவாசன்திருக்குறள் செய்திகள்----------
1741994புலவர் அ. மாணிக்கம்திருக்குறள் தெளிவுரை----------
1751994முனைவர் மு. மோகனராசுதிருக்குறள் மக்கள் உரை----------
1761995டாக்டர் ஜனகாசுந்தரம்திருக்குறள் தொகுப்புரை----------
1771995சுஜாதாதிருக்குறள் புதிய உரை----------
1781995புலவரேறு அரிமதி தென்னகன்திருக்குறள் மனித நேய உரை----------\
1791995பூவை அமுதன்திருக்குறள் எளிய தெளிவுரையுடன்----------
1801995கலைமாமணி டாக்டர் வாசவன்திருக்குறள் தெளிவுரை----------
1811995தமிழ் வேட்பன்திருக்குறள் எளிய தெளிவுரை----------
1821995பேராசிரியர் எம்மார் அடைக்கலசாமிதிருக்குறள் மூலமும் உரையும்----------
1831996திருக்குறள் இராம. கனகசுப்புரத்தினம்திருக்குறள் உணர்வுரை----------
1841996கலைஞர் மு. கருணாநிதிதிருக்குறள் கலைஞர் உரைசென்னை-----
1851996வே. கபிலன்திருக்குறள் எளிய உரை----------
1861996புலவர் து. அரங்கன்திருக்குறள் கருத்துரை----------
1871996பாவண்கிள்ளிதிருக்குறள் புதிய தெளிவுரை----------
1881996திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர்திருக்குறள் உரைக்களஞ்சியம் - பொருள்பால்-அங்கவியல் 1மதுரை காமராசர் பலகலைக்கழகம், மதுரை-----
1891997சி. வெற்றிவேல்திருக்குறள் ஒரு வரி உரை----------
1901997பாவலரேறு பெருஞ்சித்திரனார்பெருஞ்சித்திரனார் திருக்குறள் மெய்ப்பொருளுரை----------
1911997முனைவர் அ. சங்கரவள்ளிநாயகம்திருக்குறள் விரிவுரை----------
1921997பாவலர் முல்லைவேந்தன்திருக்குறள் தெளிபொருள் பொழிப்புரை----------
1931997கவிஞர் க. பாலகிருஷ்ணன்திருக்குறள் பேச்சுத் தமிழ் உரை----------
1941997முல்லை பி. எல். முத்தையாதிருக்குறள் கூறும் இன்ப வாழ்க்கை----------
1951998தமிழவேள் இராம சுப்பிரமணியன்திருக்குறள் தெளிவுரை----------
1961998கோ. பார்த்தசாரதிதிருக்குறள் தெளிவுரை----------
1971998நா. விவேகானந்தன்திருக்குறள் தெளிவுரைவிவேகானந்தா பதிப்பகம், மேலச்சூரங்குடி-----
1981998முனைவர் இரா. சாரங்கபாணிதிருக்குறள் இயல்புரை----------
1991999புலவர் நாக. சண்முகம்திருக்குறள் மூலமும் உரையும்----------
2001999நல்லாமூர் கோ. பெரியண்ணன்திருக்குறள் மாணவர் எளிய உரை----------
2011999திருக்குறள் மு. அன்வர் பாட்சாதிருக்குறள் தமிழ் ஆங்கில உரை----------
2021999டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்உலகப் பொதுமறை----------
2031999தமிழண்ணல்திருவள்ளுவர் அருளிய திருக்குறள் நுண்பொருளுரை----------
2041999மேலகரம் முத்துராமன்திருக்குறள் ஒரு வரி உரை----------
2051999பேராசிரியர் கருவை பழனிசாமிதிருக்குறள் கருத்து நயம் (அறத்துப்பால்)----------
2061999பேராசிரியர் கருவை பழனிசாமிதிருக்குறள் பொருட்பால் கருத்து நயம்----------
2071999டாக்டர் சாலமன் பாப்பையாதிருக்குறள் உரையுடன்ஜெயா பதிப்பகம், மதுரை-----
2081999திருத்தணிகை ச. தண்டபாணி தேசிகர்திருக்குறள் உரைக்களஞ்சியம் - பொருள்பால்-அங்கவியல் 2மதுரை காமராசர் பலகலைக்கழகம், மதுரை-----
2092000புலவர் கருப்பூர் மு. அண்ணாமலைதிருக்குறள் தெளிவுரை----------
2102000புலவர் தனுஷ்கோடிதிருக்குறள் எளிய தெளிவுரை----------
2112000கவிமாமணி கல்லாடன்திருக்குறள் உரைக்கனிகள்----------
2122000ராதா முரளிதிருக்குறள் மூலமும் உரையும்----------
2132000திருக்குறள் விருகை ஆடலரசுதிருக்குறள் விளக்க உரை----------
2142000நா.சி. கமலநாதன்திருக்குறள் புதிய உரை (அறத்துப்பால்)----------
2152000டாக்டர் சு. சண்முகசுந்தரம்திருக்குறள் காவ்யா உரைசென்னை-----
2162000பேராசிரியர் பே.சு. கோவிந்தராசன்உலகப் பொதுமறை திருக்குறள்----------
2172000கவிஞர் பவானிதாசன்உலகப் பொதுமறை திருக்குறள்----------
2182000டாக்டர். எஸ். நவராஜ் செல்லையாதிருக்குறள் புதிய உரை----------
2192000நேரு குமாரிதிருக்குறள் ஒரு வரி உரை----------
2202000ஆசி. கண்ணாம்பிரத்தினம்திருக்குறள் ஒரு வரி உரை----------
2212000குமரி. சு. நிலகண்டன்திருக்குறள் 2000----------
2222000முனைவர் அ. ஆறுமுகம்மணிக்குறள் நூறு விளக்க உரை----------
2232000கிள்நாமக்காரர் கிரீடாதிதிருக்குறள் உயிர் தமிழ்----------
2242000கருமலைத் தமிழாழன்திருக்குறள் எளிய உரை----------
2252000முனைவர் அர. சிங்காரவேலன்திருக்குறள் தெளிவுரை----------
2262000ஆரூர் தாஸ்அய்யன் திருக்குறள் அகரவரிசைக் குறள் அகராதி----------
2272000இராஜகாந்தீபன்ஆளவும் வாழவும்----------
2282000மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்திருக்குறள் தமிழ் மரபுரைசிறீஇந்து பப்ளிகேஷன்ஸ், சென்னைமறுபதிப்பு

இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கால் நூற்றாண்டில் அச்சான திருக்குறள் உரைகளின் சில பண்புகள்

  • 1976-2000 ஆண்டுக் கால கட்டத்தில் திருக்குறள் சார்ந்த பல நிகழ்வுகள் நடந்தன. அவற்றுள் சிலவற்றைக் குறிப்பிடலாம். மதுரையில் 1981இலும் தஞ்சையில் 1995இலும் உலகத் தமிழ் மாநாடுகள் நடந்தேறின. 1976இல் வள்ளுவர் கோட்டம் திறந்துவைக்கப்பட்டது. திருக்குறள் பேரவை, குறளாயம், உலகத் திருக்குறள் மையம் என்னும் அமைப்புகள் தோன்றின. தமிழக அரசு திருக்குறள் ஆய்வில் சிறந்த சான்றோருக்கு திருவள்ளுவர் விருது வழங்குவதாக 1986இல் அறிவித்தது. 2000ஆம் ஆண்டில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களிடையே திருக்குறள் பற்றிய ஆர்வத்தைத் தூண்டியெழுப்பும் காரணிகள் ஆயின.
  • பரிமேலழகர் உரைகள் சில இக்காலத்தில் வெளிவந்தாலும், புதிய உரைகள் மிகப்பல இக்காலத்தில் வெளியிடப்பட்டன. மேலும் பண்டைய உரையாசிரியர்களை ஒப்பிட்டு நோக்கும் நூல்களும் வெளியிடப்பட்டன.
  • மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகரின் "திருக்குறள் உரைக்களஞ்சியம்" ஏழு தொகுதிகளாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழி வெளிவந்தது. முனைவர் இரா. சாரங்கபாணியின் "திருக்குறள் உரைவேற்றுமை" மூன்று தொகுதிகளாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழி வெளிவந்தது. இவை இரண்டு தொகுப்புகளும் முன்பு வந்த தொகுப்பாய்வுகளின் விரிநிலைகளாகும். இந்தத் தொகுப்புரைகள் வெளிவந்துள்ளதால், பழைய உரையாசிரியப் பெருமக்களின் உரைகளை வெளியிடும் பதிப்புகள் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
  • ஏறத்தாழ 90 அறிஞர்கள் இக்காலப் பகுதியில் திருக்குறள் புத்துரைகள் வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்தக் காலப்பகுதியைப் புத்துரைகளின் எழுச்சிக் காலம் என்று கூறலாம். இவற்றுள் சமயச் சார்புரைகளும் கடவுள் மறுப்புக் கோட்பாட்டர்கள் உரைகளும் அடங்கும்.

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் திருக்குறள் உரைகள்

தொடர் வரிசை எண் அச்சிடப்பட்ட ஆண்டு ஆசிரியர் பெயர் நூல் பெயர்த் தலைப்பு அச்சகம்/பதிப்பகம் குறிப்புகள்
2292001முனைவர் ச.வே. சுப்பிரமணியன்திருக்குறள் நயவுரை----------
2302001ஆர். பொன்னம்மாள்திருக்குறள்----------
2312001கவி. குறளேழுவர்அணிநலம் கொழிக்கும் திருக்குறள்----------
2322001புலவர் குடந்தையான்திருக்குறள் ஒரு பகுத்தறிவுப் பார்வைபல்லவநாதம் இலக்கிய வெளியீடு, சென்னை-----
2332002புலவர் வ. சங்கரன்திருக்குறள் தெளிபொருள்----------
2342002புலவர் ஆ. காளத்திதிருக்குறள் தெளிவுரை----------
2352002முனைவர் செ. உலகநாதன்திருக்குறள் செந்தமிழ் உரை----------
2362002அழகர் சுப்பராஜ்திருக்குறள் அறிவுரை----------
2372002ஜெ. நாராயணசாமிதிருக்குறள் ஆங்கில உரையுடன்சுரா புக்ஸ், சென்னை-----
2382002எஸ். கெளமாரீஸ்வரிதிருக்குறள் பரிமேலழகர் உரைசாரதா பதிப்பகம், சென்னை-----
2392003டாக்டர் பெ. கிருஷ்ணன்திருக்குறள் தெளிவுரை----------
2402003பகலவன்திருக்குறள் கருத்துரை----------
2412003புலவர் கோ. இளையபெருமாள்எளிய உரையில் உலகப் பொதுமறை----------
2422003தொ. பரமசிவன்திருக்குறள்----------
2432003அ.மா. சாமிதிருக்குறள் செம்பதிப்பு (கருத்துரை)நவமணி பதிப்பகம், சென்னை-----
2442003கே. சேதுராமன்திருக்குறள் அறத்துப்பால் ஆராய்ச்சி விளக்க உரை----------
2452003முல்லை பி.எல். முத்தையாதிருக்குறள் எளிய தமிழ் உரையுடன்----------
2462003ச. மெய்யப்பன் (பதிப்பாசிரியர்)திருக்குறள் - மணக்குடவர் உரைமணிவாசகர் பதிப்பகம், சென்னை-----
2472004டாக்டர் கே. என். சரஸ்வதி, பேராசியர் பா. அர்த்தநாரீஸ்வரர்தெய்வப்புலவர் அருளிய திருக்குறள் எளிய உரையுடன்----------
2482004ஆர்.பி. சாரதிதிருக்குறள் மிக எளிய உரை----------
2492004சாரதா பதிப்பகம்திருக்குறள் எளிய உரை----------
2502004முனைவர் சுந்தர ஆவுடையப்பன்திருக்குறள் எளிய உரை----------
2512004பொற்கோதிருக்குறள் அறத்துப்பால்----------
2522004பொற்கோதிருக்குறள் பொருட்பால் 1----------
2532004பொற்கோதிருக்குறள் பொருட்பால் 2----------
2542004பொற்கோதிருக்குறள் காமத்துப்பால்----------
2552004ஈசாந்திமங்கலம் முருகேசன்திருக்குறள் எளிய உரை----------
2562005முனைவர் பா. வளன் அரசுதிருக்குறள் விளக்கம்----------
2572005தமிழ்மறையான்திரிக்குறள் - திருக்குறள்----------
2582005திருக்குறள் நம்பி தங்க. பழமலைதிருக்குறள் நயவுரை----------
2592006பேராசிரியர் சாலமன் பாப்பையாதிருக்குறள் உரையுடன்கவிதா பப்ளிகேஷன், சென்னைதிருத்திய முதல் பதிப்பு
2602006க.ப. அறவாணன்திருவள்ளுவம்தமிழ்க் கோட்டம், சென்னை-----

இருபத்தொன்றாம் நூற்றாண்டின் திருக்குறள் உரைகளின் சில பண்புகள்

  • 2001-2006 காலகட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட சான்றோர்கள் திருக்குறளுக்குப் புதிதாக உரைகள் எழுதியுள்ளனர். பழைய உரைகளுள் பரிமேலழகர் உரை மட்டும் சில பதிப்புகள் வெளிவந்துள்ளன.

10ஆம் நூற்றாண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை திருக்குறளுக்கு உரை எழுதியோரின் தொகுப்புப் பட்டியல்

வரிசை எண் 10 முதல் 13ஆம் நூற்றாண்டுகள் உட்பட 14 முதல் 18ஆம் நூற்றாண்டுகள் வரை 1801 முதல் 1900 வரை 1900 முதல் 2000 வரை 2001 முதல் 2005 வரை 2006ஆம் ஆண்டு; விபரங்கள் கிடைக்கப்பெறாதவர்கள்
1பண்டைக்கால உரையாசிரியர்கள் 10 பேர்: மணக்குடவர், பரிதியார், பரிப்பெருமாள், காளிங்கர், பரிமேழகர் (உரை கிடைக்கப்பெற்றவர்கள்), தருமர், தாமத்தர், நச்சர், மல்லர், திருமலையர் (உரை கிடைக்கப்பெறாதவர்கள்)-------------------------
2-----4 உரையாசிரியர்கள்--------------------
3----------8 உரையாசிரியர்கள்--------------
4---------------1901-1910: 3 உரையாசிரியர்கள்; 1911-1920: 1 உரையாசிரியர்; 1921-1930: 6 உரையாசிரியர்கள்; 1931-1940: 7 உரையாசிரியர்கள்; 1941-1950: 13 உரையாசிரியர்கள்; 1951-1960: 24 உரையாசிரியர்கள்; 1961-1970: 13 உரையாசிரியர்கள்; 1971-1980: 3 உரையாசிரியர்கள்; 1981-1990: 24 உரையாசிரியர்கள்; 1991-2000: 63 உரையாசிரியர்கள்----------
5-------------------22 உரையாசிரியர்கள்-----
6-------------------------1 உரையாசிரியர்
7-------------------------விபரங்கள் கிடைக்கப்பெறாதவர்கள்: 18. ஆக, மொத்த உரையாசிரியர்கள்: 220
குறிப்புகள்
  • 1901 முதல் 1920 வரையிலான காலப்பகுதியில் பரிமேலழகர் உரைக்குப் பெரும் மதிப்பிருந்த காரணத்தால் புதிய உரையாசிரியர்கள் அதிகமாக உருவாக்கம் பெறவில்லை.
  • 1971 முதல் 1980 வரையிலான காலத்தில் உரையாசிரியர்கள் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி காணப்படுகிறது. இதற்கு அக்காலப் பகுதியில் நிலவிய அரசியல் போக்குகளே பெரும் காரணங்கள் என்று கூறலாம்.

ஆதாரம்

  1. திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, திருக்குறள் உரை வகைகள், மணிவாசகர் பதிப்பகம், 31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600108. முதல் பதிப்பு: செப்டம்பர் 2005.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.