திருக்குறள் வைப்புமுறை

திருக்குறள் 133 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துப் பாடல்கள் உள்ளன. இந்தப் பத்தைத் திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர்கள் வரிசைப்படுத்திக்கொள்வதில் மாறுபடுகின்றனர். ஒரு அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களை வரிசைப்படுத்தும் முறை வைப்பு முறை ஆகும். இக்காலத்தில் நாம் கையாளும் பதிப்புகள் பரிமேலழகர் வைப்பு முறையைப் பின்பற்றியுள்ளன.

எடுத்துக்காட்டுக்கு அன்புடைமை என்னும் அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களின் வெவ்வேறு வைப்புமுறை வரிசையை நோக்குவோம்.

மணக்குடவர் 12ஆம் நூற்றாண்டுபரிதியார் 13ஆம் நூற்றாண்டுகாலிங்கர் 13ஆம் நூற்றாண்டுபரிப்பெருமாள் 13ஆம் நூற்றாண்டுபரிமேலழகர் 13ஆம் நூற்றாண்டுதிருக்குறள் முதற்குறிப்பு
1083-1அன்பிற்கும் உண்டோ
597-2அன்பிலார் எல்லாம்
658-3அன்போடு இயைந்த
866-4அன்பீனும்
775-5அன்புற்(று) அமர்ந்த
9109-6அறத்திற்கே அன்பு
111-7என்பில் அதனை
222-8அன்பகத் தில்லா
334-9புறத்துறுப்(பு) எல்லாம்
4410-10அன்பின் வழியது

கருவிநூல்

  • திருக்குறள் உரைக்கொத்து, தா. ம. வெள்ளைவாரணம் பதிப்பு, திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் வெளியீடு, 1983
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.