சேத்திர வெண்பா

சேத்திர வெண்பா பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.

சிவத்தளி வெண்பா என்றும் க்ஷேத்திர திருவெண்பா வழங்கப்படுகின்றது.[1]

இதனைப் பாடிய ஐயடிகள் காடவர் கோமான் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இதில் 24 வெண்பாக்கள் உள்ளன.

  1. இராமேசுவரம் (திருவரச்சிராமேசுவரம்)
  2. ஒற்றியூர்
  3. கச்சி ஏகம்பம்
  4. குழித்தண்டலை (குளித்தலை)
  5. சாய்க்காடு
  6. சிராமலை
  7. சேனைமாகாளம்
  1. திருவாப்பாடி (கொள்ளிடத்தின் தென்திருவாப்பாடி)
  2. திருக்கோடிக்கா
  3. திருத்துருத்தி
  4. திருப்பனந்தாள்
  5. திருமயம்
  6. திருமழப்பாடி
  7. திருவாரூர்
  1. திருவையாறு
  2. தில்லைச்சிற்றம்பலம்
  3. தென்குடந்தைக் கீழ்க்கோட்டம்
  4. தென்னிடைவாய்
  5. திருநெடுங்குளம்
  6. மயிலை
  7. வளைகுளம்

ஆகிய ஊர்களிலுள்ள சிவனை வழிபட்டு இவர் பாடியுள்ளார்.

காலம் கணித்த கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
  1. http://www.tamilvu.org/courses/degree/a041/a0412/html/a0412332.htm
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.