உதாத்தவணி

உதாத்தவணி அல்லது உதாத்த அணி என்பது செல்வ மிகுதியையும் மேம்பட்ட உள்ளத்தின் மிகுதியையும் வியந்து கூறுவது எனப்படும்.

குறிப்பு

"வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும்
உயர்ச்சிபுனைந் துரைப்ப(து) உதாத்த மாகும்." என்கிறது தண்டியலங்காரம் 52-வது பாடல்.

வகைகள்

உதாத்தவணி பின்குறிப்பிட்டவாறு இருவகைப்படும்:

  1. செல்வ மிகுதியைக்கூறுவது "செல்வமிகுதி உதாத்தவணி"
  2. உள்ளத்தின் உயர்வினை வியந்து கூறுவது "உள்ள மிகுதி உதாத்தவணி"

வேறு பெயர்கள்

உள்ள மிகுதி உதாத்தவணியினை வீறுகோளணி என்றும் அழைப்பர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.