அணிகலன்
அணிகலன் (



அணிகலன்கள் அழகுக்காகவே பெரும்பாலும் அணியப்படுகின்றன எனினும், சமூக மதிப்பு, பல்வேறு வகையான நம்பிக்கைகள் என்பனவும் அணிகலன்கள் அணியப்படுவதற்கான காரணங்களாக அமைகின்றன. சில சமுதாயங்களில் இன்னின்ன சாதியைச் சேர்ந்தவர்கள் இந்த இந்த அணிகலன்களையே அணிய முடியும் என்ற கட்டுப்பாடுகளும் இருந்ததாகத் தெரிகிறது. ஆண்களுக்கு உரியவை, பெண்களுக்கு உரியவை என்ற அடிப்படையில் அணிகலன்கள் வேறுபாடாக அமைவது ஒருபுறம் இருக்க, வயதுக்கு ஏற்றபடியும் அணிகலன்கள் வேறுபட்டு அமைவதைக் காணலாம். திருமணம் போன்ற நிகழ்வுகளில் மணப்பெண்ணையும், மாப்பிள்ளையையும் சிறப்பு அணிகலன்களைக் கொண்டு அழகுபடுத்துவது வழக்கம். நாடகங்கள், நடனங்கள் போன்றவற்றில் பங்கு பெறுகின்றவர்களும் பலவகையான சிறப்பு அணிகலன்களை அணிகிறார்கள்.
இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அணிகலன்கள் மக்களின் வாழ்க்கையோடு சிறப்பாகப் பெண்களின் வாழ்க்கையோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளன. பிறந்தது முதல் வாழ்வில் பல்வேறு கட்டங்களிலும் இடம்பெறக்கூடிய சடங்குகளில் அணிகலன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.
தொல்பழங் காலத்திலிருந்தே மனிதர்கள் அணிகலன்களை அணிந்தமைக்கான தொல்லியல் சான்றுகள் ஏராளமாக உள்ளன. பெண்களே கூடுதலாக அணிகலன்களின்பால் கவரப்படுகின்றனர் என நம்பப்படினும் ஆண்கள், பெண்கள் இருபாலாருமே அணிகலன்களை அணிந்திருக்கிறார்கள் இப்பொழுதும் அணிகிறார்கள். உடலின் பல்வேறு உறுப்புக்களிலும் அணிகலன்கள் அணியப்படுவதோடு அவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பெயர்களும் உள்ளன.
மேற்கோள்கள்
- Study reveals 'oldest jewellery', BBC News, June 22, 2006.