தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு
'"தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு'" (ஆங்கிலம் : Devendra Kula Vellalar Federation) ஒரு தமிழ் நாட்டு அரசியல் கட்சியாகும். இக்கட்சி பெரும்பாலும் தேவேந்திர குல வேளாளர் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் சி. பசுபதி பாண்டியன் ஆவார்
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு | |
---|---|
தலைவர் | சி. பசுபதி பாண்டியன் |
தொடக்கம் | சூன் 12 , 1993 |
தலைமையகம் | தூத்துக்குடி மாவட்டம் |
கொள்கை | பள்ளர், தேவேந்திரர் சமூதாய முன்னேற்றத்திற்காக |
வரலாறு
இது 1993 ஆம் ஆண்டு , சூன் 12 அன்று சி. பசுபதி பாண்டியன் என்பவரால் துவங்கப்பட்டது. [1] இக் கட்சியானது கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புக் கட்சி போட்டியிட்டுள்ளது. மேலும் சனவரி 10 , 2012 அன்று திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் பசுபதி பாண்டியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் மறைவிற்குப் பிறகு தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரைச் சார்ந்த பா. ராஜேந்திரன் மாநிலச் செயல் தலைவராக செயல்பட்டு வருகிறார்.[2]
கட்சியின் கொள்கைகள்
- தேவேந்திர குலத்தின் உட்பிரிவுகளான பள்ளர், குடும்பன், தேவேந்திர குலத்தார் காலாடி, பண்ணாடி, கடையன், வயக்காரன், வாதிரியான், மூப்பன்.இவை அனைத்தயும் ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசு ஆணை வழங்க வேண்டும்.
- இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவக் கொண்டாட வேண்டும்.
- மதுரையில் குறிப்பிட்ட இடத்தில் சுந்தரலிங்கத்தின் முழு உருவ சிலை திறக்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்துள்ளர்.[3]
ஆதாரங்கள்
- "தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு உதயமான நாள்". India Retailing. பார்த்த நாள் 2012-08-13.
- "தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் புதிய தலைவராக திருமதி சி.பார்வதி சண்முகசாமி தேர்வு". India Retailing. பார்த்த நாள் 2012-08-13.
- "தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்புப்பின் கொள்கைகள்". India Retailing. பார்த்த நாள் 2012-07-27.