தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தமிழக அரசியல் கட்சியாகும். இக்கட்சி 2001ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி கோவையில் உ. தனியரசு என்பவரால் உருவாக்கப்பட்டது.[1] இந்த அமைப்பு 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இந்த அமைப்பின் நிறுவன அமைப்பாளரான உ. தனியரசு பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3]

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
தலைவர்உ.தனியரசு
தொடக்கம்மார்ச் 14 2001, கோவை, தமிழ்நாடு, இந்தியா.
தலைமையகம்கொங்கு அறிவாலயம், 4/127, பல்லடம் சாலை, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு.
கொள்கைதமிழ் மொழி பற்று, தமிழ் சமூக ஒருங்கிணைப்பு
கூட்டணி2011அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
இணையதளம்
www.thaniyarasu.in

கொடி

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு என பச்சை சிவப்பு வர்ணத்தில் அதன் நடுவில் புலி சின்னமும் கொண்டு கொடியை உருவாக்கி அதனை கோவையில் உ.தனியரசு அவர்கள் 2001ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் நாள் ஏற்றினார்.

மேற்கோள்கள்

  1. https://www.maalaimalar.com/News/TopNews/2016/08/23110659/1034144/thaniyarasu-mla-brother-house-petrol-bombing.vpf
  2. https://tamil.oneindia.com/news/tamilnadu/bio-datas-thiruppur-dist-admk-candidates-252105.html
  3. http://m.dinamalar.com/detail.php?id=1451355
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.