மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா

மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா (Mangalampalli Balamuralikrishna, தெலுங்கு: మంగళంపల్లి బాలమురళీకృష్ణ, சூலை 6, 1930 - நவம்பர் 22, 2016) ஒரு இந்திய கருநாடக இசைப் பாடகர், இசை மேதை, பல்-வாத்தியக் கலைஞர், பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், வாக்கேயக்காரர், குணசித்திர நடிகர் என பல திறப்பட்ட கலைஞராவார்.[1]

எம். பாலமுரளிகிருஷ்ணா
M. Balamuralikrishna
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்மங்கலம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா
பிறப்புசூலை 6, 1930(1930-07-06)
சங்கரகுப்தம், கிழக்கு கோதாவரி மாவட்டம்,
சென்னை மாகாணம் (இன்றைய ஆந்திரப் பிரதேசம்)
இறப்பு22 நவம்பர் 2016(2016-11-22) (அகவை 86)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)வியோலம்
மிருதங்கம்
கஞ்சிரா
இசைத்துறையில்1938–2016

தென்னிந்திய மொழிகள் உட்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடும் திறமையுடன் விளங்கியவர்.

இளமைப் பருவம்

முரளிகிருஷ்ணா கிழக்குக் கோதாவரி மாவட்டத்திலுள்ள சங்கர குப்தம் எனும் ஊரில் பிறந்தார். இசைக் கலைஞர்களான பட்டாபிராமையா - சூர்யகாந்தம்மா ஆகியோர் இவரது பெற்றோராவர். இவரது தந்தை பட்டாபிராமையா ஒரு புல்லாங்குழல் வித்வான். தாயார் வீணை வாசிப்பார். இவரது தாத்தா கூட ஒரு இசைக்கலைஞர்தான்.

தியாகராஜரின் மாணவர் பரம்பரையில் 4ஆவதாக வந்தவர் எனும் பெருமை பாலமுரளிகிருஷ்ணாவுக்கு உண்டு. தியாகராஜரின் நேரடி மாணவர், மானம்புச்சாவடி வேங்கடசுப்பையர். அவரிடமிருந்து தட்சிணாமூர்த்தி சாஸ்திரி, பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலு என பரம்பரை தொடர்ந்தது. பாருபள்ளி ராமகிருஷ்ண பந்துலுவிடம் பாலமுரளிகிருஷ்ணா முறையாக கருநாடக இசை கற்றார்.[2]

முரளிகிருஷ்ணா முதன்முதலாகத் தனது ஒன்பதாவது வயதில் இசைக்கச்சேரி செய்தார். தனது சிறு வயதிலேயே இசை மேதை எனப் பெயர் பெற்றார். ஹரிகதை மேதை முசூநுரி சூர்யநாராயண மூர்த்தி இவருக்கு பால என்ற பெயரை சேர்த்து அழைத்ததன் பின்னர் பாலமுரளிகிருஷ்ணா என அழைக்கப்பட்டார். சென்னை அனைத்திந்திய வானொலி, இவர் ஒரு குழந்தைக் கலைஞராக இருந்தபோதே தனது முதல்தர இசைக் கலைஞர் பட்டியலில் (A Grade) இவரையும் சேர்த்தது.[3]

திருவையாறு தியாகராஜ சுவாமி உற்சவத்தில் தனது பதினோராவது வயதிலேயே ஒன்றரை மணி நேரம் பாடியிருக்கிறார். இவருக்காக பெரிய இசை வித்வான்களாகிய பெங்களூர் நாகரத்தினம்மாள், அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோர் தங்கள் நேரத்தை விட்டுக் கொடுத்தார்கள்.[4]

கருநாடக இசைக்கான பங்களிப்புகள்

பாடகராக

2006ஆம் ஆண்டு மார்ச் 29 அன்று குவைத்தில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய கச்சேரி. அப்போது அவருக்கு வயது 76.

தனது வாழ்நாளில் ஏறத்தாழ 25,000 கச்சேரிகளை உலகம் முழுவதும் நிகழ்த்தினார்.[5]

தூர்தர்சன் தொலைக்காட்சியின் புகழ்மிக்க காணொளிப் பாடலான மிலே சுர் மேரா தும்ஹாரா எனும் பாடலில் பாலமுரளிகிருஷ்ணா பங்களித்தார். இந்த தேசபக்திப் பாடலில், தமிழ்ப் பாடல் வரிகளை இவர் பாடினார்.

வயலின் இசைக் கலைஞராக

அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் சந்தானம், ஜி. என். பாலசுப்பிரமணியம் ஆகிய முன்னணிக் கலைஞர்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்திருந்தார்.[6]

பாலமுரளிகிருஷ்ணா தனது தந்தை வயலின் வாசிப்பதை கவனித்து வந்து வயலின் வாசிப்பினை கற்றுக் கொண்டவர். தனது இளம்பிராய வயதில், குரல் மாறி பாடுவதற்கு கடினமாக இருந்த காலத்தில் அதிகளவு வயலின் வாசித்து நன்கு கற்றுக் கொண்டார்.

வயோலா, புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் எனும் வாத்தியங்களை இசைக்கும் திறன் கொண்டவராகவும் இருந்தார்.

வாக்கேயக்காரராக

இவர் 72 மேளகர்த்தா உருப்படிகள் உருவாக்கம் செய்திருக்கிறார். மற்றவர்கள் இதுவரை உருவாக்கி எடுத்தாளாத இராகங்களை இயற்றிப் பாடியிருக்கிறார்.

சுமூகம் (நான்கு சுவரங்கள் கொண்ட ராகங்கள்), மகதி (நான்கு சுவரங்கள்), சர்வஸ்ரீ (மூன்று ), ஓம்காரி (மூன்று சுவரங்கள்), பிரதிமத்தியமாவதி, வல்லபி, ரோகினி, லவங்கி, மோகனாங்கி, தொரே போன்ற ராகங்களை உருவாக்கினார்.

இயற்றிய கீர்த்தனங்கள்

கீர்த்தனைராகம்வகைகுறிப்புகள்
ஓங்கார ப்ரணவசண்முகப்பிரியாபத வர்ணம்
அம்மா அனந்த தாயினிகம்பீரநாட்டைபத வர்ணம்
ஏ நாதமுநாட்டைவர்ணம்
சலமு சேசினராமப்பிரியாவர்ணம்
ஆ பால கோபாலமுஅமிர்தவர்ஷினிவர்ணம்
நினு நேர நம்மதிகரஹரப்பிரியாவர்ணம்
ஸ்ரீ சகல கணாதிப பாலயமாம்ஆரபிகிருதிகணபதி, மாருதி, கிருஷ்ணா மீது மூன்று பல்லவிகள்
மகாதேவசுதம்ஆரபிகிருதிகணபதி மீது
கங் கங் கணபதீம்கணபதிகிருதிகணபதி மீது - ச, க, ப என்ற மூன்று ஸ்வரங்களுடன் அமைந்த ராகம்
கணாதிபாம்நாட்டைகிருதிகணபதி மீது
பிறை அணியும் பெருமான்ஹம்சத்வனிகிருதிகணபதி மீது
உமா சுதம் நமாமிசர்வஸ்ரீகிருதிகணபதி மீது - ச, ம, ப என்ற மூன்று ஸ்வரங்களுடன் அமைந்த ராகம்
மஹநீய நமசுலிவேசுமுகம்கிருதிகணபதி மீது - ச, ரி, ம, நி ஆகிய ஸ்வரங்களைக் கொண்ட ராகம்
ஓங்கார காரிணிலவங்கிகிருதிச, ரி, ம, த என்ற நான்கு ஸ்வரங்களைக் கொண்ட ராகம்
சித்தி நாயகனேஅமிர்தவர்ஷினிகிருதிகணபதி மீது
சித்திம் தேஹி மேசித்திகிருதிகணபதி மீது - ச, ரி, த என்ற மூன்று ஸ்வரங்களுடன் அமைந்த ராகம்
ஹீர கணபதிக்கிசுருட்டிகிருதிகணபதி மீது
மஹநீய மதுர மூர்த்தேமஹதிகிருதிகுரு வந்தனம் - ச, க, ப, நி என்ற நான்கு ஸ்வரங்களுடன் அமைந்த ராகம்
குருநி ஸ்மரிம்புமோஹம்சவிநோதினிகிருதிகுரு வந்தனம்
வருக வருகபந்துவராளிகிருதிமுருகன் மீது
துணை நீயேசாருகேசிகிருதிமுருகன் மீது
நீ தய ராதாபூர்விகல்யாணிகிருதிஅம்பிகை மீது
கதி நீவேகல்யாணிகிருதிஅம்பிகை மீது
சிவ கங்காநாகஸ்வராளிகிருதிஅம்பிகை மீது
மா மாநினிஹனுமதோடிகிருதிஅம்பிகை மீது ஸ்வர சாகித்யம்
அம்ம நின்னுகோரிகமாஸ்கிருதிஅம்பிகை மீது
கான மாலிஞ்சிகல்யாண வசந்தம்கிருதிஅம்பிகை மீது
சதா தவ பாதசண்முகப்ரியாகிருதிசிவன் மீது
ப்ருஹதீஸ்வரகானடாகிருதிதஞ்சாவூர் பிருகதீஸ்வரர் மீது
திரிபுர தர்ப்பாசிவன் மீது மங்களம்
கமல தலாயதாபஹுதாரிகிருதிநேத்ர சௌந்தர்யா மீது
தில்லானாபிருந்தாவனிதில்லானா
தில்லானாசக்கரவாகம்தில்லானா
தில்லானாத்வஜாவந்திதில்லானாதமிழ் சரணம்
தில்லானாகுந்தவராளிதில்லானாதமிழ், தெலுங்கு சரணம்
தில்லானாகதனகுதூகலம்தில்லானா
தில்லானாகருடத்வனிதில்லானாபாணிணி சூத்ர மேற்கோள்
தில்லானாபெஹாக்தில்லானாஸ்ரீ தியாகராஜர் மீது
தில்லானாராகமாலிகைதில்லானாஅமிர்தவர்ஷினி, மோகனம், கானடா, ஹிந்தோளம்
தில்லானாராகமாலிகைதில்லானாதயா ராகமாலிகை, ஸ்ருதி பேதத்தை அடிப்படையாகக் கொண்டது
தில்லானாராகமாலிகைதில்லானாபஞ்ச ப்ரியா ராகங்கள், கதி பேதத்துடன்
மாமவ கான லோலாரோஹினிகிருதிஇரண்டு மத்யமத்தைக் கொண்ட ராகம்
கான லோலராகமாலிகைகிருதிதிருப்பதி வேங்கடேசர் மீது
சங்கீதமேகல்யாணிகிருதிஇசையைப் பற்றியது
நீ சாதி நீவேசந்திரிகாகிருதிரங்கநாதர் மீது
சங்கராபரண சயனுதாதீரசங்கராபரணம்கிருதிரங்கநாதர் மீது
வேகமேஆபோகிகிருதிரங்கநாதர் மீது
ஹனுமாசரசாங்கிகிருதிஅனுமான் மீது
வந்தே மாதரம்ரஞ்சனிகிருதிபாரத மாதா மீது
கான சுதா ரசநாட்டைகிருதிஸ்ரீ தியாகராஜர் மீது
சாம கணஅமிர்தவர்ஷினிகிருதிஸ்ரீ தியாகராஜர் மீது
மரகத சிம்ஹாசனசிம்மேந்திர மத்திமம்கிருதியதகிரி நரசிம்மர் மீது
சிம்ஹ ரூப தேவாகாம்போதிகிருதிநரசிம்மர் மீது
ராஜ ராஜதீர சங்கராபரணம்கிருதிஸ்ரீ ராகவேந்திரர் மீது
சிந்தயாமி சட்டதம் ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதம்சுசரித்ரகிருதிமுத்துசுவாமி தீட்சிதர் மீது
அம்பமாமவராகமாலிகைகிருதிரஞ்சனி - நிரஞ்சனி - ஜனரஞ்சனி (ராகங்கள்)
பங்காரு முரளி ஸ்ரிங்கார ராவளிநீலாம்பரிகிருதி
பாவ மே மகா பாக்யமுராகாபிகிருதிஸ்ரீ தியாகராஜரிலிருந்து பாலமுரளி கிருஷ்ணா வரை குரு பரம்பரை
பாஹி சமீர குமாராமந்தாரிகிருதிபஞ்சமுக அனுமான் பற்றிய வர்ணனை
வசமதர்மாவதிகிருதிலலிதா தேவி மீது துதி

திரைப்படத்துறைக்கான பங்களிப்புகள்

பாலமுரளிகிருஷ்ணா தென்னிந்திய திரைப்படங்களுக்கு குறைவான பங்களிப்பினைத் தந்திருந்தாலும், அவை குறிப்பிடத்தக்கவையாக அமைந்திருந்தன.[7]

ஏ. வி. மெய்யப்பச் செட்டியாரின் வேண்டுகோளுக்கிணங்க, பக்த பிரகலாதா எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் தமிழ், இந்தி, கன்னடம் என பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதற்குப் பின்னர் வந்த வாய்ப்புகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.[4] பிற்காலத்தில் சந்தினே செந்தின சிந்தூரம் எனும் மலையாளத் திரைப்படத்தில் பாடகர் வேடத்தில் நடித்தார்.

பின்னணிப் பாடகராக

ஒரு பின்னணிப் பாடகராக தென்னிந்தியத் திரைப்படங்களில் பங்களித்தார். சதி சாவித்திரி எனும் தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலாக பாடினார். பின்னணிப் பாடகி பி. லீலா இவருடன் இணைந்து பல பாடல்களை பாடியிருக்கிறார்.

சுவாதித் திருநாள் எனும் மலையாளத் திரைப்படத்தில் இவர் பாடிய பாடல்களுக்காக, கேரள அரசின் விருது இவருக்குக் கிடைத்தது.

ஆண்டுதிரைப்படம்மொழிபாடல்இசையமைப்பாளர்குறிப்புகள்
1964கலைக்கோவில்தமிழ்தங்க ரதம் வந்தது வீதியிலே...விஸ்வநாதன்-ராமமூர்த்திபி. சுசீலாவுடன்
1965திருவிளையாடல்தமிழ்ஒரு நாள் போதுமா...கே. வி. மகாதேவன்மந்த இராகத்தில் தொடங்கும் இப்பாடல், பின்னர் தோடி, தர்பார், மோகனம், கனடா எனும் இராகங்களை உள்ளடக்கித் தொடரும் ஒரு இராகமாலிகை ஆகும்.
1966சாது மிரண்டால்தமிழ்அருள்வாயே நீ அருள்வாயே...டி. கே. ராமமூர்த்தி
1970கண்மலர்தமிழ்ஓதுவார் உன் பெயர்கே. வி. மகாதேவன்குழுவினருடன்
அம்பலத்து நடராஜாஎஸ். ஜானகியுடன்
1977கவிக்குயில்தமிழ்சின்னக் கண்ணன் அழைக்கிறான்இளையராஜா
உயர்ந்தவர்கள்தமிழ்ராமனும் நீயே சீதையும்சங்கர் கணேஷ்
நவரத்தினம்தமிழ்குருவிக்கார மச்சானேகுன்னக்குடி வைத்தியநாதன்வாணி ஜெயராமுடன்; பாடலாசிரியர்: வாலி
தெலுங்குபலுகு கண்டவாணி ஜெயராமுடன்; பாடலாசிரியர்: நெல்லை அருள்மணி
1979நூல் வேலிதமிழ்மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே...எம். எஸ். விஸ்வநாதன்
1983மிருதங்க சக்கரவர்த்திதமிழ்இது கேட்கத் திகட்டாத கானம்எம். எஸ். விஸ்வநாதன்பாடலாசிரியர் வாலி
1991சிகரம்தமிழ்பாஞ்சாலி கதருகிறாள்...'எஸ். பி. பாலசுப்பிரமணியம்பாடலாசிரியர் வைரமுத்து
2009பசங்கதமிழ்அன்பாலே அழகாகும் வீடு...ஜேம்ஸ் வசந்தன்குழந்தை கே. சிவாங்கியுடன்; பாடலாசிரியர் யுகபாரதி
2015பிரபாதமிழ்பூவே பேசும் பூவேஎஸ். ஜே. ஜனனி

இசையமைப்பாளராக

ஆதி சங்கராச்சாரியா (சமசுகிருத மொழியின் முதல் திரைப்படம்), இராமானுஜசார்யா, மத்வச்சாரியா ஆகிய திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தார்.

ஆலோசகராக

திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களுக்கு இராகங்கள் குறித்து ஏதேனும் ஐயங்கள் ஏற்படும்போது இவரை நாடினர்.

எம். எஸ். விஸ்வநாதன் பாலமுரளிகிருஷ்ணாவை தனது இசையாசிரியராக கருதினார்; பலமுறை தனது ஐயங்களை தீர்த்துக் கொண்டார். கே. பாலசந்தர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தை இயக்கியபோது, அரிதான இராகத்தில் ஒரு பாடலை உருவாக்கித் தருமாறு கேட்டதும், எம். எஸ். விஸ்வநாதன் பாலமுரளிகிருஷ்ணாவை நாடி அவரின் உதவியினைப் பெற்றார். அதிசய இராகம்... ஆனந்த இராகம்... அழகிய இராகம், அபூர்வ இராகம் எனும் பாடல் மகதி இராகத்தில் உருவானது. க, ப, நி எனும் 3 சுவரங்களை மட்டுமே இப்பாடல் கொண்டிருந்தது.

இவரின் மாணவர்கள்

  1. பி. லீலா
  2. சரத் (மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர்)
  3. இசை ஆராய்ச்சியாளர் பி. எம். சுந்தரம்
  4. நடிகர் கமல்ஹாசன்[4]
  5. ஜெ. ஜெயலலிதா[4]
  6. நடிகை வைஜெயந்தி மாலா
  7. எஸ். பி. சைலஜா

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்

சொந்த வாழ்க்கை

இவருக்கு 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள்.

பாலமுரளி கிருஷ்ணாவின் வாழ்க்கை வரலாற்றை ராணிமைந்தன் என்பவர் எழுதியிருக்கிறார்.

மறைவு

பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக 2016 நவம்பர் 22 ஆம் நாள் சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.[12]

மேற்கோள்கள்

  1. பாலமுரளி கிருஷ்ணா
  2. "பழம்பெரும் கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா காலமானார்: கலையுலகினர் இரங்கல்". தி இந்து (தமிழ்). 23 நவம்பர் 2016. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article9374368.ece. பார்த்த நாள்: 23 நவம்பர் 2016.
  3. பி. கோலப்பன் (22 நவம்பர் 2016). "Balamuralikrishna, maestro of Carnatic music, passes away". தி இந்து. Archived from the original on 23 நவம்பர் 2016. https://web.archive.org/web/20161123110101/http://www.thehindu.com/news/national/Balamuralikrishna-maestro-of-Carnatic-music-passes-away/article16675506.ece. பார்த்த நாள்: 22 நவம்பர் 2016.
  4. "‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’". விகடன் (22-11-2016). மூல முகவரியிலிருந்து 24-11-2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 நவம்பர் 2016.
  5. "Veteran Carnatic singer M Balamuralikrishna passes away at 86, Twitter reacts". இந்துத்தான் டைம்சு. 22 நவம்பர் 2016. Archived from the original on 23 நவம்பர் 2016. https://web.archive.org/web/20161123023003/http://www.hindustantimes.com/music/veteran-carnatic-singer-m-balamuralikrishna-passes-away-at-86/story-o4ymeRVNjzXf1ybzfi4UhP.html. பார்த்த நாள்: 23 நவம்பர் 2016.
  6. "கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு". தினமணி. 23 நவம்பர் 2016. http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2016/nov/23/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2603299.html. பார்த்த நாள்: 23 நவம்பர் 2016.
  7. பி. கோலப்பன் (23 நவம்பர் 2016). "Balamuralikrishna: a traditionalist who made waves in films". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Balamuralikrishna-a-traditionalist-who-made-waves-in-films/article16684396.ece. பார்த்த நாள்: 23 நவம்பர் 2016.
  8. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 23 டிசம்பர் 2018. http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.
  9. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.
  10. "'Sangeetha Kalasarathy' conferred on Balamuralikrishna". தி இந்து. 17 December 2002. http://www.hinduonnet.com/2002/12/17/stories/2002121704050500.htm.
  11. "கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவு: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்". தி இந்து (23 நவம்பர் 2016). மூல முகவரியிலிருந்து 7 டிசம்பர் 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 07 டிசம்பர் 2016.
  12. "புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு!". oneindia.com. பார்த்த நாள் 22 நவம்பர் 2016.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.