நல்லூர் (திருநெல்வேலி)
நல்லூர் (Nallur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்[4]. இது காசியாபுரம், வைத்திலிங்கபுரம், ஆலடிப்பட்டி, சிவகாமிபுரம், அரவன்குடியிருப்பு, காமராஜ்நகர், பெரியார்நகர், ராஜீவ்காந்திநகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. நாடார் சமுதாயத்தை சார்ந்த இவர்களில் 75% இந்துக்களும், 25% கிறித்தவர்களும் வாழ்கின்றனர்.
நல்லூர் | |
— கிராமம் — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | ஷில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இவர்களின் முதன்மையான தொழில் விவசாயம், பலசரக்கு மளிகை வியாபாரம். மேலும் அரிசி உற்பத்தி ஆலை, எண்ணெய் உற்பத்தி ஆலை, ஆடை உற்பத்தி செய்தல், திருநீர் உற்பத்தி செய்தல், தேங்காய் கொப்பறை காயவைத்தல், செங்கல் சூலை, மரவேலை, என பலத்தரபட்ட தொழில்களில் ஈடுபடுகின்றனர். மேலும் இங்கு உள்ள பெண்கள் பீடி சுற்றும் கைத்தொழிலை முதன்மை தொழிலாக செய்கின்றனர். காசியாபுரம் முத்தாரம்மன் கோவில் அருகே அரசு பொது அறிவு நூலகம் ஒன்று அமைந்துள்ளது.
பள்ளிகள்
- மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளி
- ஸ்ரீ வைத்திலிங்க சுவாமி உயர்நிலைப் பள்ளி
- T. D. T. A தொடக்க நிலைப் பள்ளி
- C. M. S தொடக்க நிலைப் பள்ளி
- C. S. I ஜெயராஜ் அன்னபாக்கியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=29&blk_name=Alangulam&dcodenew=26&drdblknew=14