திருமுழுக்கு வழிபாடு

திருமுழுக்கு வழிபாடு என்பது தெய்வத் திருமேனிகளைப் (சிலை) பூசிக்கும் முறைகளுள் ஒன்றாகும். இது அபிசேகம் என்று வடமொழியில் குறிப்பிடப்படுகிறது. பால், புனித நீர், தயிர், தேன், சந்தனம், எண்ணெய், நெய், மஞ்சள், இளநீர், திருநீறு உள்ளிட்ட பல பொருட்களைக் கொண்டு திருமுழுக்கு வழிபாடு செய்வர். ஒவ்வொரு பொருளைக் கொண்டு திருமுழுக்கு செய்வதற்கும் ஒவ்வொரு பலன் உள்ளதாகக் கருதப்படுகிறது. [1]

பொருட்கள்

  1. பால்
  2. நெய்
  3. தயிர்
  4. தேன்
  5. இளநீர்
  6. கரும்புச்சாறு
  7. பஞ்சாமிர்தம்
  8. எலுமிச்சை சாறு
  9. சந்தனம்
  10. பன்னீர்
  11. மஞ்சள்
  12. மலர்கள்
  13. அரிசி மாவு
  14. சாதம்
  15. வில்வம் (சிவனுக்கு விசேடம்)
  16. தண்ணீர்

ஒவ்வொரு பொருளால் திருமுழுக்கு செய்வதாலும் சில குறிப்பிட்ட பலனுண்டு என்பது நம்பிக்கை.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.