உப்பிலியாபுரம்
உப்பிலியாபுரம் (ஆங்கிலம்:Uppiliapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
உப்பிலியாபுரம் | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
வட்டம் | துறையூர் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
7,705 (2011) • 1,078/km2 (2,792/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 7.15 சதுர கிலோமீட்டர்கள் (2.76 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/uppiliapuram |
அமைவிடம்
திருச்சி – துறையூர் – தம்மம்பட்டி சாலையில், திருச்சியிலிருந்து வடக்கே சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவிலும், துறையூரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும் உப்பிலியாபுரம் பேரூராட்சி அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
7.15 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி துறையூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2155 வீடுகளும், 7705 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- உப்பிலியாபுரம் பேரூராட்சியின் இணையதளம்
- Uppiliapuram Population Census 2011
- Uppiliapuram Town Panchayat
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.