இலை

இலை (ஒலிப்பு ) (Leaf) என்பது மரம், செடி, கொடிகள் போன்ற தாவரங்களில் பசுமை நிறத்தில் தகடு போன்று வளர்ந்திருக்கக் கூடிய ஓர் உறுப்பு ஆகும் [1]. தண்டு அல்லது கிளைகளிலிருந்து பக்கவாட்டில் தோன்றும் வளர்ச்சியே இலை ஆகும்[2]. தண்டின் மிகமுக்கியமான இணையுறுப்புகளாக இவை கருதப்படுகின்றன. இலைகளும் தண்டும் ஒன்றாகச் சேர்ந்த பகுதி தளிர் எனப்படுகிறது[3]. கூட்டாக இலைகளைப் பொதுவாக சாதாரண இலைகள் என்றே கூறுவர்[4][5]

இலை
குளிர் நாடுகளில் உள்ள பைன், ஸ்புரூஸ் போன்ற சிலவகையான மரங்களில் உள்ள குச்சி போன்ற வடிவில் இருக்கும் ஊசியிலை

இதுவே ஒளிச்சேர்க்கை வழி மரஞ்செடி கொடிகளின் உயிர்ப்புக்கு ஊட்டம் அல்லது ஆற்றல் பெற உதவுவது. கதிரவனின் ஒளியைப் பெறும் இலைகள் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன, சில தட்டையாகவும், சில நீண்டும் இருக்கின்றன. இலைகளில் பச்சையம் என்ற நிறமி இருப்பதன் காரணமாக இலைகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கின்றன. இலைகள் பொதுவாக உணவையும் நீரையும் சேமித்து வைப்பினும், சில தாவரங்களில் வேறு விதங்களிலும் பயன்படுகின்றன.

இலை பற்றிய விளக்கம்

ஒரு இலை என்பது வாஸ்குலார் ஆலை ஒரு உறுப்பாகும், மேலும் இது தண்டுகளின் முதன்மை பக்கவாட்டு பயன்பாடு ஆகும். இலைகள் மற்றும் தண்டு ஆகியவை ஒன்றாக உருவாகின்றன. இலைகள் "இலையுதிர்கால பசுமையாகவும்".குறிப்பிடப்படுகின்றன.

முதன்மை நரம்பு,இரண்டாம்நிலை நரம்பு. மென்தகட்டினதும். இலை விளிம்பு பல வடிவங்களில், அளவுகளில் காணப்படுகின்றன என்றாலும், பொதுவாக ஒரு இலை என்பது ஒரு மெல்லிய தட்டையான உறுப்பு, தரையில் மேலே பரவி, ஒளிச்சேர்க்கைக்கு சிறப்பான முதன்மை ஒளிச்சேர்க்கை திசு, கொல்லிமண்டல் மெசோஃபில், இலைகளின் பிளேடு அல்லது லமீனாவின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. ஆனால் யூகலிப்டஸ் முதிர்ச்சியுள்ள பசுமையாக உள்ள சில இனங்கள், இருபுறமும் இலைகள் இபோபிளேடாலல் என்று கூறப்படுகிறதுஇலைகளில் தனித்துவமான மேல் மேற்பரப்பு (அடிவயிற்று) மற்றும் குறைந்த மேற்பரப்பு (அசாதாரணமானது), நிறம், கூந்தல், ஸ்டோமாட்டாவின் எண்ணிக்கை (உட்கொள்ளும் மற்றும் வெளியீடு வாயுக்கள்), காளானுறைவு மெழுகு அளவு மற்றும் கட்டமைப்பு மற்றும் பிற அம்சங்கள் ஆகியவை வேறுபடுகின்றன. பரவலான பிளாட் இலைகள் சிக்கலான இடத்தோடு மெகாஃபில்ஸ் மற்றும் அவை தாங்கக்கூடிய இனங்கள், பெரும்பான்மையானவை, பரந்த-அடுக்கப்பட்ட அல்லது மெகாஃபில்ஸ் செடிகள் என அழைக்கப்படுகின்றன. வேறுபட்ட பரிணாம மூலங்களுடன் கூடிய கிளாஸ்மஸ்கள் போன்ற இலைகள் இலைகள் எளிமையானவையாகும், இவை ஒற்றை நரம்பு கொண்டவை மற்றும் மைக்ரோஃபில்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.

புல்வெளிகளைப் போன்ற சில இலைகள் தரையில் மேலே இல்லை, பல நீர்வகைகளில் இலைகள் நீரில் மூழ்கியுள்ளன. சதைப்பற்றுள்ள தாவரங்கள் பெரும்பாலும் தடித்த தழும்பு இலைகளைக் கொண்டிருக்கின்றன, ஆனால் சில இலைகள் பெரிய ஒளிச்சேர்க்கை செயல்பாடு இல்லாமல் இருக்கின்றன, மேலும் முதிர்ச்சியடையாத நிலையில் அவை இறந்து போயிருக்கலாம், சில கேபபில்ஸ் மற்றும் ஸ்பைன்கள் போன்றவை. மேலும், பல வகையான இலை-போன்ற கட்டமைப்புகள் வாஸ்குலார் செடிகளில் காணப்படுகின்றன, அவற்றுடன் முற்றிலும் இல்லை. உதாரணமாக, பைலோகாக்லேட்ஸ் மற்றும் கிளாடோட்ஸ் என்று அழைக்கப்படும் தட்டையான செடியின் தண்டுகள், மற்றும் ஃபைலோட்ஸ்கள் என்று அழைக்கப்படும் இலைத் தண்டுகள் அவற்றின் கட்டமைப்பு மற்றும் தோற்றம் ஆகியவற்றில் இருந்து வேறுபடுகின்றன. தாவரங்கள் அல்லாத (பொடியாக்கின் அங்கத்தினர் என்ற முறையில் இருப்பதால்) தாவரங்கள் அல்ல, அவை இலைகளைப் போல தோற்றமளிக்கின்றன மற்றும் சில கட்டமைப்புகள். [[படிமம்:குளிர் நாடுகளில் உள்ள பைன், ஸ்புரூஸ் போன்ற சிலவகையான மரங்களில் உள்ள குச்சி போன்ற வடிவில் இருக்கும் ஊசியிலை.]] இலை என்பது மரஞ்செடி கொடிகளின்மரம் செடி கொடிகளைத் தமிழில் நிலைத்திணை என்றும் தாவரம் என்று கூறுவர்</ref> ஓர் உறுப்பு. இதுவே ஒளிச்சேர்க்கை வழி மரஞ்செடி கொடிகளின் உயிர்ப்புக்கு ஊட்டம் அல்லது ஆற்றல் பெற உதவுவது. கதிரவனின் ஒளியைப் பெறும் இலைகள் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன, சில தட்டையாகவும், சில நீண்டும் இருக்கின்றன. இலைகளில் பச்சையம் என்ற நிறமி இருப்பதன் காரணமாக இலைகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கின்றன. இலைகள் பொதுவாக உணவையும் நீரையும் சேமித்து வைப்பினும், சில தாவரங்களில் வேறு விதங்களிலும் பயன்படுகின்றன.

இலையின் அமைப்பு

மரஞ்செடி கொடிகளில் இலைகளின் புறத்தோற்றம் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன சில அகலமாக அடிவிரிந்தும் நுனி குறுகியும், சில இலைகளின் விளிம்பில் பல்வேறு நெளிவுகள் கொண்டும், சில ஊசி போன்ற வடிவிலும் உள்ளன.

பொதுவாக, வித்துத்தாவரம் ஒன்றின் முழுமையான அமைப்பைக் கொண்ட இலை, இலைக்காம்பு, இலைப்பரப்பு, இலையடிச் செதில் ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கும். இலைக்காம்பு, தாவரத்தின் தண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் இடம் கணு (இலைக்கணு) எனப்படும். எல்லா வகைத் தாவரங்களின் இலைகளும் மேற்கூறிய பகுதிகள் அனைத்தையும் கொண்டிருப்பதில்லை. சில இனங்களில், இலையடிச் செதில்கள் இணையாக அமைந்திருப்பதாகத் தெரிவதில்லை அல்லது முற்றாகவே இருப்பதில்லை. இலைக்காம்புகளும் சில இனங்களில் இல்லாதிருக்கலாம், இலைப்பரப்பும் தட்டையாக இல்லாதிருக்கக்கூடும். இனத்துக்கு இனம் பெருமளவில் வேறுபடுகின்ற இலை அமைப்புக்கள் பற்றி இலை உருவியல் பகுதியின் கீழ் விரிவாக ஆராயப்படும். இலையுதிர்க்கும் தாவரங்கள் குறிப்பிட்ட பருவ காலப்பகுதிகளில் தங்கள் இலைகளை உதிர்த்துவிடுகின்றன.

பல்வேறு இலைகள்:பெரிய கூட்டிலை,பெரிய தனியிலை,இதயவடிவ இலை.

இலையின் உள் கட்டமைப்பு

இலை, பின்வரும் இழையங்களைக் கொண்டுள்ள ஒரு தாவர உறுப்பு ஆகும்:

  1. இலையின் மேல் மற்றும் கீழ் மேற்பரப்புக்களை மூடியிருக்கும் புறத்தோல்.
  2. இரு பக்க புறத்தோலுக்கும் இடையில் அமைந்திருக்கும் இலை நடுவிழையம்.
  3. இலை நரம்பு எனப்படும், உரியம், மற்றும் காழ்க் கலன்களைக் கொண்ட கலனிழையம்.
உருப்பெருக்கிய இலையின் வெட்டுமுகம்

புறத்தோல்

புறத்தோல் என்பது பல படைகளாக அமைந்து இலைகளை மூடியிருக்கும் திசுள் (கலம்) தொகுதியாகும். இது இலையின் உட்பகுதித் திசுள்களை புறச் சூழலிலிருந்து பிரிக்கின்றது. புறத்தோல், நீரிழப்பைத் தடுத்தல், வளிமப் பரிமாற்றத்தை ஒழுங்கமைத்தல், வளர்சிதைமாற்றத்துக்கான நீர்மங்களைச் சுரத்தல், சில இனங்களில் நீரை உறிஞ்சுதல் ஆகியவை உள்ளிட்ட பல செயற்பாடுகளைக் கொண்டுள்ளன. பல இலைகளில் மேல் புறத்தோலும், கீழ் புறத்தோலும் வெவ்வேறு விதமான அமைப்புக்களை உடையனவாக இருப்பதுடன் வெவேறு செயற்பாடுகளையும் கொண்டிருக்கின்றன.

புறத்தோல் பொதுவாக ஒளி புகவிடும் தன்மை கொண்டிருப்பதுடன், நீரிழப்பைத் தடுப்பதற்காக அவற்றின் மேல் மெழுகு போன்ற தோலி எனப்படும் பூச்சும் இருக்கும். சில சந்தர்ப்பங்களில் மேற்பக்கத் தோலி, கீழ்ப்பக்கத் தோலியிலும் தடிப்பானதாக இருக்கும். வரண்ட பகுதித் தாவரங்களின் இலைகளில் தடிப்புக் கூடிய தோலிகளும், ஈரவலயத் தாவரங்களின் தோலிகள் ஒப்பீட்டளவில் தடிப்புக் குறைந்தவையாகவும் காணப்படுகின்றன.

புறத்தோல் திசுக்கள் பல்வேறுபட்ட திசுள் (கலம்) வகைகளைக் கொண்டுள்ளன. புறத்தோல் திசுள்கள், காப்பணுக்கள், துணைத் திசுள்கள், புறத்தோல் உரோமங்கள் என்பன இவற்றுள் அடங்கும். புறத்தோல் திசுள்களே இவற்றுள் எண்ணிக்கையில் அதிகமானவையாகவும், பெரியனவாகவும், சிறப்புச் செயற்பாடுகள் குறைந்தவையாகவும் உள்ளன. இருவித்திலைத் தாவர இலைகளின் புறத்தோல் திசுள்கள், ஒருவித்திலைத் தாவர இலைகளில் உள்ளவற்றிலும் நீளம் கூடியவையாகக் காணப்படுகின்றன.

புறத்தோலில், இலைத்துளைகள் எனப்படும் துளைகள் பரவியுள்ளன. இவற்றுடன், இத் துளைகளின் இருபுறமும் பசுங்கணிகம் அடங்கிய காப்பணுக்களும், இரண்டு முதல் நான்கு எண்ணிக்கையான துணைத் திசுள்களும் அமைந்திருக்கும். இவை கூட்டாக இலைத்துளைத் தொகுதி எனப்படும். இலைத்துளைத் தொகுதி, இலையின் உட்புறத்துக்கும், வெளியிலுள்ள வளிமண்டலத்துக்கும் இடையிலான வளிமம் மற்றும் நீராவிப் பரிமாற்றங்களை ஒழுங்குபடுத்துகின்றது. பொதுவாக, கீழ் புறத்தோலில், மேல் புறத்தோலிலும் கூடிய எண்ணிக்கையில் இலைத்துளைகள் காணப்படுகின்றன.

நடுத்திசு

மேலும் கீழும் அமைந்துள்ள புறத்திசுப் படலங்களுக்கு இடையே இலையின் உட்புறத்தின் பெரும்பகுதி நடுத்திசு எனப்படும் பஞ்சுத்திசுக்களால் ஆனது. இந்தத் தன்வயமாக்கல் (assimilation) திசுக்களே தாவரங்களில் ஒளித்தொகுப்பு நடைபெறுகின்ற முக்கியமான இடங்களாகும்.

பன்னங்களிலும், பெரும்பாலான பூக்கும் தாவரங்களிலும், நடுத்திசு இரண்டு படைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

  • மேல் புறத்தோலுக்கு நேர் கீழே, ஒன்று அல்லது இரண்டு திசுள் தடிப்புக் கொண்ட, வேலிக்கால்திசுப் படை. இது நெருக்கமாக அடைக்கப்பட்டுள்ள, நிலைக்குத்தாக நீண்ட திசுள்களைக் (கலங்கள்) கொண்டது ஆகும். இது பஞ்சுத்திசுப் படையிலிருப்பதிலும், மிகவும் கூடுதலான பசுங்கணியங்களைக் (chloroplasts) கொண்டுள்ளது. இந்த நீண்ட உருளை வடிவத் திசுள்கள், ஒன்று முதல் ஐந்து வரையான வரிசைகளில் ஒழுங்காக அடுக்கப்பட்டுள்ளன. திசுள்களின் சுவர்களுக்கு அருகில் பசுங்கணியங்களைக் கொண்டுள்ள இந்த உருளைத் திசுக்கள் உகந்த அளவில் சூரிய ஒளியைப் பெறக்கூடிய வசதியைக் கொண்டுள்ளன. இத் திசுள்களுக்கு இடையே காணப்படுகின்ற சிறு இடைவெளிகள், அதிகூடிய அளவில் காபனீரொட்சைட்டை உறிஞ்சிக் கொள்வதற்கு வசதியாக உள்ளது. நீர் கடத்தப்படுவதை உறுதிசெய்ய, மேற்கூறிய இடைவெளிகள் நுண்புழைக் கவர்ச்சியை (capillary action) உருவாக்குமளவு ஒடுக்கமாக இருத்தல் வேண்டும். தாவரங்கள் தங்கள் சூழலுக்கு (எடு: கடும் ஒளி அல்லது நிழல்) ஏற்பத் தகைவு (adaptation) பெறுவதற்காக இலையின் இந்த அமைப்பு உகந்த வகையில் அமைதல் வேண்டும். கூடிய சூரிய ஒளி கொண்ட சூழலில் உள்ள இலைகளில் வேலிக்கால் திசுக்கள் பல படைகளாகவும், நிழலில் காணப்படும் இலைகள் ஒரு வேலிக்கால் திசுப் படையைக் கொண்டும் அமைந்திருக்கும்.
  • வேலிக்கால் திசுப் படைகளுக்குக் கீழே பஞ்சுத் திசுப் படை இருக்கும். இப் பஞ்சுத் திசுப் படையில் இருக்கும் திசுள்கள் கூடிய வட்ட வடிவம் கொண்டவையாகவும், நெருக்கமாக அடைக்கப்படாதவை ஆகவும் இருக்கும். திசுள்களுக்கு இடையே பெரிய வளி இடைவெளிகள் காணப்படும். இவை வேலிக்கால் திசுக்களில் காணப்படுவதிலும் குறைந்த அளவிலேயே பசுங்கணியத்தைக் கொண்டிருக்கும்.

புறத்தோலில் காணப்படும் இலைத் துளைகள் அவற்றுக்குப் பின்னால் இருக்கும் சிறிய அறைகளுக்குத் திறந்திருக்கும். இவ்வறைகளுக்குப் பஞ்சுத் திசுப் படையில் உள்ள வளி இடைவெளிகளுடன் தொடர்பு இருக்கும்.

நடுத்திசுவின் இந்த இரு வேறுபட்ட படைகள், நீர்த் தாவரங்களிலோ, சதுப்பு நிலத் தாவரங்களிலோ காணப்படுவதில்லை. சில சமயங்களில், புறத்தோல் மற்றும் நடுத்திசு கூடக் காணப்படாமல் இருக்கலாம். இத்தகைய இலைகளில் ஒருதன்மைத்தான மெல்லிய சுவர்களைக் கொண்ட திசுள்கள் பெரிய வளிம இடைவெளிகளினால் பிரிக்கப்பட்டுக் காணப்படும். இவற்றின் இலைத் துளைகள் இலையின் மேற் பகுதியிலேயே காணப்படும்.

இலைகள் பொதுவாகப் பச்சை நிறமானவை. இது கணிகங்களில் (plastids) காணப்படும் பச்சையத்தினால் ஏற்படுகின்றது. பச்சையத்தைக் கொண்டிராத தாவரங்கள் ஒளித்தொகுப்புச் செய்ய முடியாது.

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. மரம் செடி கொடிகளைத் தமிழில் நிலைத்திணை என்றும் தாவரம் என்று கூறுவர்
  2. Esau 2006.
  3. Cutter 1969.
  4. Haupt 1953.
  5. Mauseth 2009.

HV

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.