ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில்
திருநல்லூர்ப் பெருமணம் ஆச்சாள்புரம் சிவலோகத்தியார் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் உள்ள தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தருமையாதீன நிர்வாகத்திலுள்ள திருக்கோயில்[1]
தேவாரம் பாடல் பெற்ற திருநல்லூர்ப்பெருமணம் சிவலோகத்தியாகர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | சிவலோகபுரம், நல்லூர்பெருமணம், திருமண நல்லூர் , திருமணவை |
பெயர்: | திருநல்லூர்ப்பெருமணம் சிவலோகத்தியாகர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | ஆச்சாள்புரம் |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவலோகத்தியாகர், சிவலோகத் தியாகேசர், பெருமணமுடைய மகாதேவர். |
உற்சவர்: | திருஞான சம்பந்தர் |
தாயார்: | திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி, விபூதிகல்யாணி |
தல விருட்சம்: | மாமரம் |
தீர்த்தம்: | பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சம்பந்தர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
அமைவிடம்
இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள ஐந்தாவது தலமாகும்.
சிறப்புகள்
சம்பந்தர் திருமணக் கோலத்துடன் சோதியுள் கலந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
இவற்றையும் பார்க்கவும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.