அரசிராமணி
அரசிராமணி (ஆங்கிலம்:Arasiramani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் சங்ககிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அரசிராமணி | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
வட்டம் | சங்ககிரி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | S. A. ராமன், இ. ஆ. ப. [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
14,834 (2011) • 527/km2 (1,365/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 28.16 சதுர கிலோமீட்டர்கள் (10.87 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/arasiramani |
அமைவிடம்
அரசிராமணி பேரூராட்சி சேலத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 32 கிமீ தொலைவில் உள்ள சங்ககிரியில் உள்ளது. அரசிராமணி பேரூராட்சிக்கு கிழக்கில் எடப்பாடி 7 கிமீ; மேற்கில் அந்தியூர் 30 கிமீ; வடக்கில் மேட்டூர் 32 கிமீ; தெற்கில் குமாரபாளையம் 22 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
28.16 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,970 குடும்பங்களும், 14,834 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 63.30% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 935 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]
ஆதாரங்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- அரசிராமணி பேரூராட்சியின் இணையதளம்
- Arasiramani Population Census 2011