அரசிராமணி

அரசிராமணி (ஆங்கிலம்:Arasiramani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் சங்ககிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அரசிராமணி
  பேரூராட்சி  
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் சங்ககிரி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் S. A. ராமன், இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

14,834 (2011)

527/km2 (1,365/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 28.16 சதுர கிலோமீட்டர்கள் (10.87 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/arasiramani

அமைவிடம்

அரசிராமணி பேரூராட்சி சேலத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம், 32 கிமீ தொலைவில் உள்ள சங்ககிரியில் உள்ளது. அரசிராமணி பேரூராட்சிக்கு கிழக்கில் எடப்பாடி 7 கிமீ; மேற்கில் அந்தியூர் 30 கிமீ; வடக்கில் மேட்டூர் 32 கிமீ; தெற்கில் குமாரபாளையம் 22 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

28.16 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சங்ககிரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,970 குடும்பங்களும், 14,834 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 63.30% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 935 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. அரசிராமணி பேரூராட்சியின் இணையதளம்
  5. Arasiramani Population Census 2011
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.