மூன்றாம் கோவிந்தன்

மூன்றாம் கோவிந்தன் (793-814 ), என்பவன் ஒரு புகழ்பெற்ற இராஷ்டிரகூடப் பேரரசனாவான். இவனது தந்தை துருவன் தரவர்சன் ஆவான். இவனது படைகள் தெற்கே கன்னியாகுமரியில் இருந்து, வடக்கே கன்னோசிவரையிலும் கிழக்கே வாரனாசி முதல் மேற்கில் பரூச் (Bharuch) வரை வெற்றிகளை குவித்தது இவனது பட்டப்பெயர்கள் பிரபுதவர்சன், ஜகதுங்கன், அனுபமா , கீர்தி நாராயணன் , பிரீத்தி வல்லபன், சிறீவல்லபன் , விமலாதித்தன் , அதிசயதவளா ,திரிபுவனதவளா. ஆகும் இத்தகவல் கி.பி.804 காலகட்டத்தைச்சேர்ந்த சேமேசுவர கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது இக்கல்வெட்டை வெட்டுவித்த கவுந்தபீ இவனது பட்டத்தரசி என்று அறியப்படுகிறது.

அரியணையில்

மூன்றாம் கோவிந்தன் பேரரசரசனான பின் இவனது குடும்பத்தினரின் எதிர்ப்பைச் சமாளிக்க நேர்ந்தது. இவனுடைய அண்ணன் கம்பராசா (இவன் ஸ்தம்பா என்றும் அழைக்கப்பட்டான்) பன்னிரண்டு தலைவர்களை தனது அணியில் சேர்த்துக் கொண்டு கோவிந்தனுக்கு எதிராக போர்புரிந்தன் என நவசரி பதிவுகள் குறிப்பிடுகின்றன.[1] சிஸ்வயி மற்றும் சஞ்சன் போன்ற பதிவுகள் கோவிந்தனின் மற்றொரு சகோதரனான இந்திரன் கோவிந்தனுக்கு ஆதரவாக இருந்து அண்ணன் கம்பராசாவின் கூட்டுப் படைகளுக்கு எதிராக வெற்றிபெற்றதாகக் கூறுகிறது.[2] மேலைக்கங்க மன்னன் இரண்டாம் சிவமாறன் கம்பராசாவின் அணியில் இருந்து மூன்றாம் கோவிந்தனை எதிர்த்தான் ஆனால், போரில் தோல்வியுற்றுக் கைதியான பிறகு சிவமாறனைக் கோவிந்தன் மன்னித்து கங்க நாட்டை ஆட்சி செய்ய அனுமதித்தான்.

கன்னோஜ் வெற்றி

தற்கால கர்நாடகத்தின் பீதர் மாவட்டத்தில் உள்ள மயூர்கண்டியே மூன்றாம் கோவிந்தனின் தலைநகராக இருந்தது. அங்கிருந்து கி.பி 800-ல் தனது வடதிசை படையெடுப்பை மேற்கொண்டான். படையெடுப்பில் குர்ஜரா-பிரதிஹார இரண்டாம் நாகபதா ,பாலப் பேரரசு தர்மபால ஆகியோரின் கன்னோஜ், சாரய்யுதா ஆகியவற்றை வெற்றிகொண்டான். இரண்டம் நாகபதா போரில் தோற்று போர்க்களத்திலிருந்து ஓடினான். மூன்றாம் கோவிந்தனின் யானைகளும்,குதிரைகளும் இமயத்தின் பனியிலிருந்து கரைந்து வந்த புனிதமான கங்கை நீரைக் குடித்ததாக அவனது சாசனங்கள் புகழ்கின்றன.[2]மகத மற்றும் வங்காள ஆட்சியாளர்கள்கூட, இவனுக்குப் பணிந்தனர். லதா (தெற்கு மற்றும் மத்திய குஜராத்) பகுதியை வெற்றி கொண்டு தனது சகோதரனான இந்திரனிடம் அப்பகுதியின் ஆட்சியை ஒப்படைத்தான். இதன் விளைவாக இராஷ்டிரகூடப் பேரரசின் ஒரு கிளை அப்பகுதியில் தோன்றியது.[3] இதனால் மூன்றாம் கோவிந்தன் வென்ற பகுதிகளான வடக்கே விந்தியா,மால்வா பகுதி முதல் தெற்கே காஞ்சி வரையான தனது பேரரசைக் கட்டிக்காக்க இயன்றது.[3] பிறகு பரமரா மரபினரின் மால்வாவையும் மூன்றாம் கோவிந்தன் வென்றான்.[4]

தெற்கின் நிலை

தமிழ் நாட்டின் மூவேந்தர்களான சோழர்கள் , பாண்டியர்கள்,சேரர் ஆகியோர் மூன்றாம் கோவிந்தனுக்குக் கப்பம் செலுத்தும் நிலையில் இருந்தனர்.[5] இராஷ்டிரகூடப் பேரரசின் வெற்றிகள் உச்ச நிலையை அடைந்திருந்தது.[6], மூன்றாம் கோவிந்தன் கி.பி.814 இல் இறந்தான்.

குறிப்புகள்

  1. From two records of 808, Reu (1933), p64
  2. Kamath (2001), p76
  3. Reu (1933), p66
  4. A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th century by Upinder Singh p.569
  5. Kamath (2001), p77
  6. A.S. Altekar in (Kamath 2001, p77)

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.