தந்திதுர்கன்
தந்திவர்மன் அல்லது இரண்டாம் தந்தி துர்கன் (ஆட்சிக்காலம் 735-756 ) என்பவன் இராஷ்டிரகூடப் பேரரசை மான்யகட்டா என்ற இடத்தில் நிறுவியவன்.[1] இவனது அடிப்படை ஆட்சிப்பகுதியாகக் கர்நாடகத்தின் குல்பர்கா பகுதி இருந்தது. இவன் தனது பேரரசின் எல்லையைக் கர்நாடகத்தின் பெரும்பான்மைப்பகுதி வரை விரிவாக்கினான்.
இராஷ்டிரகூட மன்னர்கள் (753-982) | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||||
தந்தி துர்கன் சாளுக்கியர்களை 753இல் தோற்கடித்து அவர்களின் பட்டங்களான இராஜாதிராஜ மற்றும் பரமேஷ்வரா ஆகியவற்றைத் தனதாக்கிக் கொண்டான். குஜராத் பாவங்கங்க கல்வெட்டில் அவன் பாதாமி சாளுக்கியர்களைத் தோற்கடித்தான் என்று கூறுகிறது. மேலும் இவன் லதா (குஜராத்), மால்வா , டங்கா, கலிங்கம் சேஷர்கள் (நாகர்கள்) ஆகியோரைப் போரில் தோற்கடித்தான்[2]
பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் சாளுக்கியர்களிடமிருந்து காஞ்சியை மீட்க உதவி தனது மகளை நந்திவர்மனுக்கு மணம் செய்வித்து உறவைப் பலமாக்கிக்கொண்டான்.[3]
குறிப்புகள்
- Reu (1933), p54
- Reu (1933), p55
- Thapar (2003), p333
உசாத்துணை
- Kamath, Suryanath U. (2001) [1980]. A concise history of Karnataka : from pre-historic times to the present. Bangalore: Jupiter books. இணையக் கணினி நூலக மையம்:7796041.
- Thapar, Romila (2003) [2003]. The Penguin History of Early India, From Origins to 1300 AD. New Delhi: Penguin. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-14-302989-4.
- Reu, Pandit Bisheshwar Nath (1997) [1933]. History of The Rashtrakutas (Rathodas). Jaipur: Publication scheme. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-86782-12-5.