போத்துக்கீசத் தமிழியல்

போத்துக்கீச தமிழியல் (Portuguese Tamil Studies) என்பது போத்துக்கீச மொழி, போர்த்துகல், போத்துக்கீச மொழி பேசும் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.


தமிழியல்
தமிழ்
மலையாளத் தமிழியல்
ஆங்கிலத் தமிழியல்
சிங்களத் தமிழியல்
சமசுகிருத தமிழியல்
கன்னடத் தமிழியல்
தெலுங்குத் தமிழியல்
துளு தமிழியல்
வங்காளத் தமிழியல்
மராத்திய தமிழியல்
இந்தித் தமிழியல்
பர்மியத் தமிழியல்
சீனத் தமிழியல்
அரபுத் தமிழியல்
மலாய் தமிழியல்
தாய் தமிழியல்
உருசியத் தமிழியல்
சப்பானியத் தமிழியல்
கொரியத் தமிழியல்
செர்மானியத் தமிழியல்
பிரெஞ்சுத் தமிழியல்
டச்சுத் தமிழியல்
போத்துக்கீசத் தமிழியல்
சுவீடிசு தமிழியல்
பாளித் தமிழியல்
பிராகிருதத் தமிழியல்
பிராமித் தமிழியல்
பாரசீகத் தமிழியல்
உருதுத் தமிழியல்
எபிரேயத் தமிழியல்

தொகு

போர்த்துக்கல் காலனித்துவமும் தமிழும்

"ஐரோப்பாவில் இருந்து சமயப்பிரச்சாரத்திற்காக வந்த பாதிரிமார்கள் - போர்த்துக்கீசிய மொழி மூலமாகவே தமிழ்மொழிக் கற்றுக் கொண்டார்கள். பாதிரி என்பதே போர்த்துக்கீசிய சொல்தான். ஐரோப்பாவில் இருந்து தமிழ்நாடு வந்து முதன் முதலாகத் தமிழ் கற்றுக் கொண்டது, ஹென்றிக்கே ஹென்றீக்கசு (Henrique Henriques, 1520-1600) போர்த்துக்கல் நாட்டில் யூத இனம் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர். தம் சொத்தை எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்துவிட்டு, கிறித்தவ சமயத்தைப் பரப்ப 1546 இல் இந்தியா வந்திறங்கினார்.

இயேசு சபை சார்பில் தமக்கு மேலதிகாரியாக இருந்த ஃபிரான்சிசு சேவியர் (1506-1552) என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ் கற்றுக் கொண்டார். தமிழ் எழுதவும் பேசவும் திறமை பெற்றார். ஹென்றிக்கே ஹென்றீக்கசு தான் தமிழ் கற்றுக் கொண்ட முதல் ஐரோப்பியர். தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர்தான் முதல் தமிழ் அச்சுப் புத்தகமான தம்பிரான் வணக்கம் என்னும் நூலை வெளியிட்டார். இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ். நூல் பதித்த இடம் கொல்லம் என்றும், பதித்த நாள் 20.10.1578 என்றும் அந்நூலிலிருந்தே அறிகிறோம். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம்.

தமிழ் நூலின் முகப்புப் பக்கத்தில் மேலே DOCTRINA CHRISTAM en Lingua Malauar Tamul என்றுள்ளது. பக்கத்தின் நடுவில் மூவொரு கடவுள் (Trinity) வடிவம் பதிக்கப்பட்டுள்ளது. நான்கு ஓரங்களிலும் சிலுவைகளும் அலங்கார கோலங்களும் வரையப்பட்டுள்ளன. கீழே அக்கால வழக்கிலிருந்த தமிழ் எழுதும் முறையில் தமிழ்த் தலைப்பு தரப்பட்டுள்ளது. புள்ளிகள் இடப்படவில்லை; சொற்களும் பிரிக்கப்படவில்லை. எனவே, நூல் தலைப்பு இவ்வாறு தோற்றமளிக்கிறது:

கொமபஞஞயதேசெசூ வகையிலணடிறிககிப பாதிரியாரதமிழிலெ பிறிததெழுதினதமபிரான வணககம

மேற்காட்டிய தலைப்பை இன்றைய முறைப்படி புள்ளி மற்றும் சொல்லிடைவெளி இட்டு எழுதினால் கீழ்வருமாறு அது தோற்றமளிக்கும்:

கொம்பஞ்சிய தெ சேசு வகையில் அண்டிறிக் பாதிரியார் தமிழிலே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்

16 பக்கங்களை உள்ளடக்கி 1578இல் பதிக்கப்பட்ட இந்த அரிய நூல் ஹார்வட் பல்கலைக்கழக நூலகத்தில் காக்கப்பட்டு வருகிறது.

தம்பிரான் என்பது சுய தமிழ்ச்சொல்.

தம்பிரான் வணக்கம் 1578இல் அச்சான நூலின் முகப்புப் பக்கம்

போத்துக்கேய மொழியிலிருந்து பெற்றவை

பேச்சுத் தமிழ்பொருள்போத்துக்கீச மூலம்
அலுமாரிநிலைப்பெட்டகம்armário
அன்னாசிஒருவகைப் பழம்ananás
ஆசுப்பத்திரிமருத்துவமனைhospital
கடுதாசிகடிதம்carta
கதிரைநாற்காலிcadeira
குசினிஅடுக்களைcozinha
கோப்பைகிண்ணம்copo
சப்பாத்துகாலணிsapato
தாச்சிஇரும்புச் சட்டிtacho
துவாய்துவாலைtoalha
தோம்புநில உரிமைப் பட்டியல்tombo
பாண்ரொட்டி,வெதும்பிpão
பீங்கான்செராமிக் தட்டுpalangana
பீப்பாமரத்தாழிpipa
பேனைபேனா,தூவல்pena
வாங்குbenchbanco
விசுக்கோத்து-biscoito
விறாந்தைதாழ்வாரம்(Verandah)varanda

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.