பிரேம் குமார் துமால்

பிரேம் குமார் துமால் (Prem Kumar Dhumal) (பிறப்பு 1944) இந்திய மாநிலம் இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக உள்ளார். 30 திசம்பர், 2007 அன்று பதவியேற்றார்.[1] இதற்கு முன்னர் மார்ச்சு 1998 முதல் மார்ச்சு 2003 வரை இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். 1989 ஆம் ஆண்டில் ஒன்பதாவது மக்களவைக்கும் 1991ஆம் ஆண்டு பத்தாவது மக்களவைக்கும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமீர்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2007ஆம் ஆண்டு மக்களவை இடைத்தேர்தலில் வெற்றி காணும் முன்னர் மாநில சட்டப் பேரவையில் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றினார்.[2]. அவ்வாண்டு (2007) திசம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து முதலமைச்சராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

பிரேம் குமார் துமால்
5வது இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்
தொகுதி பாம்சென்
பதவியில்
30 திசம்பர் 2007  25 திசம்பர் 2012
முன்னவர் வீரபத்ர சிங்
பின்வந்தவர் வீரபத்ர சிங்
பதவியில்
24 மார்ச்சு 1998  6 மார்ச்சு 2003
முன்னவர் வீரபத்ர சிங்
பின்வந்தவர் வீரபத்ர சிங்
தனிநபர் தகவல்
பிறப்பு 10 ஏப்ரல் 1944 (1944-04-10)
சமீர்பூர், அமீர்பூர் மாவட்டம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சீலா துமால்
பிள்ளைகள் இரு மகன்கள், அருண் & அனுராக்
பணி அரசியல்வாதி
தொழில் ஆசிரியர்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.