நான்காம் நெபுகத்நேசர்
நான்காம் நெபுகத்நேசர் (Nebuchadnezzar IV, /ˌnɛbjʊkədˈnɛzər/), கிமு 520), பாபிலோன் மன்னராகத் தம்மை அறிவித்துக் கொண்டவர்.[2] அரக்கா (Arakha) என்றும் இவரை அழைப்பர். ஆர்மீனியரான அரக்கா அல்தித்தா என்பவரின் மகன். ஆனாலும், இவர் தன்னை பாபிலோனின் முன்னாள் அரசர் நபோனிடசின் மகன் எனக் கூறிக் கொண்டு, தனது பெயரை நான்காம் நெபுகத்நேசர் என மாற்றிக் கொண்டார். பாரசீக மன்னர் முதலாம் தாரியசிற்கு எதிராக இவர் கிமு 522 இல் கிளர்ச்சியில் ஈடுபட்டார். கிமு 520-இல் தாரியசின் படைவீரரின் அம்பால் எய்தப்பட்டு நான்காம் நெபுகத்நேசர் கொல்லப்பட்டார்.

புது பாபிலோனியப் பேரரசர் நான்காம் நெபுகத்நேசர்[1]

நான்காம் நெபுகத்நேசரின் சிலை
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Nebuchadnezzar IV (Arakha), livius.org
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.