சமய சிறுபான்மையோருக்கும் மொழிச் சிறுபான்மையோருக்குமான தேசிய ஆணையம்
சமயம் மற்றும் மொழிச் சிறுபான்மையோருக்கான தேசிய ஆணையம் (National Commission for Religious and Linguistic Minorities), இந்தியாவில் சமயம் மற்றும் மொழிச் சிறுபான்மை மக்களின் பல்வேறு குறைகளைக் களைய, இந்திய அரசு, உச்ச நீதிமன்ற நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் 29 அக்டோபர் 2004 நாளில் நிறுவப்பட்டது [1] இவ்வாணையம் தனது பரிந்துரைகளை 21 மே 2007 அன்று இந்திய அரசுக்குஅனுப்பியது.[2]
பரிந்துரைகள்
- இசுலாமிய சிறுபான்மையினர்களுக்கு கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும் 10% இட ஒதுக்கீடும், மற்ற சமயத்து சிறுபான்மையினர்களுக்கு 5% இடஒதுக்கீடும் வழங்கலாம்<
- இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்க்கான 27% ஒதுக்கீட்டில், சமயம் மற்றும் மொழிச் சிறுபான்மையோர்களுக்கு 8.4% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
- இந்து சமயத்திலிருந்து இசுலாமிய மற்றும் கிறித்தவ சமயங்களுக்கு மதம் மாறிய தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Misra Commission Report Part-1
- Misra Commission Report Part-2
- TwoCircles.net publishes excerpts from the Misra Commission report
- BJP slams against Ranganath Mishra commission report
- India’s Downtrodden Muslims
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.