கிருஷ்ண சைதன்யா

கிருஷ்ண சைதன்யா பிறப்பில் கிருஷ்ணபிள்ளை கிருஷ்ணன்குட்டி நாயர் அல்லது கே. கே. நாயர் (நவம்பர் 24, 1918 - சூன் 5, 1994) என்பவர் மலையாள இலக்கியவாதி, மதிப்புரைஞர், இசையறிஞர், நிழற்படக்கலைஞர் ஆவார். கலை, இலக்கியம், மெய்யியல், கல்வி எனப் பலதுறைகளில் ஏறத்தாழ நாற்பது நூல்களை எழுதியுள்ளார்.

கிருஷ்ண சைதன்யா
பிறப்புதிருவனந்தபுரம், கேரளம்
தேசியம்இந்தியா
பணிகலைஞர், இலக்கியவாதி
சமயம்இந்து

வாழ்க்கைக்குறிப்பு

இவர் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். மலையாள இலக்கியத்தைப் பற்றி எ ஹிஸ்டரி ஆப் மலையாளம் லிற்றேச்சர் என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். ரூபலேகா என்ற மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[1]

ஆக்கங்கள்

  • யவனர் இலக்கிய வரலாறு
  • ரோமன் இலக்கிய வரலாறு
  • சமசுகிருத இலக்கிய வரலாறு
  • அரபி இலக்கிய வரலாறு உட்பட 8 இலக்கிய வரலாறுகள்
  • சமசுகிருதத்தில் இலக்கிய தத்துவ சிந்தனை
  • சாத்திரத்தினது விசுவாவலோகனம்

விருதுங்கள்

  • பத்மசிறீ
  • கேரள இலக்கிய அக்காடமி விருது
  • ஜவஹர்லால் நேரு பெலோஷிப்.

சான்றுகள்

  1. சம்சுகாரகேரளம் 8 (3): 94. ஜூலை - செப்டம்பர் 1994.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.