இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படைக் கடமைகள்
இந்திய அரசியலமைப்புச் சட்டம், அடிப்படைக்கடமைகள் என பின்வருவனவற்றை என, பகுதி 4 அ-இல் கூறுகிறது.இந்த அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி 1976-ம் ஆண்டில்தான் இந்திய அரசியலமைப்பில, இரசிய அரசியலமைப்பினைப் பார்த்து சேர்க்கப்பட்டது.
- தேசியக்கொடியையும்,தேசிய கீதத்தையும் மதித்து நடக்க வேண்டும்.
- எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதித்து பேண வேண்டும்.
- சுதந்திரத்திற்காகப் போராடிய நமது தலைவர்களை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும்.
- எல்லா குடிமக்களும் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நாட்டுக்காக தேவைப்படும் போது சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
- அனைவரும் சாதி,மத,மொழி,இன,எல்லை கடந்த சகோதர மனப்பான்மையை உருவாக்க வேண்டும்.
- நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காக்க வேண்டும்.
- காடுகள், நதிகள்,ஏரிகள் உள்ளிட்ட இயற்கையும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும்.
- அறிவியல்,மனிதாபிமானம்,சீர்திருத்த உணர்வுகளை வளர்க்க வேண்டும்.
- வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.
- குழந்தைகளின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ, தமது குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை 6-14 வயதுக்குள் தர வேண்டும்.
![]() இக்கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி: |
![]() |
முகப்புரை
பகுதிகள்
பின்னிணைப்புகள்
திருத்தங்கள்
|
மற்ற நாடுகள் · சட்டம் நுழைவு |
மேற்கோள்கள்
https://en.wikisource.org/wiki/Constitution_of_India/Part_IVA http://www.constitution.org/cons/india/p4a51a.html
http://lawmin.nic.in/olwing/coi/coi-english/Const.Pock%202Pg.Rom8Fsss(8).pdf
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.