அப்துல் ரசாக் உசேன்
அப்துல் ரசாக் உசேன் (Abdul Razak bin Hussein Al-Haj, மார்ச் 12, 1922 — ஜனவரி 14, 1976) என்பவர் மலேசியாவின் இரண்டாவது பிரதமர். 1970 லிருந்து 1976 வரை பிரதமர் பதவியை வகித்தவர். மலேசியாவின் மேம்பாட்டுத் தந்தை (Father of Development, மலாய்: Bapa Pembangunan) என்று பாராட்டப்படுகிறவர்.
துன் அப்துல் ரசாக் உசேன் Abdul Razak Hussein 阿卜杜勒·拉扎克 | |
---|---|
![]() | |
இரண்டாவது மலேசியப் பிரதமர் | |
பதவியில் 1970 செப்டம்பர் 22 – 1976 ஜனவரி 14 | |
அரசர் | யாஹ்யா பெத்ரா கிளாந்தான் அகமட் ஷா பகாங் |
துணை | துன் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் உசேன் ஓன் |
முன்னவர் | துங்கு அப்துல் ரகுமான் |
பின்வந்தவர் | உசேன் ஓன் |
மலேசியத் துணைப் பிரதமர் | |
பதவியில் 1957 ஆகஸ்ட் 31 – 1970 செப்டம்பர் 22 | |
பிரதமர் | துங்கு அப்துல் ரகுமான் |
பின்வந்தவர் | இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மார்ச்சு 11, 1922 பெக்கான், பகாங், மலாயா (இப்போது மலேசியா) |
இறப்பு | 14 சனவரி 1976 53) லண்டன், இங்கிலாந்து | (அகவை
அரசியல் கட்சி | தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு (1953–1976) தொழிலாளர் கட்சி (ஐக்கிய இராச்சியம்) |
வாழ்க்கை துணைவர்(கள்) | ரஹா நோ |
பிள்ளைகள் | 5 |
படித்த கல்வி நிறுவனங்கள் | மலாயா பல்கலைக்கழகம் லிங்கன்ஸ் இன் (சட்டத் துறை) |
தொழில் | வழக்குரைஞர் |
சமயம் | இஸ்லாம் |
இவர் பகாங் மாநில அரச நகரமான பெக்கான் நகரில், புலாவ் கெலாடி எனும் கிராமத்தில் 1922 பிப்ரவரி 12ஆம் தேதி பிறந்தவர். மலேசியாவில் வாழும் பல இன மக்களின் பொருளாதார, சமூகவியலைச் சமப்படுத்தும் வகையில் 1971ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கையை உருவாக்கியவர்.
புறநகர் வாழ்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், வறுமை நிலையை அகற்றுவதற்கும், 1974ஆம் ஆண்டு மலேசிய பச்சைப் புத்தகத் திட்டத்தைத் தொடங்கியவர். மலேசியாவில் பெல்டா, பெல்க்ரா திட்டங்களை அறிமுகப்படுத்தியவர். கிராமப்புறங்களிலும், உட்புறப் பகுதிகளிலும் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அயராது உழைத்த பிரதமர் என்று புகழப்படுகின்றார்.