அசோக வனம்

இராமயண காவியத்தின் படி, இராமரின் மனைவியான சீதையை இராவணன் கவர்ந்து சென்று, தற்கால இலங்கையில் அசோக மரங்கள் நிறைந்த தோட்டத்தில் சிறை வைத்த இடமே அசோக வனம் எனக் கருதப்படுகிறது.

அசோக வன சீதையை மிரட்டும் இராவணன். மரத்தின் மேல் அனுமன் (ஓவியம்)

அமைவிடம்

சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வனம் இலங்கையின் மலையகத்தில், நுவரெலியா மாவட்டத்தின் "சீதா எலிய" எனுமிடத்தில், நுவரெலியா நகரில் இருந்து 5 கி மீ தொலைவிலும், கக்கலை தாவரவியற் பூங்காவில் இருந்து 1 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1][2] தற்போது இவ்விடத்தில் சீதை அம்மன் கோவில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "WWW Virtual Library: Sita Eliya / Seetha Eliya / Sitha Eliya".
  2. "Amazing Sri Lanka : Nature : Seetha Amman Temple - Seetha Eliya".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.