மிகையுணர்வூக்கம்
மிகையுணர்வூக்கம் (Hypersensitivity) (மிகையுணர்வூக்க வினைகள் அல்லது சகிப்புத் தன்மையற்ற நிலை) என்பது இயல்பான நோயெதிர்ப்பு அமைப்பின் விரும்பத்தகாத வினைகளைக் குறிக்கும். உதாரணங்களாக, ஒவ்வாமை, தன்னெதிர்ப்பு வினைகளைக் கூறலாம். இவ்வினைகள் பாதிப்பை உண்டாக்கக்கூடிய, தொந்தரவான அல்லது சில நேரங்களில் மரணத்தைத் விளைவிக்கக் கூடியவையாக இருக்கலாம். ஓம்புயிரின் முன்னரே (நோயெதிர்ப்பு) உணர்வூட்டிய நிலை மிகையுணர்வூக்க வினைகள் நிகழத் தேவைப்படுகிறது. இவ்வினைகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது[1].
மிகையுணர்வூக்கம் | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | அவசர மருத்துவம், நோயெதிர்ப்பியல் |
ஐ.சி.டி.-10 | T78.4 |
ஐ.சி.டி.-9 | 995.3 |
நோய்களின் தரவுத்தளம் | 28827 |
MeSH | D006967 |
மேற்கோள்கள்
- Gell PGH, Coombs RRA, eds. Clinical Aspects of Immunology. 1st ed. Oxford, England: Blackwell; 1963.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.