பொற்றாமரைக்குளம்

பொற்றாமரைக்குளம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரையிலுள்ள மீனாட்சியம்மன் கோவிலில் உள்ளது. தொன்மையான (பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய) பழம்பெரும் நகரம் மதுரை. இக்குளம் செவ்வக வடிவில்,[1] 165 அடி (50 மீட்டர்) x 120 அடி (37 மீட்டர்) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. பொற்றாமரைக்குளம் என்ற சொல், பொன் + தாமரை + குளம் எனப் பொருள் தரும். இந்தக் குளத்திற்கு ஞான தீர்த்தம், முக்தி தீர்த்தம், உத்தம தீர்த்தம், ஆதி தீர்த்தம் போன்ற பெயர்களுமுண்டு[2]. இந்த பொற்றாமரைக் குளத்தின் வடக்குக் கரையில் உள்ள தூண்களில் சங்கப் புலவர்களின் உருவங்கள் உள்ளன. தென்கரை மண்டபச் சுவர்களில் திருக்குறள் பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச் சுவர்களில் திருவிளையாடல் புராணக் கதைகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன[3].

மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள பொற்றாமரைக்குளத்தின் மற்றொரு கோணம்

கும்பகோணம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரின் நடுவில் பொற்றாமரைக்குளம் என்ற பெயரில் ஒரு குளம் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "Meenakshi Sundareshwara Temple.". பார்த்த நாள் 2012-06-22.
  2. "Pottramarai Kulam (the Golden Lotus Pond).". பார்த்த நாள் 2012-06-22.
  3. "நாரைக்கு முக்தி கொடுத்த நான்மாடக்கூடல் நாயகன்.". பார்த்த நாள் 2012-06-22.

பிற இணைப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.