பிஎஸ்என்எல்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், (பிஎஸ்என்எல் , (BSNL) இந்திய தொடர்பாடல் கழக நிறுவனம் என அறியப்படுவது) இந்தியாவில் அரசுடமையான ஒரு தொலைத் தொடர்பு நிறுவனமாகும். 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாத புள்ளியியலின்படி, பிஎஸ்என்எல் மின்னணுத் தொலைபேசிச் சேவை வழங்குனர்களில் ஐந்தாவது மிகப்பெரும் நிறுவனமாக 57.22 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தது; மேலும் இந்தியாவின் மிகப் பெரும் நில இணைப்பு தொலைபேசி வழங்குனரும் இந்நிறுவனமேயாகும். இதன் தலைமையகம், புது தில்லியில், ஜன்பத் என்னுமிடத்தில், ஹரிஷ் சந்திர மாதுர் என்னும் தெருவில் அமைந்துள்ள பாரத் சஞ்சார் பவனில் உள்ளது.
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 19th century, incorporated 2000 |
தலைமையகம் | Bharat Sanchar Bhawan, Harish Chandra Mathur Lane, Janpath, New Delhi |
முக்கிய நபர்கள் | Kuldeep Goyal (Chairman) & (MD) |
தொழில்துறை | தொலைத்தொடர்புs |
உற்பத்திகள் | Wireless Telephone Internet Television |
வருமானம் | ![]() |
உரிமையாளர்கள் | The Government of India |
பணியாளர் | 357,000 – மார்ச்சு 31, 2009[2] |
இணையத்தளம் | Bsnl.co.in |
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறு நவரத்தின மதிப்பைப் பெற்ற நிறுவனம் ஆகும்.
பிஎஸ்என்எல், இந்தியாவின் பழமையான மற்றும் மிகப் பெரிய தொடர்பு சேவை நிறுவனமாகும் (சிஎஸ்பி). 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான விபரங்களின்படி, இதன் தற்போதைய வாடிக்கையாளர் தளம் 90 மில்லியன் ஆகும்.[3] எம்டிஎன்எல் போன்ற சேவை நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் மும்பை மற்றும் புது தில்லி போன்ற மாநகரங்களைத் தவிர இந்தியாவின் இதர பகுதிகள் அனைத்திலும் இது சேவையளிக்கிறது. 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 வரையிலான கணக்கீட்டின்படி, பிஎஸ்என்எல் 31.55 மில்லியன் கம்பியிணைப்பு, 4.58 மில்லியன் சிஎம்டிஏ-டபிள்யுஎல்எல் மற்றும் 54.21 மில்லியன் ஜிஎஸ்எம் கைத்தொலைபேசி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் பிஎஸ்என்எல்லின் வருமானம் 397.15 பில்லியனாகவும் (யுஎஸ்$7.03 பில்லியன்), அதன் நிகர இலாபம் 78.06 பில்லியனாகவும் (யுஎஸ்$ 1.90 பில்லியன்) இருந்தன. பிஎஸ்என்எல்லின் சந்தை மதிப்பு ஏறத்தாழ $100 பில்லியன் ஆகும்.
ஆறு மாதங்களில் பொதுப் பங்கு வழங்கீடல் ஒன்றினை மேற்கொண்டு, தனது மொத்தப் பங்குகளில் பத்து சதவிகிதத்தைப் பொதுப்பங்காக வழங்க இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இப்பங்கின் மதிப்பு ரூ. 300 முதல் 400 வரையிலுமாக இருந்து நிறுவனத்தின் மதிப்பை $100 பில்லியனுக்கு மேல் கொண்டு செல்லக்கூடும்.
சேவைகள்
இந்தியாவில் ஏறத்தாழ அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது. கீழ்க் காண்பவை பிஎஸ்என்எல் மூலம் வழங்கப்படும் முக்கியமான தொலைத் தொடர்பு சேவைகள் ஆகும்:
- அனைத்திற்கும் பொருந்துவதான தொலைத் தொடர்பு சேவைகள் : பிஃபோன் மற்றும் தரங் என்று அழைக்கப்படும் சிடிஎம்ஏ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிலையான கம்பி இணைப்பு சேவைகள் மற்றும் உள்ளக மையவிசையில் கம்பியில்லா (டபிள்யுஎல்எல்) இணைப்பு சேவைகள். 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையில், நிலையான இணைப்புகளில் பிஎஸ்என்எலின் சந்தைப்பங்கு 81%.
- மின்னணு கைத்தொலைபேசி சேவைகள் : ஜிஎஸ்எம் அடிப்படையைப் பயன்படுத்தி பிஎஸ்என்எல் அலைபேசி என்ற வர்த்தகப் பெயரின் கீழ் பெரும்பான்மையான மின்னணு கைத்தொலைபேசி சேவைகளை பிஎஸ்என்எல் வழங்குகிறது.[4] 2009 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரையிலான புள்ளிவிபரங்களின்படி, நாட்டிலுள்ள கைத்தொலைபேசிகளில் 12.45 சதவிகிதப் பங்கினை பிஎஸ்என்எல் கொண்டுள்ளது.[5]
- இணையதளம் : சுழற்றுத் தொடர்பு (சஞ்சார்நெட்), சேவையின் பயன்பாட்டிற்கு முன்பே பணம் செலுத்துதல், பயன்பாட்டிற்குப் பின்னர் பணம் செலுத்துதல் ஆகிய முறைமைகளிலும், (நெட்ஒன்) சேவையின் பயன்பாட்டிற்கு முன்பே பணம் செலுத்தும் முறைமையிலும் மற்றும் எடிஎஸ்எல் அகன்றஅலை வரிசை (பிஎஸ்என்எல் அகன்ற அலை வரிசை) ஆகியவற்றின் மூலமும் இணைய தளச் சேவைகளை பிஎஸ்என்எல் வழங்குகிறது. இந்தியாவில் அகன்ற அலை வரிசையில் பிஎஸ்என்எல் 50% சந்தைப் பங்கை கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் அகன்ற அலை வரிசையை மிகப் பெரும் அளவில் துவங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.
- அறிவார்ந்த வலையமைப்பு (Intelligent Network)(ஐஎன்) : தொலைபேசி மூலம் வாக்களித்தல், சுங்க வரியற்ற அழைப்பு, உயர் மதிப்பு அழைப்பு ஆகிய ஐஎன் சேவைகளை இதன் மூலம் பிஎஸ்என்எல் வழங்குகிறது.
- 3ஜி : '3ஜி' அல்லது 'மூன்றாவது தலைமுறை' என்பதன் கீழாக பிஎஸ்என்எல் வழங்கும் சேவைகளில், ஒளிக்காட்சி அழைப்பு போன்றவை அடங்கும்.
- ஐபிடிவி (IPTV): இணையதளம் மூலம் தொலைக்காட்சி காண்பதைச் சாத்தியமாக்கும் 'இணையதள வரை முறைத் தொலைக்காட்சி' வசதியையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது.
- எஃப்டிடிஹெச் (FTTH): தரவுகளின் இடமாற்ற பயன்பாட்டிற்காக, வீடு வரையிலான நாரிழை வசதியின் (Fibre To The Home facility) வழி, ஒரு உயர் அலைவரிசையையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது. இக்கருத்தானது 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முன் வைக்கப்பட்டது.
நிர்வாகப் பிரிவுகள்
கீழே குறிப்பிடப்பட்டவை போல, தொலைத் தொடர்பு வட்டங்கள், நாட்டின் முக்கியமான மாவட்டங்கள், செயல்முறைத் திட்ட வட்டங்கள் மற்றும் தனிச் சிறப்புப் பிரிவுகள் எனப் பல்வேறு நிர்வாகப் பிரிவுகளாக பிஎஸ்என்எல் பிரிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு மண்டலங்கள்
- ஜார்கண்ட் தொலைத் தொடர்பு வட்டம்
- கிழக்கு தொலைத்தொடர்பு பராமரிப்பு மண்டலம்
- கர்நாடகா தொலைத் தொடர்பு வட்டம்
- நாட்டின் முக்கியமான மாவட்டங்களின் தொலைத் தொடர்பு வட்டங்கள்
- சென்னை +91 9445233233
- அந்தமான் மற்றும் நிகோபார் தொலைத் தொடர்பு வட்டம்
- கொல்கத்தா
- ஆந்திர பிரதேசத் தொலைத் தொடர்பு வட்டம் சென்னை
- அஸ்ஸாம் தொலைத் தொடர்பு வட்டம்
செயல்முறைத் திட்ட வட்டங்கள்
- பீஹார் தொலைத் தொடர்பு வட்டம்
- கிழக்கு தொலைத் தொடர்பு செயல் முறைத் திட்ட வட்டம்
- சட்டிஸ்கர் தொலைத் தொடர்பு வட்டம்
- மேற்கு தொலைத் தொடர்பு செயல்முறைத் திட்ட வட்டம்
- குஜராத் தொலைத் தொடர்பு வட்டம்
- வடக்கு தொலைத் தொடர்பு செயல் முறைத்திட்ட வட்டம்
- ஹரியானா தொலைத் தொடர்பு வட்டம்
- தெற்கு தொலைத் தொடர்பு செயல்முறைத் திட்ட வட்டம்
- ஹிமாசல் பிரதேச தொலைத் தொடர்பு வட்டம்
- ஐடி செயல்முறைத் திட்ட வட்டம், பூனே
- ஜம்மு மற்றும் காஷ்மீர் தொலைத் தொடர்பு வட்டம்
பராமரிப்பு மண்டலங்கள்
- ஜார்கண்ட் தொலைத் தொடர்பு வட்டம்
- கிழக்கு தொலைத்தொடர்பு பராமரிப்பு மண்டலம்
- கர்நாடகா தொலைத் தொடர்பு வட்டம்
- மேற்கு தொலைத்தொடர்பு பராமரிப்பு மண்டலம்
- கேரள தொலைத் தொடர்பு வட்டம்
- வடக்கு தொலைத்தொடர்பு பராமரிப்பு மண்டலம்
- தெற்கு தொலைத் தொடர்பு பராமரிப்பு மண்டலம்
- மத்திய பிரதேச தொலைத் தொடர்பு வட்டம்
- தனிச்சிறப்பு தொலைத் தொடர்பு பிரிவுகள்
- மஹாராஷ்டிரா தொலைத்தொடர்பு வட்டம்
- வடகிழக்கு-I தொலைத் தொடர்பு வட்டம்
- தரவு வலையமைப்புகள்
- வட கிழக்கு-II தொலைத் தொடர்பு வட்டம்
- மின்னணு மின் பொருத்துதலுக்கான தேசிய மையம்
- தொழில்நுட்பம் மற்றும் விரிவாக்க வட்டம்
- ஒரிஸ்ஸா தொலைதொடர்பு வட்டம்
- பஞ்சாப் தொலைத் தொடர்பு வட்டம்
- தரக் காப்புறுதி
- ராஜஸ்தான் தொலைத் தொடர்பு வட்டம்
உற்பத்திப் பிரிவுகள்
- தொலைத் தொடர்புத் தொழிற்சாலை, மும்பை
- தொலைத் தொடர்புத் தொழிற்சாலை, ஜபல்பூர்
- தொலைத் தொடர்புத் தொழிற்சாலை, ரிச்சாய்
- தொலைத் தொடர்புத் தொழிற்சாலை, கொல்கத்தா
ஏனைய பிரிவுகள்
- பயிற்சி நிலையங்கள்
- தொலைத் தொடர்புக் கடைகள்
- மேல் நிலை தொலைத் தொடர்பு பயிற்சி மையம்
- வட கிழக்கு பணிக்குழு
- பாரத் ரத்னா பீம் ராவ் அம்பேத்கார் தொலைத் தொடர்பு பயிற்சி நிறுவனம்
- தொலைத் தொடர்பு மின்னியல் பிரிவு
- தொலைத் தொடர்பு நிதி மற்றும் நிர்வாகத்தின் தேசிய கல்வி நிறுவனம்
- தொலைத் தொடர்பு பொதுத்துறை பிரிவு
- மண்டல தொலைத் தொடர்பு பயிற்சி மையங்கள்
- வட்ட தொலைத் தொடர்பு பயிற்சி மையங்கள்
- மாவட்ட தொலைத் தொடர்பு பயிற்சி மையங்கள்
நிகழ்காலம் மற்றும் வருங்காலம்
இந்தியப் பொருளாதாரத்தின் பொதுவுடமைக் கால கட்டத்தில் பிஎஸ்என்எல் ஏறத்தாழ ஏகபோகத் தனி உரிமையாளராகத் திகழ்ந்து வந்தது. இந்தக் காலகட்டத்தில், நாட்டில் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் ஒரே நிறுவனமாக பிஎஸ்என்எல் விளங்கியது. (மும்பை மற்றும் புது தில்லியில் மட்டுமே எம்டிஎன்எல் தன் சேவைகளை வழங்கிக் கொண்டிருந்தது). அந்நாட்களில், திறமையற்று, செயற் குறைபாடுகளைக் கொண்டு, அதிகார மையங்கள் மிகுந்து மற்றும் அதிக அளவில் தொழிற்சங்கத்தின் ஆதிக்கத்தால் பாதிப்புற்ற அரசு நிறுவனமாக பிஎஸ்என்எல் இயங்கி வந்தது. இதன் விளைவாக, ஒரு தொலைபேசி இணைப்பைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் சுமார் ஐந்து வருட காலம் காத்திருக்க நேர்ந்தது.1991ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் தாராளமயமான பிறகு, இந்த நிறுவனம் முதன்முறையாகப் போட்டியைச் சந்தித்தது. தனியார் சேவை வழங்குனர்களுடனான தீவிரமான போட்டியைச் சந்தித்த பின்னர் பிஎஸ்என்எல் தனது ஆற்றலை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலானது.
இருப்பினும், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பரவலாக சரிநிகர் சமத்துவ வளர்ச்சியை அடைய, அரசு சேவை வழங்குனர்கள் ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும் என்னும் அரசின் கொள்கையே பிஎஸ்என்எல்லின் இத்தகைய தாழ் நிலைக்குக் காரணம் என தொலைத் தொடர்பு வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இருப்பினும், இக்கொள்கையைச் செயற்படுத்துவதில் (அச்சமயம் தொலைத் தொடர்புப் பிரிவு என்பதாக இருந்த) இந்நிறுவனம் மிகப் பெரும் தோல்வியுற்றது மற்றும் உலகிலேயே மிகவும் குறைவான அளவில் தொடர்பிணைப்புகள் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா நலிவுற்றிருந்தது. தொலைத் தொடர்புப் பிரிவு தனியார்மயமான பிறகு, 2000 ஆம் ஆண்டு பிஎஸ்என்எல் தோன்றியது. அதன் பிறகு இந்நிறுவனத்தின் ஆற்றல் முன்னேற்றமடைந்துள்ளது. இருப்பினும், தனியார் துறை நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இதன் செயலாற்றல் மிகவும் பின் தங்கியே உள்ளது.
இந்நிறுவனம் பெருமளவில் தொழிற்சங்கத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால், இதர நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், முடிவெடுத்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றில் இதன் செயற்பாடு மிகவும் தாமதமாகவே உள்ளது.
இந்நிறுவனம் குறைந்த கட்டணத்தில் தனது சேவைகளை வழங்கிடினும், தனியார் துறை நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் அனைத்துப் பகுதிகளிலும் தங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டி எல்லா பிரதேசங்களிலும் அதிக எண்ணிக்கையினாலான வாடிக்கையாளர்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். நகரம் மற்றும் கிராமப்புறம் ஆகிய இரண்டிலும் பிஎஸ்என்எல் இணைப்புகளை வழங்கி வருகிறது. இந்தியா முழுவதும் பல இடங்களிலும் முன்னதாகச் செயற்படுத்தப்பட்ட கைத்தொலைபேசி இணைப்புகள் கிடைக்கப்பெறுகின்றன. வீடுகளையும், சிறிய வணிக முனைவுகளையும் இலக்காகக் கொண்டு, மிகக் குறைந்த கட்டணத்தில் அகன்ற அலைவரிசை இணையதள அணுகுமுறை வழங்கும் திட்டங்களையும் பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது. தற்போது ஐஎஸ்பி சேவைகளில் சுமார் 60% சந்தைப் பங்கை பிஎஸ்என்எல் தன்னிடத்தே கொண்டுள்ளது.[6]
File:India Broadband.PNG|thumb|2007- அகன்ற அலைவரிசை ஆண்டு
2007ஆம் ஆண்டு "அகன்ற அலைவரிசையின் ஆண்டு" என இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2007ஆம் ஆண்டு இறுதிக்குள் ஐந்து மில்லியன் அகன்ற அலைவரிசை இணைப்புகளை வழங்கும் முயற்சியில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது. பிஎஸ்என்எல், ஏற்கனவே உள்ள டேட்டாஒன் (அகன்ற அலைவரிசை) இணைப்புகளின் வேகத்தை மேலும் இரண்டு மெகாபைட்/கள் வரை கட்டண உயர்வு ஏதுமின்றி அதிகரித்துள்ளது.
இந்த 2 மெகாபைட்/கள் அகன்ற அலைவரிசை சேவையானது ஒரு மாதத்திற்கு யுஎஸ்$ 11.7 என்ற கட்டணத்தில் பிஎஸ்என்எல்லால் வழங்கப்படுகிறது (2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 தேதி வரை இதற்கான மாத வரம்பு 2.5ஜிபியாகவும் இரவு 2.00 மணி முதல் காலை 8.00 மணி வரை கட்டணமற்றும் இருந்தது) மேலும், மும்மைச் செயற்பாடு போன்ற புதிய அகன்ற அலைவரிசை சேவைகளையும் பிஎஸ்என்எல் துவங்கியுள்ளது.
2010ஆம் ஆண்டில், தனது வாடிக்கையாளர் எண்ணிக்கையை 108 மில்லியனாக உயர்த்த பிஎஸ்என்எல் திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் தொலைத் தொடர்புப் பிரிவில் உள்ள தீவிரமான செயற்பாடுகளினால் இந்த இலக்கை அடைவது என்பது சாத்தியமான ஒன்றாகவே காணப்படுகிறது.
இந்தியாவில், கிராமப்புறங்களில் தொலைத் தொடர்பு வழங்குவதில் பிஎஸ்என்எல் முன்னோடியாக விளங்குகிறது. அண்மையில், இந்திய அரசாங்கத்தின் யுஎஸ்$ 580 மில்லியன் (ஐஎன்ஆர் 2,500 கோடிகள்) மதிப்புடைய கிராமப்புற தொலைத் தொடர்பு பணித் திட்டத்தில் 80 சதவிகிதத்தை பிஎஸ்என்எல் பெற்றுள்ளது.[7]
2009ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 20ஆம் தேதி, இந்தியாவில் உள்ள தனது அனைத்துத் தொலைத் தொடர்பு வட்டங்களிலும் ப்ளாக்பெர்ரி சேவைகளைத் தொடங்குவதாக பிஎஸ்என்எல் விளம்பரப்படுத்தியது. நாடு முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 3ஜி சேவைகளை இந்நிறுவனம் துவங்கியுள்ளது. அரசால் தனியார் துறை நிறுவனங்களுக்கு 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடும் பணியானது இன்னமும் தொடர்ந்து வருவதால், தற்போது பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றின் இயக்கர்கள் மட்டுமே 3ஜி சேவைகளை வழங்கி வருகின்றனர்.
பிஎஸ்என்எல் ஹங்காமா போர்ட்டல் என்றழைக்கப்படும் ஒரு பொழுதுபோக்கு நுழைவாயிலையும் பிஎஸ்என்எல் துவக்கியுள்ளது. இதன் மூலம் இசை, இலவச இசை ஒளிக்காட்சிகள் ஆகியவற்றை இணையத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். பல்வேறு விளையாட்டுகளைக் கணினியில் இறக்கிக் கொள்ளலாம் அல்லது நேரடிக் கணினி முறைமையில் விளையாடலாம். தற்போது தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. எதிர்காலத்தில், தரவுதளம் விரிவாக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தச் செயற்பாட்டிற்காக நிலையான மாதச் சந்தா கட்டணத்தை பிஎஸ்என்எல் வசூலிக்கிறது.
சவால்கள்
2006-2007 நிதியாண்டின் போது (2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை) பல்வேறான தொலைபேசி சேவைகளின் மூலம் 9.6 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் பெற்றுள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல்லின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 64.8 மில்லியனாக உயர்ந்துள்ளது. பிஎஸ்என்எல்லின் செயற்பாட்டிற்கு மிக நெருக்கமான போட்டியாளரான பாரதி ஏர்டெல் 39 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. அண்மைக் காலமாக, பிஎஸ்என்எல் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்திருப்பினும், அதன் நிலையான-இணைப்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது குறைந்து வருகிறது. தன் நிலையான-இணைப்பு வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, தொலைதூர அழைப்புக் கட்டணங்களை ஒரே இந்தியா திட்டம் (OneIndia plan) என்ற திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல் கொண்டுவந்துள்ளது. இருப்பினும், இத்திட்டத்தின் வெற்றி அறியப்படவில்லை. இருப்பினும், பயனீட்டாளர்கள் வெளியேற்றத்தினால், 2006-2007 ஆண்டில் மிகக் குறைந்த வருமானத்தையே பிஎஸ்என்எல் பெற்றது.[8]
தற்போது, இந்திய தொலைத் தொடர்புத் துறையில் தீவிரமான போட்டி நிலவுகிறது. மேலும் பல தொலைபேசி நிறுவனங்கள் மக்களின் மனதைக் கவரும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறந்த வாடிக்கையாளர் சேவைகளையும் வழங்குகின்றனர்.
நுழைவுப் பற்றாக்குறை கட்டணங்கள் (ஆக்சஸ் டெஃபிசிட் சார்ஜஸ்-ஏடிசி என்பது கிராமப்புறங்கள் போன்ற குறைந்த வருமானம் உள்ள இடங்களில் சேவைகளை வழங்குவதற்காக தனியார் துறை நிறுவனங்களால் பிஎஸ்என்எல்லுக்கு செலுத்தப்படும் வரிவிதிப்பு) 2007ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 1ஆம் தேதி முதல் டிஆர்ஏஐயால் 37 சதவிகிதம் குறைக்கப்பட்டது.[9] ஏடிசி கட்டணக் குறைப்பு பிஎஸ்என்எல்லின் நிகர இலாப நிலைகளைப் பாதிக்கக்கலாம்.
2009 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் இரண்டாம் தேதி நமது நாட்டின் 11 நகரங்களில் 3ஜி சேவைகளை பிஎஸ்என்எல் தொடங்கியது.மும்பை மற்றும் தில்லியில் இயங்கும் எம்டிஎன்எல் தான் இந்த நகரங்களில் முதலாவதாக 3ஜி சேவைகளைத் தொடங்கியது.[10]
இதனையும் காண்க
குறிப்புகள்
- "Financial Tables". BSNL Investor Relations. பார்த்த நாள் 2009-01-23.
- "Dealing with a double whammy" (May 13, 2006). பார்த்த நாள் 2009-10-15.
- இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பாக உருவாகிவரும் ஏர்டெல்.
- பிஎஸ்என்எல் கைத்தொலைபேசி
- http://www.trai.gov.in/WriteReadData/trai/upload/Reports/49/Report7jan10.pdf
- ரிலையன்ஸ் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்
- தி ஹிந்து செய்தி புதுப்பித்தல் சேவை
- பயனீட்டாளர்கள் வெளியேறுவதால் பிஎஸ்என்எல்லின் இருண்ட நிதி நிலை.
- டிஆர்ஏஐ, பற்றாக்குறைக் கட்டணங்களை 37% மற்றும் ஐஎல்டி அழைப்புக் கட்டணத்தை 20% குறைக்கிறது- தி வீக் தட் வாஸ்- தி சண்டே இடி-இடி ஃபீசர்ஸ்-தி எகனாமிக் டைம்ஸ்
- http://www.techshout.com/telecom/2009/02/bsnl-3g-services-launched-in-12-cities-in-india/