படே குலாம் அலி கான்

படே குலாம் அலி கான் (Bade Ghulam Ali Khan, தேவநாகரி:बड़े ग़ुलाम अली ख़ान, சாமுகி/உருது: بڑے غلام علی خان) (c. 2 ஏப்ரல் 1902 25 ஏப்ரல் 1968) பாட்டியாலா இசைப்பரம்பரையைச் சேர்ந்த இந்துசுத்தானி செவ்விசை பாடகர் ஆவார்.[1]

படே குலாம் அலி கான்
பிற பெயர்கள்சப்ரங்
பிறப்புஏப்ரல் 2, 1902
கசூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்புஏப்ரல் 25, 1968
ஐதராபாத்து
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
தொழில்(கள்)சாரங்கி கலைஞர், பாடகர்
இசைத்துறையில்1923–1967
வெளியீட்டு நிறுவனங்கள்எச்எம்வி, டைம்சு மியூசிக்

இளமையும் பின்னணியும்

கான் பிரித்தானிய இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தில் கசூர் என்னுமிடத்தில் பிறந்தார். பிரிவினைக்குப் பின்னர் கசூர் பாக்கித்தானில் உள்ளது.[2] இவரது தந்தை அலி பக்‌ஷ் கான், மேற்கு பஞ்சாபிய இசைக்குடும்பத்தில் பிறந்த புகழ்பெற்ற பாடகராவார்.

தமது ஐந்தாவது அகவையிலேயே தனது சித்தப்பா காலே கானிடமிருந்து சாரங்கி இசைக்கருவியை கற்கத் தொடங்கினார்.[3] பின்னர் மறுமணம் புரிந்திருந்த தனது தந்தையிடமிருந்து இசைப் பயிலத் தொடங்கினார். இவ்வாறு மூன்றாண்டுகள் கழிந்தன. இக்காலகட்டத்தில் கானூன் எனப்படும் இசைக்கருவியை சீரமைத்தார். 21ஆம் அகவையில் பெனாரசு நகருக்கு இடம் பெயர்ந்தார்; அங்கு ஈராபாய் என்னும் நடனக் கலைஞருக்கு சாரங்கி இசைத்தார். பொதுமக்கள் இவரது இசையை இரசிக்கத் தொடங்கினர்.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.